#BREAKING: புதுச்சேரி தேர்தலில் கள்ள ஓட்டு போட்டவர் கைது.!

Fake vote
Puducherry election
Published on

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் சற்றுமுன் புதுச்சேரி தேர்தலில் மண்ணாடிபட்டு தொகுதியில் கள்ள ஓட்டு போட்டதாக விழுப்புரத்தைச் சேர்ந்த பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வசிப்பவரின் பூத் ஸ்லிப்பை பயன்படுத்தி, பிரசாத் ஓட்டு போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கள்ள ஓட்டு போட்ட குற்றத்திற்காக பிரசாத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: இபிஎஸ் - உதயநிதி ஒரே விமானத்தில் பயணம்.! பரபரக்கும் அரசியல் களம்.!
Fake vote

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற முடிந்துள்ள நிலையில் கள்ள ஓட்டு போட்ட நபர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவை சேர்ந்த நண்பர்கள் தான், என்னை கள்ள ஓட்டு போட அழைத்ததாக கைது செய்யப்பட்ட பிரசாத் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட பிரசாத்தை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே தேர்தலின் போது, புதுச்சேரியில் டோக்கன் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS: ஆன்லைன் மோசடிக்கு செக்: ₹10,000-க்கு மேல் அனுப்பினால் உடனே போகாது.!
Fake vote

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com