சகுந்தலா பகத்: வெறும் 4 மாதங்களில் மலைப்பாதையில் பாலம் அமைத்த இந்தியாவின் முதல் பெண் இன்ஜினியர்!

கனரக இயந்திரங்கள் இன்றி மலைப்பாதைகளில் இரும்புப் பாலங்களை அமைத்து சாதனை படைத்த சகுந்தலா பகத் வரலாறு.
சகுந்தலா பகத் | Shakuntala Bhagat
சகுந்தலா பகத் | Shakuntala Bhagat AI Image
Updated on
MM strip
MM strip

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய காலத்தில் தடைகளை உடைத்து எறிந்து, நாட்டின் எல்லைப் பகுதிகளில் 69-க்கும் மேற்பட்ட பாலங்களை உருவாக்கிய இந்த அசாத்தியப் பெண்மணியின் உத்வேகம் நிறைந்த முழுவரலாற்றை வாசிக்கத் தொடர்ந்து கீழே படியுங்கள்!

1972-இல் சீறிப்பாயும் பனிநதி ஒன்று தனிமைப்படுத்தப்பட்ட ஸ்பிட்டி பள்ளத்தாக்கை வெட்டிச் செல்கிறது. நிலச்சரிவால் மலையே சரிந்து விழுந்ததில், உள்ளூர் கிராம மக்கள் வெளிப்புற உலகத் தொடர்பை இழந்து முற்றிலும் முடங்கிப் போயிருக்கிறார்கள். செங்குத்தான, அபாயகரமான பாறைப் பாதைகளில் கனரக இயந்திரங்களைக் கொண்டு வர பல ஆண்டுகள் ஆகும் என்பதால், பாரம்பரிய முறையில் கான்கிரீட் அல்லது இரும்புப் பாலம் அமைப்பது சாத்தியமில்லை என்று ராணுவம் கைவிரித்துவிட்டது

அப்போது, உறைந்த களிமண் தரையில் ஒரு இளம் பெண் தன் தலைக்கவசத்தை (Hard Hat) அணிந்துகொண்டு, கையில் சுருட்டப்பட்ட நீலப் வரைபடங்களுடன் (Blueprints) இறங்குகிறார்.

அவரிடம் புல்டோசர்கள் இல்லை; பிரம்மாண்ட கிரேன் (Crane) இயந்திரங்களும் இல்லை. அதற்குப் பதிலாக, பெரியவர்களுக்கான 'லெகோ' (Lego) விளையாட்டு செட் போல, சிறிய மற்றும் எடைகுறைந்த எஃகுப் பாகங்கள் நிரப்பப்பட்ட லாரிகளுடன் வருகிறார்.

கனரக இயந்திரங்கள் எதுவுமே இல்லாமல், வெறும் 4 மாதங்களில், அவரது குழுவினர் அந்தப் பள்ளத்தாக்கின் குறுக்கே கைகளாலேயே ஒன்றுசேர்த்து ஒரு வலுவான எஃகுப் பாலத்தைக் கட்டி முடிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சஹாரா பாலைவனம் இல்லையென்றால் அமேசான் காடுகள் இருக்காதா? வியக்க வைக்கும் உண்மை!
சகுந்தலா பகத் | Shakuntala Bhagat

அவரது பெயர் சகுந்தலா பகத் (Shakuntala Bhagat). சிவில் பொறியியல் துறையின் விதிகளையே அவர் முற்றிலும் மாற்றியமைத்துக் கொண்டிருந்தார்.

1933-இல் பிறந்த சகுந்தலா, "இந்தியப் பாலம் பொறியியலின் தந்தை" என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற எஸ். பி. ஜோஷியின் மகளாவார். 1940-களில் பிற பெண்கள் வழக்கமான அமைதியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க எதிர்பாக்கப்பட்டபோது, சிறுமி சகுந்தலாவோ பாலங்களின் வரைபடங்களிலும், அழுத்தக் கணக்கீடுகளிலுமே நேரத்தைக் கழித்தார்.

1949-இல், பம்பாயில் உள்ள VJTI கல்லூரியின் வகுப்பறைக்குள் அவர் காலடி எடுத்து வைத்தபோது, அந்த விரிவுரை அரங்கம் முற்றிலும் அமைதியானது. வகுப்பறையில் இருந்த ஒரே பெண்ணான அவரைப் பார்த்து அங்கிருந்த ஆண் மாணவர்கள் வியப்புடன் திரும்பினர். 1953-இல், தனது 20-வது வயதில், இந்தியாவின் முதல் பெண் சிவில் பொறியாளர் என்ற வரலாற்றுச் சாதனையோடு பட்டப்படிப்பை முடித்து வெளியேறினார்.

அதன்பின் அமெரிக்கா சென்று, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் (Penn) கட்டமைப்புப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்; ஜெர்மனி மற்றும் இங்கிலாந்திலும் தொழிற்பயிற்சிகளைப் பெற்றார்.

​1960-களில் இந்தியா திரும்பிய அவர், ஐ.ஐ.டி பம்பாயில் (IIT Bombay) உதவிப் பேராசிரியராகச் சேர்ந்து, 'கனரக கட்டமைப்புகள் ஆய்வகத்தின்' (Heavy Structures Lab) தலைவராகப் பொறுப்பேற்றார்.

சகுந்தலா பகத் | Shakuntala Bhagat
சகுந்தலா பகத் | Shakuntala Bhagat AI Image

ஐ.ஐ.டி பம்பாயில் இருந்தபோது, பேராசிரியை சகுந்தலாவை ஒரு கேள்வி தீவிரமாக உலுக்கியது: இந்தியாவில் உள்கட்டமைப்பு திட்டங்களை முடிக்க ஏன் இவ்வளவு காலம் ஆகிறது?​ பாரம்பரிய எஃகுப் பாலங்கள் மெதுவாகவும் ஆபத்தாகவும் நிகழும் கள-வெல்டிங் (on-site welding) மற்றும் கனமான ரிவெட்டிங் (riveting) முறைகளையே நம்பியிருந்தன.

அருணாச்சல பிரதேசத்திலோ அல்லது காஷ்மீரிலோ ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டால், புதிய பாலம் வர அக்கிராம மக்கள் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

1960-களின் பிற்பகுதியில், பம்பாயில் உள்ள தனது சிறிய அடுக்குமாடி குடியிருப்பை இரவோடு இரவாக ஒரு பட்டறையாக மாற்றினார் சகுந்தலா. இரும்பு மாதிரிகளும், கணக்கீடுகளுமாக நிறைந்திருந்த அந்த அறையில், பொறியாளரான தன் கணவர் அனிருத் பகத்துடன் இணைந்து அந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கற்பனை நெருப்பை அணைத்தவள்!
சகுந்தலா பகத் | Shakuntala Bhagat

அவர்கள் குவாட்ரிகான் மாடுலர் பாலம் அமைப்பு (Quadricon Modular Bridge System) மற்றும் பகத் யுனிஷியர் இணைப்பு (Bhagat Unishear Connector) ஆகியவற்றைக் கண்டுபிடித்து காப்புரிமையும் பெற்றனர். ஒவ்வொரு நதிக்கும் தனித்தனியாக பிரம்மாண்ட பாலங்களை வார்ப்பதற்குப் பதிலாக, இந்த முறையில் ஒரே மாதிரியான, எடை குறைந்த எஃகு பாகங்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். இவற்றை சிறிய லாரிகளில் ஏற்றி, குறுகிய மலைப்பாதைகள் வழியாகக் கொண்டு சென்று, எளிய கைக்கருவிகளைக் கொண்டே களத்தில் அசெம்பிள் செய்துவிடலாம். இதன் மூலம் பாலம் கட்டும் காலம் பல ஆண்டுகளிலிருந்து வெறும் சில வாரங்களாகக் குறைந்தது!​

அன்றைய அதிகார வர்க்கம் அவர்களுக்கு உதவ மறுத்தது. ஆனால் சகுந்தலாவும் அவரது கணவரும் பின்வாங்கவில்லை. தங்களின் சொந்தச் சொத்துக்களை அடமானம் வைத்து, மிகப்பெரிய நிதி அபாயத்தைச் சந்தித்து, மாதிரிகளை (prototypes) உருவாக்கிச் சோதித்தனர். 1972-இல், 'யுனிஷியர் இணைப்பு'க்காக கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு வாரியம் (Invention Promotion Board) அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்தது.

அதில் காஷ்மீரின் உயரமான மலைப்பாதைகள் முதல் அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த காடுகள் வரை இந்தியாவின் மிக ஆபத்தான எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட 69 முக்கியப் பாலங்களும் அடங்கும். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியிலும் இவரது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.​ 1993-இல், அவருக்கு "ஆண்டின் சிறந்த பெண் பொறியாளர்" (Woman Engineer of the Year) விருது வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: எங்கே சென்றாய் கயல்விழி?
சகுந்தலா பகத் | Shakuntala Bhagat

இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையில் தலைசிறந்த பெண் பொறியாளரின் தொழில்நுட்பப் புதுமைகளை அறிந்துகொள்வதன் மூலம், புதிய தீர்வுகளைக் கண்டறியும் திறனையும் சிக்கல்களைத் தாண்டி ஜெயித்த சாதனை வரலாற்றையும் வாசகர்கள் முழுமையாகப் பெற்றுக்கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com