தொழில் மயமாகிக் கொண்டிருக்கும் யோகப் பயிற்சிகள்!?

Yoga
Yoga
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

நம் இந்திய நாட்டில் தோன்றிய உடல் நலம் காக்கும் யோகக் கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில், ஆண்டுதோறும் ஏதாவதொரு நாளை பன்னாட்டு யோகா நாளாக அறிவித்து கொண்டாட வேண்டும் என்று நம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐநா பொதுச்சபையில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாளன்று வலியுறுத்தி உரையாற்றினார். அதன் பிறகு,193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஜூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று நிறைவேற்றியது. அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முதல்ஜூன் 21 ஆம் நாள் பன்னாட்டு யோகா நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜூன் 21 ஆம் நாள் பன்னாட்டு யோகா நாளாக அறிவிக்கப்பட்ட பின்பு, உலகம் முழுவதும் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதும், வேகமாக வளர்ந்து வரும் உடல் நலத்திற்கான நடைமுறைகளில் ஒன்றாக யோகா மாறியிருக்கிறது என்பதும் உண்மைதான்.

அண்மையில் எடுக்கப்பெற்ற ஒரு கணக்கெடுப்பின்படி,

  • உலக அளவில் சுமார் 300 மில்லியன் மக்கள் தொடர்ந்து யோகா பயிற்சி செய்கின்றனர்.

  • அமெரிக்கர்களில் 36 மில்லியன் பேர் யோகா பயிற்சியைச் செய்கின்றனர்.

  • கடந்த எட்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் யோகா பயிற்சியாளர்களின் எண்ணிக்கை 50% அளவில் அதிகரித்திருக்கிறது.

  • யோகா பயிற்சி செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 150% எனும் அளவில் அதிகரித்திருக்கிறது.

இதே போன்று, யோகா பயிற்சியாளர்கள், யோகா பயிற்சி பெறுபவர்களிடம் பயிற்சி குறித்துக் கேட்டறிந்தனர். அப்போது,

  • 86% பேர் மன அழுத்தத்தைக் குறைப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

  • 69% பேர் மனோபாவம் மற்றும் மனநிலையில் நேர்மறையான எண்ணம் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

  • 63% பேர் யோகா அவர்களை மனதளவில் அதிக உடற்பயிற்சி செய்யத் தூண்டுவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

  • 59% பேர் நல்ல முறையில் தூங்க முடிகிறது என்றும் தூக்கத்தின் நேரம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

  • 28% பேர் மனச்சோர்வு அறிகுறிகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

  • 79% பேர் தங்கள் சமூகத்துடன் நெருக்கமாக இருப்பதாகவும், சமூகத்துடன் சேர்ந்திருக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நல்ல விஷயங்கள் எல்லாம் ஒரு புறம் இருக்க, 'யோகா' என்பது இன்று தொழில் மயமாகிவிட்டது என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியதாய் தான் இருக்கிறது!

இதையும் படியுங்கள்:
யோகா - ஆரோக்கியத்தின் திறவுகோல்!
Yoga

சந்தைப்படுத்தல் - சில புள்ளி விவரங்கள்:

ஜூன் 21 அன்று பன்னாட்டு யோகா நாளாக அறிவிக்கப்பட்ட பின்பு, யோகா தொழில் மயமாகிவிட்டது. யோகா பயிற்சி, யோகா பயிற்சிப் பொருட்கள், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் என்று புதிய சந்தை ஒன்று ஏற்பட்டுவிட்டது.

  • யோகப்பயிற்சி மேற்கொள்பவர்கள் பல்வேறு பொருட்களை வாங்க முடியும். எடுத்துக்காட்டாக, 'யோகா' என்ற வார்த்தைக்காக அமேசானில் தேடினால், ஆடைகள் முதல் வீடியோ படிப்புகள், யோகா பாய்கள் மற்றும் மிக அடிப்படையான அறிவுறுத்தல், கையேடுகள் வரை ஏராளமான பொருட்களைக் காண முடியும்.

  • யோகா துறையின் மதிப்பு சுமார் 88 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டளவில், யோகா தொழில் 215 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, யோகா தரவுகளின்படி, அமெரிக்க யோகா சந்தை ஒவ்வொரு ஆண்டும் 9.8% வேகத்தில் வளர்ந்து வருகிறதாம்.

  • யோகா பயிற்சிக்கான பாய்கள் நடைமுறையில் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் தேவை. இதன் விளைவாக, யோகா பாய்களுக்கான சந்தை 2020 இல் $ 1.4 பில்லியனில் இருந்து 2026 க்குள் $ 2.6 பில்லியனாக விரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  • மிகவும் பிரபலமான யோகா ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லுலுலெமன் Lululemon, 2017 மற்றும் 2018 க்கு இடையில் $929 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் இது ஒரே ஆண்டில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

  • இந்த ஆடை தயாரிப்பு தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது என்ற போதிலும், யோகா ஆடை தயாரிப்பில் அத்லெட்டா மற்றும் ஃபேப்லெடிக்ஸ் போன்ற மற்ற வலுவான போட்டியாளர்களும் தங்களது தயாரிப்பைச் சந்தைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

  • இந்திய சந்தையில் யோகா விற்பனை மற்றும் பாகங்கள் பிரிவில் அடிடாஸ் நிறுவனத்திற்கு 30 சதவீதம் லாபம் அதிகரித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com