

தமிழக சட்டசபையில் துறை ரீதியான விவாதம் இன்று 3வது நாளாகத் தொடங்கியது. இன்று முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் தமிழக மக்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி பால் கூட்டுறவு விற்பனையாளர்களின் உழைப்பைக் கருத்தில் கொண்டு பால் கெள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தி உத்தரவிட்டுள்ளார் முதல்வர்.
அதோடு அரசு ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இதன்படி, ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.35 இல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பெரம்பூரில் ரூ.300 கோடியில் பிரம்மாண்ட பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படும் என அறிவித்தார் முதல்வர் விஜய். எம்எல்ஏக்களுக்கு மாதந்தோறும் வாகனப்படியாக ரூ.75,000 வழங்கப்படும். கூடுதலாக அனைத்து எம்எல்ஏக்களுக்கு உதவியாளர் நியமிப்பதோடு, அவர்களுக்கு ரூ.25,000 உதவிப்படி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.