அப்பா மகன் Vs அப்பா மகன்

ராஜபாட்டை ரகசியம்!
Rajapattai Ragasiyam
Rajapattai Ragasiyam
Rajapattai Ragasiyam
Rajapattai Ragasiyam

ழக்கம்போல கல்கி அலுவலக வாசலில் இருந்த கல்கி உருவத்தை பார்த்து கைகூப்பி விட்டு, அருகே இருந்த கல்கி விநாயகர் சிலையை பார்த்து, ''வக்ரதுண்ட மஹாகாய, சூர்ய கோடி ஸமப்ரபம் ''னு சொல்லி கன்னத்துல போட்டுக்கிட்டேன்.

பின்னால் ஒரு கட்டையான குரல்.''வாத்யாரே!கப்புனு அத்தை வளிச்சு பிடிச்சுக்க அதை பத்திதான் நான் தகவலு கொண்டாந்திருக்கேன்'' என்றதும் திரும்பி பார்த்தால்,சீவர சிந்தாமணி. ''எத்தை கப்புனு பிடிக்க சொல்றே!பிள்ளையாரையா?''-குழப்பத்துடன் கேட்டேன். ''இப்ப இன்னாமோ...,கோழி பக் பக்னு  முணுமுணுத்துகிணு இருந்தியே! அத்தை கபால்-னு பிடி.!''

''எது வக்ர துண்ட''சொன்னேனே அதுவா? '' இல்ல,அதுக்கு பின்னாடி சூரியன்...கோடி அப்படினு சொன்ன இல்ல. அத்தை கப்புனு பிடி'' என்றவள்,ஆலோசனை அறையினுள் நுழைந்து, தானே ஏ.சியை ஆன் செய்தாள்.

இதையும் படியுங்கள்:
‘காலச்சக்கரம் நரசிம்மா’வின் ராஜபாட்டை ரகசியம்..!
Rajapattai Ragasiyam

''சூரிய கோடி ஸமப்ரபம்-னா என்ன தெரியுமா? ''அதெல்லாம் விட்டுத் தள்ளு! இப்ப நம்ம அமலாக்கம், சூரிய கட்சிக்கு பெரிய அளவுல வளைச்சு பிடிக்க போவதாம்.அந்த பெரியவர் கீறாரே! நாம் சிரிக்கறச்சே, அவரு அழுவாரூ.. நாம அழுவச்சே அவரு சிரிப்பாரே!

''யாரு துரைமுருகனா?

''அவரேதான்!அவரும்,அவர் மவனும் சேர்ந்து இரண்டு வருஷத்துல மண்ணை வித்து 60,000 கோடியை சம்பாரிச்சுட்டாங்கனு,சொல்றாங்க.இப்ப பிரிதா, எதுக்கு சூரிய கோடியை கப்புனு பிடிக்க சொன்னேன்னு? என்றால் சீவர சிந்தாமணி. ''இதை சொன்னது யாரு ? யாரு அமலாக்கமா? ''இல்லை! அவங்க கட்சி திமுக தகவல் தொடர்பு துணை செயலாளர்! அவர் பெயர் குடியாத்தம் குமரன்.

அவரு என் கிட்டே ஆதாரம் கீது. அமலாக்கத்தாண்டை கொடுப்பேன் அப்படினு வீடியோ விட்டிருக்காரு. அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்டு செஞ்சும்,வேலூர் அப்பா மகன் எதிரா வீடியோக்களை வெளியிடறாராம். வேடிக்கை தெரியுமா? இந்தாண்டை உன் தொன்னை காதை கொண்டா! என்றால் சீவர சிந்தாமணி. நான் காதை நீட்ட, அவள் காதில் கிசுகிசுத்தாள். 

Rajapattai Ragasiyam ஓவியம் பிள்ளை
Rajapattai Ragasiyam ஓவியம் பிள்ளை

கட்சி வட்டாரத்துல இன்னா பேசிக்கிறாங்க தெரியுமா! அப்பா பிள்ளைக்கு எதிரா,குடியாத்தத்தை கிளப்பி விட்டதே, அப்பா பிள்ளைதானாம்.குடியாத்தம் குமாரு திடீர்னு அப்பா,மகன் கிட்ட ரவுசு பண்றதுக்கு காரணமே, இன்னொரு அப்பா மகன்தானாம்'' என சீவர சிந்தாமணி சொன்ன அதேசமயம், ராஜதானி ராஜப்பா,வேகமாக உள்ளே வந்தார். 

''காலச்சக்கரம் அண்ணா! எனக்கு அர்ஜெண்டா தில்லிக்கு ஒரு வாஸ்து நிபுணர் வேணும்! உங்களுக்கு வாஸ்து தெரியும் இல்லே'' என்று தனது மோடி கோட்டில் இருந்து,பிளாஸ்டிக் கவரில் மடித்து வைக்கப்பட்டிருந்த, ஒரு பான் பீடாவை வாயில் அடக்கி கொண்டான். ''நான் ஆர்டினரி வாஸ்துதான் சொல்வேன். அர்ஜெண்ட் வாஸ்து-னா ஆளை தேடித்தான் பிடிக்கணும். வாஸ்து நிபுணர் யாருக்கு?

இதையும் படியுங்கள்:
செமி ஃபைனல் குழப்பங்கள்... ஃபைனல் கவலைகள்!
Rajapattai Ragasiyam

''வேற யார்! நம்ம அமித் ஷாவுக்குத்தான். 2018ல பாஜகா தலைமை அலுவலகத்துக்கு ஒரு புது கட்டடத்தை பார்த்து,அதுக்கு இடம் மாறினாங்க இல்ல.. ''ஆமாம்! நம்பர் 6 A  தீனதயாள் மார்க்ல பெரிசா இருக்குமே அந்த கட்டடம். நான் பார்த்திருக்கேன்!

''அந்த இடத்துல வாஸ்து பிரச்சனை இருக்குனு, அமித் ஷா நினைக்கிறாராம். அந்த இடத்துக்கு மாறினதுல இருந்து, தொடந்து எல்லா தேர்தலுலயும் தோல்விதானாம். இப்ப அடுத்த வருஷம் நாடாளுமன்ற தேர்தல் வர்றதால,அதுக்கு முன்னாடி, அந்த இடத்துக்கு வாஸ்து பரிகாரம் எல்லாம் செய்யணும்னு முடிவு கட்டி இருக்காங்களாம்'' என்று ராஜப்பா சொன்னான்.

Rajapattai Ragasiyam ஓவியம் பிள்ளை
Rajapattai Ragasiyam ஓவியம் பிள்ளை

''இன்னாப்பா அர்ஜென்ட்! அஞ்சு மாநிலத்துல எலக்ஷன் வருது இல்ல! அதுலயும் தோத்துட்டு, அப்புறமா நிதானமா வாஸ்து பரிகாரம் செய்யலாம் இல்லே'' என சிந்தாமணி சொல்ல, ராஜப்பா அவளை முறைத்தான். 

''உன் வேலை... மாநிலம்! நீ எதுக்கு, என்னோட தேசிய பிரச்னையில மூக்கை நீட்டறே? நீயும் உன் மெட்ராஸ் தமிழும்'' என ராஜப்பா சுள்ளென்று எரிந்து விழுந்தான். 

''யோவ் ராஜப்பா! ரீஜெண்டா ( டீசெண்டா ) பேச கத்துக்க! மெட்ராஸ் தமிழ்னா உனக்கு இன்னா அசால்ட்டா கீதா ?  குஷ்பு,சேரி பாஷைனு சொல்லி வாங்கி கட்டிகினது போதாதா ? '' என சிந்தாமணி சீறினாள். ''அவங்கதான், சேரி-னா பிரெஞ்சு பாஷையிலே அன்பான-னு அர்த்தம் னு விளக்கிட்டாங்களே''-ராஜப்பா முறைத்தான்.

'' இத பாருடா! அப்ப உன்னை கஸ்மாலம்னு சொல்லிட்டு,ஆப்பிரிக்கா மொழில அப்படினா, வணக்கம்னு சொல்லட்டா?'' என சிந்தாமணி முகம் சிவந்தது. 

''தேசியமும், திராவிடமும் உங்க சண்டையை நிறுத்தறீங்களா. சனிக்கிழமை வந்தாச்சு! நாளைக்கு கல்கி ஆன்லைனில் நம்மோட ராஜபாட்டை ரகசியம் இரண்டாவது வாரமா வெளிவருது, ஆளுக்கு ஒரு ரகசியத்தை சொல்லிட்டு, நடையை கட்டுங்க''

''இம்மாநேரம் சொன்னது எல்லாமே ரகசியம் இல்லியாக்கும்''- என்று முறைத்த சிந்தாமணி , சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, பாதியில் விட்டுபோன கிசுகிசுவைத் தொடர்ந்தாள்.

''ஏற்கனவே ரெண்டு அப்பா பிள்ளையை பற்றி விசயம் சொல்லிட்டேன். இதுவும் ஒரு அப்பா பிள்ளை விவகாரம்தான். வட மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, பொங்கல் டைம்ல அந்தத் மாஸ் நடிகர்  கட்சியை அறிவிக்கப் போறாராம்! அதுக்கு முன்னாடி அவங்க  அப்பா, கிறிஸ்தவ மதத்துல இருந்து தாய் மதத்துக்கு திரும்பிட்டேனு அறிவிச்சகீறாரு. அநேகமா, தாமரை கட்சியில அவர் சேர போறதா தகவல்” என்றாள்  சிந்தாமணி. 

”உம்ம ரகசியம் என்ன ?” - ராஜாப்பாவை கேட்டேன்.  ''சிந்தாமணி அப்பா-பிள்ளையை பற்றி சொன்னாள்! நான் அமமா பிள்ளையை பற்றி சொல்றேன்.1977ல இந்திராகாந்தியும், சஞ்சய் காந்தியும்,தேர்தலுல  தோல்வி அடைஞ்ச உடனே,  ஓய்.பி.சவான், பிரம்மானந்த ரெட்டி, வெங்கல ராவ், எல்லாரும் சேர்ந்து அம்மா பிள்ளையை ஓரங்கட்டின மாதிரி,

இப்ப, மல்லிகை பூவை சூடிகிட்ட  பார்த்தனை தூண்டி விட்டு, அம்மா பிள்ளையை ஓரங்கட்ட ஒரு முயற்சி நடக்குதாம்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

கட்சி உள்ளேயும், வெளியேயும், 2024ல  தன்னை பிரதமரா முன்னிறுத்துங்கனு, கேட்டு அந்த அர்ஜுனர் காய்களை நகர்த்திக்கிட்டு இருக்காராம்.  தேர்தலுக்கு முன்னாடி கட்சி உடைந்தால், ஆச்சரியம் இல்லை! 

அதனால், வரும் சட்டமன்ற தேர்தலுல இரண்டு மாநிலங்களையாவது, ஜெயிக்கணும்னு தீர்மானத்தோடு, அம்மா, பிள்ளை,பொண்ணு மூணு பெரும், தீயா வேலை செய்யறாங்களாம். தேர்தல் முடிவை பொறுத்துதான், அந்த கட்சி ஒற்றுமையா இருக்க போறதா, இல்லையானு தெரியும்!''- ராரா பீடாவை துப்ப  வெளியே செல்ல, சிந்தாமணியும், புறப்படுவதற்கு எழுந்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com