(மினி) சிறுகதை: பார்வை ஒன்றே போதுமே..!

Two men talking
Two men talking
வளர்கவி

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர: வளர்கவி கோவை கவிஞர் இதுவரை 6 நூல்கள் பதிப்பித்தவர். சிறுவர்க்கான படைப்பிலக்கியத்தில் குழந்தைகளுக்கான கதைப்பாடல்கள் எழுதிவருபவர். பட்டி மன்றப் பேச்சாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், அகில இந்தியவானொலி கோவையில் 18 ஆண்டுகள் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சமூக அறிவியல் பட்டதாரி ஆசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தினமலர் கவிதைச்சோலைப்பகுதியில் அதிக படைப்புகள் வெளியிட்டவர். சிறுவர் மணி நெய்வேலி, மாலை முரசு கோவை, பாரதி இலக்கிய அமைப்பு சென்னை, நடத்திய கவிதைப் போட்டிகளில் முதற்பரிசு வென்றவர்.

Updated on

வீட்டுக்குள்ளே வந்த விக்னேஷ் "என்ன ஒரு மாதிரி சோகமா உக்காதிருக்கீங்க?! எதாவது பிரச்சனையா?! என்னால உதவமுடியும்னா எதாவது செய்யறேன். சொல்லுங்க! நீங்க இப்படி இருந்து பார்த்ததில்லையே?!"என்றார் ஆதரவாக.

'இப்படி அடுத்தவனுக்காக அக்கறைகாட்டற ஒரு ஜென்மம் துணைக்கு இருந்தா, இருக்குன்னா ஒராயிரம் ஜென்மம் எடுக்கலாம் இந்த உலகத்துல!’ மனசுக்குள் நினைத்துக் கொண்டார் மாதவன்.

நிமிர்ந்து உட்கார்ந்து விக்னேஷ்வரனையும் எதிரில் அமரச் சொல்லிவிட்டு, "ஒண்ணுமில்லை, இந்த மனுஷ வாழ்க்கையை நினைத்தாத்தான் மலைப்பா இருக்கு? என்ன வாழ்ந்திருக்கோம்? என்ன பண்ணப் போறோம்?! என்று ஒரே கவலையாவும் பயமாவும் இருக்கு!" என்றார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com