நகப்பூச்சு மற்றும் உதட்டுச்சாயம் தயாரிப்பில் 'பைதாகி' மிளகாய்க்கு என்ன வேலை?

Nail Polish, Lipstick
Nail Polish, Lipstick
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

கர்நாடக மாநிலத்தில் பிரபலமாக விளங்கும் ஒரு வகை மிளகாயின் பெயர் பைதாகி மிளகாய் (Byadgi chilli). கர்நாடகாவின் ஆவேரி மாவட்டத்தில் அமைந்துள்ள பைதாகி நகரத்தின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அனைத்து மிளகாய் வகைகளிலும் பைதாகி மிளகாயின் வணிகமானது இரண்டாவது இடத்திலிருக்கிறது. மிளகாயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு எண்ணெயிலிருந்து கிடைக்கும் ஓலியோரெஸினைக் கொண்டு நகப்பூச்சு மற்றும் உதட்டுச் சாயம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. பைதாகி மிளகாய் அதன் ஆழ்ந்த சிவப்பு நிறத்திற்காகவும், குறைந்தளவு காரத்திற்காகவும் தென்னிந்தியாவின் பல உணவுத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

பைதாகி மிளகாய் தப்பி மற்றும் காட்டி என்ற இரண்டு வகைகளில் விளைகிறது:

பைதாகி தப்பி, இது சிறிய மற்றும் தடிமனானது; அதன் நிறம், மற்றும் சுவைக்கு மிகவும் புகழ் பெற்றதாக உள்ளது. இதில் அதிக விதைகள் இருந்தாலும், காட்டி வகைகளுடன் ஒப்பிடும் போது குறைவான காரத்தை அளிக்கும். மசாலா தயாரித்தல் மற்றும் ஓலோரெஸினைப் பிரித்தெடுத்தல் ஆகியவற்றிற்கு இந்த வகை சிறந்தது. பல புகழ் பெற்ற உணவு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு இந்த வகைகளை விரும்புகின்றன. ஒப்பனைப் பொருட்கள் மத்தியில், இது முக்கியமாக நகப்பூச்சு மற்றும் உதட்டுச்சாயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸுக்கும் மஹா கும்பமேளாவுக்கும் என்ன சம்பந்தம்?
Nail Polish, Lipstick

காட்டி வகை கரடு முரடான, மெலிந்த, நீண்ட மற்றும் குறைவான விதைகள் கொண்டது. பைதாகி மிளகாய்க்கு 2011 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் புவியியல் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.

பிசிபேளாபாத், சாம்பார், சட்னி மற்றும் தென்னிந்தியாவின் மற்ற உணவுப் பொருட்கள் போன்ற மசாலாத் தயாரிப்புகளில் பைதாகி மிளகாய் முக்கியமான ஒரு பொருளாக உள்ளது. இது உடுப்பி சமையல் வகைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இறைச்சி தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது, ஏனென்றால், அது இறைச்சிக்கு பிரகாசிக்கும் சிவப்பு வண்ணம் தருகிறது. உணவுப் பொருட்கள், மசாலாப் பொருட்களைத் தயாரிக்கும் உற்பத்தியாளர்களிடம் இந்த வகை மிளகாய்த் தூளினை, விற்பனை செய்வதில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் ஜாக்கிரதை! அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தல்!
Nail Polish, Lipstick

மிளகாய் காய்களை 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பதால், ஒலோரிஸின் பிரித்தெடுக்கும் பணிக்காக பைதாகியில் குளிர் சேமிப்பு கிடங்கு உருவாக வழிவகுத்தது. குளிர் சேமிப்புக் கிடங்குகளில் சேமிப்பதன் மூலம், 30 முதல் 40 சதவிகிதம் ஒலோரிஸின் அளவு அதிகரிக்கிறது. 1 டன் பைதாகி மிளகாயிலிருந்து ஒல்லோரிஸின் சுமார் 50 லிட்டர் எடுக்கலாம். ஒல்லோரிஸின் பிரித்தெடுக்கப்படுவதில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த ஒல்லோரிஸின் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு, அங்கு மேலும் சுத்திகரிக்கப்பட்டு, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com