

"இன்னைக்கு ரத்த தான முகாம் பத்தின மீட்டிங் இருக்கு. இன்னைக்குன்னு பார்த்து இவ்வளவு தாமதம் செய்யறா அஞ்சலை" என புலம்பியபடி வந்த கௌசல்யாவிடம் "அஞ்சலை வந்துட்டாங்களே பார்க்கவில்லையா நீ" என்றான் கௌசல்யாவின் கணவன் மூர்த்தி.
"அட வந்துட்டாளா, நான் கவனிக்கலையே" என்று கூறி சிரித்தபடி அஞ்சலை வேலை செய்யும் ஒர்க் ஏரியாவை எட்டிப் பார்த்தாள் கௌசல்யா. அங்கே தொட்டியில் கிடந்த பாத்திரங்களை சத்தம் இல்லாமல் தேய்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சலை.
"அஞ்சலை காபி தரவா?" என்று கேட்ட கௌசல்யாவை நிமிர்ந்து பார்த்த அஞ்சலையின் முகம் வீங்கி இருந்தது. அவள் நெற்றியில் பிளாஸ்த்ரி வேறு ஒட்டி இருந்தது.
"ஐயோ.. அஞ்சலை என்னாச்சு கீழே எங்கேயும் விழுந்துட்டியா? இப்படி இருக்குது முகம்!" என்று கேட்டாள் கௌசல்யா.
"அத்த ஏம்மா கேக்குற என் பசங்க ரெண்டும் சண்டை போட்டு மண்டைய ஒடச்சுக்குதுங்க அவனுகளை விலக்க போய் நான் அடிபட்டு சாவுறேன்" என்ற அஞ்சலையின் கண்களில் மள மளவென கண்ணீர் கொட்டியது.
"அஞ்சலை, அழாத விஷயத்தை சொல்லு" என்றாள் கௌசல்யா.