கல்வி மட்டும் போதாது, திறனும் தேவை – இளைஞர்களுக்காக போராடும் ஷிப்ரா!

jaipur woman youngsters
Jaipur woman
Published on

வேலைவாய்ப்புக்கான திறன்கள் இல்லாத காரணத்தினால் படித்தும் பல கல்லூரி பட்டதாரிகள் வேலை பெற முடியாமல் திண்டாடுகிறார்கள். இந்த மிகவும் கடினமான சூழ்நிலையை மாற்றுவதற்காக தனக்குத் தானே பொறுப்பேற்று இளைஞர்களுக்கு திறமைகளை அளித்து வருகின்ற ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழில்முனைவோர் ஷிப்ராவை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்...

ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழில்முனைவோர் ஷிப்ரா சர்மா பூட்டானி, புதுமையான, தொழில்நுட்பம் சார்ந்த வழியில் இந்தச் சவாலை எதிர்கொண்டு எழுச்சி பெற உதவி பரிந்து வருகிறார். திறன் மேம்பாட்டுத் துறையில் இவரது பணி கல்வி-தொழில் இடைவெளியைக் குறைப்பது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையையும் மாற்றியமைத்து வருகிறது.

ஐஐஎம்-கல்கத்தாவில் படித்த ஷிப்ரா, திறன் மேம்பாட்டுத் துறையில் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களில் ஒன்றான கேபசிட்டா கனெக்டின் (Capacita connect) நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார்.

நான்குசுற்று நிதியுதவியுடன், கேபசிட்டா, இளைஞர்கள் மற்றும் நிபுணர்களுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிப்பதில் ஒரு முன்னோடியாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) முதல் பிளாக்செயின், சைபர் பாதுகாப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு வரை என அனைத்திற்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

இவரது ஸ்டார்ட்அப் ஏற்கனவே CII தொழில்துறை கண்டுபிடிப்பு விருது போன்ற அங்கீகாரங்களை வென்றுள்ளது. இது ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மதிப்புமிக்க குளோபல் இந்தியன் பிராண்ட்ஸ் அண்ட் லீடர்ஸ் பதிப்பிலும், டாடா, பஜாஜ், பிர்லா, HCL மற்றும் மஹிந்திரா போன்ற குழுக்களுடனும் இணைந்து இடம்பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
பேச்சுத் திறனை வளர்ப்பது எப்படி? யாரிடம் எப்படிப் பேசணும்னு தெரிஞ்சிக்கோங்க!
jaipur woman youngsters

ஆனால் இது எல்லாம் எப்படி உருவானது?

மும்பையில் பிறந்த ஷிப்ரா, பத்து வயதிலேயே தனது தந்தையை இழந்தார். அவரது தந்தையின் தொழில் மூடப்பட்டதால், அவரது குடும்பம் ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அவர்களின் மூதாதையர் கிராமமான கெக்ரிக்குத் திரும்பிச் சென்றனர். தந்தையின் மறைவிற்கு பின் கல்வியின் முக்கியதுவத்தை உணர்ந்ததால் அவர், படிப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பிலானியில் உள்ள பிர்லா பாலிகா வித்யாபீட்டில் அறிவியல் பயின்றார். பின்னர் ஐஐஎம் கல்கத்தாவில் தொழில்முனைவு மற்றும் வணிகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

எம்பிஏ முடித்த பிறகு, ஜெய்ப்பூர் வளாகத்தில் உள்ள பிஐடி மெஸ்ராவில் பொருளாதாரம் மற்றும் வணிகத்தில் விரிவுரையாளராக ஷிப்ரா ஆனார். கற்பிக்கும் போதுதான் கல்லூரிகளில் வழங்கப்படும் கல்விக்கும் தொழில்துறையில் தேவைப்படும் திறன்களுக்கும் இடையிலான இடைவெளியைக் கண்டார்.

இதனால் தான் ஷிப்ராவிற்கு திறன் பயிற்சி மீதான ஆர்வம் தூண்டப்பட்டது. மாணவர்கள் பட்டங்களைப் பெற்றும், வேலைவாய்ப்புத் திறன்கள் இல்லாத காரணத்தால் உண்டாகும் ஒரு வெளிப்படையான பிரச்னையை அவர் கவனித்தார். பிரச்னையின் அவசரத்தை உணர்ந்த அவர், தனது வேலையை விட்டுவிட்டு, 2008 ஆம் ஆண்டில், தனது வீட்டின் அடித்தளத்தில் 40 மாணவர்களுடன் ஜெகன் ராஜ் தொழில்முறை ஆய்வுகள் என்ற முதன்மை திறன் அகாடமியைத் தொடங்கினார்.

இவருடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்கள், விதவைகள், சிறைக் கைதிகள் மற்றும் பின் தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிளம்பிங், அழகுசாதனப் பொருட்கள், பாதுகாப்பு சேவைகள் மற்றும் மின்சார வேலை போன்ற துறைகளில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதே ஆகும். இந்த நோக்கம் வெறும் வேலை வாய்ப்பிற்கு மட்டுமல்லாமல் சமூகத்தின் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்திற்காகவும் இருந்தது.

"எந்தவொரு அமைப்பும் இந்த மக்களுக்கு பயிற்சி அளிக்க விரும்பவில்லை. அவர்கள் மனரீதியாகவும், நிதி ரீதியாகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும், அணுகல் இல்லாதவர்களாகவும் இருந்தனர்," என்றும் "ஆனால் அவர்களைச் கரை சேர்ப்பதற்கான கோரிக்கை உண்மையானது. இந்த அமைப்பு மிகவும் ஒழுங்கமைக்கப்படாத நிலையிலிருக்கிறது, ஆகவே நாம் கட்டமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறுகிறார்.

இதையும் படியுங்கள்:
அலுவலகத்தில் பதவி உயர்வுபெற இந்த 9 வகை திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்!
jaipur woman youngsters

கடந்த ஒன்றரை தசாப்தங்களில், ஷிப்ராவின் முயற்சிகள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தனி நபர்களுக்கு பயிற்சி அளித்து அதிகாரம் அளிக்க உதவியுள்ளன. இவருடைய சேவகம் சைக்கோமெட்ரிக் மதிப்பீடுகள், ஆலோசனை, திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற சேவைகளை வழங்குகின்றன.

தற்சமயம், ஷிப்ரா இந்திய இளைஞர்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தயார்படுத்தும் நோக்கில் தனது தொலைநோக்குப் பார்வையை விரிவுபடுத்தியுள்ளார். கேபசிட்டா கனெக்ட், AI மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற பயிற்சியை அளிக்கிறது.

அவருடைய ஸ்டார்ட்அப், ஆசிரியர்கள், மாணவர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் படிப்புகளையும் வழங்குகிறது, இது பரவலான அணுகலையும் நிஜ

உலக தாக்கத்தையும் உறுதி செய்கிறது. ஒரு முக்கிய மைல்கல்லாக, கேபசிட்டா கனெக்ட், ரைசிங் ராஜஸ்தான் முதலீட்டு உச்சி மாநாட்டில் ராஜஸ்தான் அரசாங்கத்துடன் ₹45 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
'work-life balance' - எப்படி சமாளிப்பது?ஒவ்வொரு Gen Z பெண்ணும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்!
jaipur woman youngsters

ஷிப்ராவின் சக்திவாய்ந்த பயணத்திற்குப் பின்னால் ஆழ்ந்த தனிப்பட்ட இழப்பு மற்றும் மீள்தன்மையின் கதை உள்ளது. அவர் தனது 10 வயதில் தனது தந்தையை இழந்தார், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது தாயும் சகோதரரும் காலமானார்கள். தன்னையும் ஒரு இளைய வளர்ப்பு சகோதரனையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பின் தாக்கத்தால் அவர் மிகப்பெரிய சவால்களை சிறுவயதிலேயே எதிர்கொண்டார்.

"சிறு வயதிலேயே வாழ்வதற்கு ஒரு நோக்கத்தைக் கண்டுபிடிக்க முடியாமல். நான் மனச்சோர்வில் இருந்தேன். ஆகவே என்னைப் போலவே துன்பப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தேன்," என்று அவர் மனத்தாழ்மையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

தனது கடினமான குழந்தைப் பருவத்திலிருந்து மீண்ட அவர், வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார், "நாம் குழந்தைகளுக்கு நன்றாக மதிப்பெண் பெற கற்றுக்கொடுக்கிறோம். ஆனால் நாம், சோகத்தை எப்படி எதிர்கொள்வது அல்லது தோல்விக்குப் பிறகு எப்படி உயர வேண்டும் என்பதை கற்று கொடுக்க முயற்சிப்பதில்லை, அதைத்தான் நாம் மாற்ற வேண்டும்" என்றும் அவர் கூறுகிறார்.

இவரைப் போன்ற இன்னும் எத்தனையோ பெண் தொழில் முனைவோர் தங்கள் முத்திரையைப் பதிக்கும்போது, இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com