

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாகவே பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27-ல் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் தாக்கல் செய்தார் சங்கீதா. விவாகரத்து வழக்கின் விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நான்காவது வழக்காக விசாரணைக்கு வந்த நிலையில், ஜூன் 15ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி.
இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் காரணமாக விஜய் ஆஜராக மாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் சங்கீதா வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணையில் ஆஜராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி நீதிபதி இந்த வழக்கை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.