தொடர்கதை: கோட்டவூடு - அத்தியாயம் 3

Kottavoodu | கோட்டவூடு
Kottavoodu | கோட்டவூடுImg Credit: ChatGPT
ஜி. சியாமளா கோபு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் 36 வருடங்கள் சமூக செவிலியாக பணி ஓய்விற்குப் பிறகு இப்போது முழு நேர எழுத்தாளர். சிறந்த சுகாதாரப் பார்வையாளர் என “NATIONAL FLORENCE NIGHTINGALE AWARD 2016 “PRESIDENT OF INDIA” SHRI PRANAB MUKERJEE அவர்கள் கையால் விருது பெற்ற மகத்தான அனுபவம். மாண்பிமிகு அய்யா மறைந்த திரு.அருணோதயம் அருணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளர் என்பதில் பேருவகையும் பெருமகிழ்ச்சியும் கொள்கிறேன். அநேக சிறுகதைகள் வல்லினம், திண்ணை, பதாகை, குட் புக், My vikatan ல், Amazon kindle, Pustaka, கல்கி ஆன்லைன் வெளிவந்திருக்கிறது. 15 நாவல்கள் அருணோதயம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பல சிறுகதைகள் பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளன. அது போக என் பணிக்காலத்தில் களப்பணியில் ஆராய்ச்சி செய்து மூன்று பதிப்புகளை இந்திய நர்சிங் ஜர்னலில் வெளியிட்டவள்.

Updated on
Kalki Strip
Kalki Strip

கோட்டவூடு - அத்தியாயம் 3

“விடிஞ்சா தீபாவளி. காலங்காலையில என்னை குளிக்க வைப்பியாம்மா. புது உடுப்பு போட்டுக்கணும்”னு சொல்லிட்டுப் படுத்தேன். இருட்டுப் பிரியறத்துக்கு முன்னமே என்னை எழுப்பி தலையில எண்ணை வெச்சி, பல்லுத் தேய்க்க கையில புருஷ்சை குடுத்து படிக்கட்டுல உக்கார வெச்சிட்டு வென்னியடுப்பைப் பத்த வைக்கப் போச்சு அம்மா.

தீக்குச்சியை உரசி அடுப்புலருந்த விறகு மேலே போட்டதுதான் தெரியும். படால்ன்னு நெருப்பு அப்படியே அம்மா மேலே பாய்ஞ்சது. அம்மா மண்ணுல விழுந்து உருளுது. ஊஹூம். தீ வானமுட்டும் வரை திருவண்ணாமலை தீபமா எரியுது. அதுக்குள்ள ‘அம்மா அம்மா’ன்னு கதறிட்டுக் கிட்டப் போனேன். “கிட்ட வராதே. இங்கே நிக்காம எங்கேயாவது ஓடு..ஓடு..ஓடு”ன்னு கூவிட்டே அம்மா எரிஞ்சிட்டு இருந்தது.

அதுக்கு மேல நான் ஏன் அங்கே நிக்கப் போறேன்? ஒரே ஓட்டமா ஓடினேன். குளத்தைத் தாண்டி, கோயிலைத் தாண்டி, பள்ளிக்கூடத்தைத் தாண்டி சின்ன ஆஸ்பத்திரியைத் தாண்டி, காட்டாத்தைத் தாண்டி ஓடினேன். இருள் பிரியாத அந்த விடியகாலையில ஏர்கலப்பையும் மாட்டையும் பிடிச்சிட்டு வயலுக்குப் போயிட்டிருந்த மருதையன் மேலே போய் விழுந்தேன்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com