

அழுக்குப் பிள்ளயாரின் தரிசனம் ஆன்மீக அன்பர்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க, நாளுக்கு நாள் கூட்டம் அலை மோதியது. நீண்ட க்யூ ஒரு கிலோமீட்டர் வரை நீண்டாலும் பக்தர்கள் பொறுமையாய் இருந்து தரிசித்தனர். அரசாங்கமும் நல்ல தார் ரோடு போட்டு, சில முக்கிய டெர்மினஸ்களில் இருந்து கோவிலுக்கு பஸ் விட்டது. அதில் அ.பி. ஸ்பெஷல் என போர்டு இருக்கும். எண் 1008 சீரீஸ். பாஸ்கர் கோவில் நிர்வாகத்துக்கு சில நேர்மையான ஆன்மீக அன்பர்களை நியமித்து பராமரித்தான். நாட்டில் ஒரு நல்லது நடந்து கொண்டிருந்தால் சில வக்கிர புத்திக்காரர்களுக்குப் பொறுக்காது அல்லவா. அது போல்தான் அனல் அரசுக்கும் பற்றிக் கொண்டு வந்தது.
யார் இந்த அனல் அரசு?