நாடகக் காவலர் ஆர். எஸ். மனோகர் நூற்றாண்டு விழா ! சென்னையில் கோலாகல கொண்டாட்டம்!

நாடகக் காவலர் ஆர் எஸ் மனோகர் நூற்றாண்டு விழா ! சென்னையில் கோலாகல கொண்டாட்டம்! கல்கி உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு விருதளித்து கௌரவம்!
R S Manohar Centenary Celebration
புகைப்படங்கள்; கல்கி கேலரி
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

ராளமான திரைப்படங்களில் கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றிருந்த போதிலும், தனது முத்திரை பதித்த புராண, இதிகாச நாடகங்கள் மூலம் தமிழ் நாடக உலகில் சரித்திரம் படைத்தவர் நாடகக் காவலர் ஆர். எஸ். மனோகர். அவரது நூற்றாண்டு விழா அண்மையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை மைலாப்பூர் ரசிக ரஞ்சனி சபா அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு பத்மபூஷன் விருது பெற்ற நல்லி குப்புசாமி தலைமை வகித்தார்.

டாக்டர் பத்மா சுப்ரமணியம், மெடிமிக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.வி அனூப் ஆகியோருடன் குமாரி சச்சு, நடிகர்கள் நாசர், கார்த்தி ஆகிய திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். ரசிக ரஞ்சனி சபாவும், டாக்டர் சிவ பிரசாத்தின் நாடகக் காவலர்-செம்மல் அடுத்த தலைமுறை நாடகக் குழுவும், எஸ். சுருதியின் நாட்டிய, நாத, நாடக சங்கமம் அமைப்பும் இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஆர்.எஸ்.மனோகருக்கு ஆறு நாடகங்கள் எழுதிய நாடக ஆசிரியர் கே.பி.அறிவானந்தம் நிகழ்ச்சியில் பங்கேற்று மனோகரது சாதனைகளை எடுத்துரைத்தார். ஆர்.ஆர்.சபாவின் இயக்குனர் ஆர். நாகராஜன், மனோகரின் நாடக, சினிமா வாழ்க்கையில் இருந்து பல அரிய தகவல்களையும், அனுபவங்களையும் நினைவு கூர்ந்தார்.

ஆர்.எஸ். மனோகரின் இயற்பெயர் லட்சுமி நாராயணன். அவருக்கு படிக்கும் காலத்திலேயே நடிப்பார்வம் இருந்தது. அதனால் பள்ளி, கல்லூரி நாட்களிலேயே தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில நாடகங்களில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார்.

எம்.ஜி.ஆர். உடன் மனோகர்
எம்.ஜி.ஆர். உடன் மனோகர்

முழு நேர நடிகராவதற்கு முன்பாக ராணுவத்திலும், தபால் துறையிலும் சிறிது காலம் பணியாற்றினார். மேடையில் ஆரம்ப நாட்களில் சமூக நாடகங்கள் போட்டாலும், பின்னர் புராண, இதிகாச, வரலாற்று நாடகங்கள் மூலமாக நாடக உலகத்தில் முத்திரை பதித்தார். இவர் நடித்த ராஜாம்பாள் என்ற நாடகம்தான் இவருக்கு சினிமா வாய்ப்பினைப் பெற்றுத்தந்தது.

இதையும் படியுங்கள்:
தேசிய மருத்துவர்கள் தினம் - மருத்துவர்களின் நலனுக்காக பிரார்த்திப்போம்!
R S Manohar Centenary Celebration

நவாப் ராஜமாணிக்கம் போன்ற ஜாம்பவான்களது புராண, சரித்திர நாடகங்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த மகத்தான வரவேற்பு, அமெச்சூர் நாடகக் குழுக்களின் சமூக, நகைச்சுவை நாடகங்களின் வரவால் பாதிக்கப்பட்ட கால கட்டத்தில் மீண்டும் புராண, இதிகாச, வரலாற்று நாடகங்களை மேடையேற்றி, மக்களின் கவனத்தை ஈர்த்தவர் மனோகர். இவரது நாடகங்களில் இடம்பெற்ற தந்திரக் காட்சிகள் மக்களை பெரிதும் வியக்கவைத்தன.

இவரது இலங்கேஸ்வரன் என்ற ராவணன் குறித்த நாடகத்தில், சீதை ராவணனின் மகள் என்பதுபோல கதை அமைந்திருந்ததால் அதற்கு எதிர்ப்பு உருவானது. ஆர்.எஸ்.மனோகர் பரமாச்சாரியாரை சந்தித்து இந்த விஷயம் குறித்து ஆலோசனை செய்தார். அப்போது பரமாச்சாரியார், "இந்தியாவின் பல பகுதிகளிலும் பல்வேறு வகையான ராமாயணங்கள் உண்டு. அப்படி ஒரு ராமாயணத்தில் சீதை, ராவணனின் மகள் என்பதாக வருகிறது” என்று சொல்லி, மனோகரை ஆசிர்வதிக்க, அதன் பின் அந்த நாடகம் சக்கை போடு போட்டது.

சிறப்பு நினைவு பரிசு
புகைப்படங்கள்; ஸ்ரீஹரி

மேடையில் சாதனைகள் பல புரிந்தாலும், மனோகர் பல சோதனைகளையும் கடந்து வந்தவர். ஒரு முறை சிங்கப்பூரில் நாடகம் போடுவதற்கு அழைப்பு வந்தது. இவரும் சிங்கப்பூருக்கு தனது பெரிய குழு மற்றும் பிரம்மாண்டமான செட்களோடு போய் இறங்கினார். இவரது நாடகங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.

ஆனால், அங்கே நாடகம் போட ஏற்பாடு செய்தவர் பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். அது மட்டுமில்லாமல், மனோகர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், அவரது ஆறு லாரி அளவு நாடக செட்களை கப்பலில் ஏற்றி சென்னைக்கு அனுப்பிவிட்டார். மனோகர் ஏழு லட்சம் ரூபாய் கடன் வாங்கி, கட்டணம் செலுத்தி அந்த செட்களை டெலிவரி எடுத்துக் கொள்ளும்படி ஆகிவிட்டது. இது மனோகருக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்:
Interview: "நல்லா உழைக்கணும்; தொழிலை நேசிக்கணும்" - வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சந்திப்போமா...
R S Manohar Centenary Celebration

மனோகர் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அவரது பல்வேறு நாடகங்களின் காட்சிகளை திரையிலும், நேரிடையாக நடித்தும் காட்டினார் சிவபிரசாத். அவரது மகள் சுருதியின் நாடகக் காட்சிகளும் இடம்பெற்றன.

மனோகரது நாடகங்களுக்கு ஆதரவளித்து, ஊக்கமூட்டிய கல்கி உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளுக்கும் நூற்றாண்டு விழா சிறப்பு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

logo
Kalki Online
kalkionline.com