பாராமதி தொகுதியில் மோதும் பவார் குடும்பத்து மகளும், மருமகளும்!

Supriya sule and Sunethra Pawar
Supriya sule and Sunethra Pawar
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

காராஷ்டிராவில் உள்ள 48 பாராளுமன்றத் தொகுதிகளில் மிக முக்கியமான சிலவற்றில் ஒன்று பாராமதி. காரணம் இது காங்கிரஸ் கோட்டையாக இருந்து பின்னர் சரத்பவாரின் கோட்டையாக மாறியது. பூனா மாவட்டத்தில் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பாராமதி பாராளுமன்றத் தொகுதி தேர்தல் அகில இந்திய அளவில் மீடியாக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு தொகுதியாகும்.

காரணம், இங்கே தேர்தல் களத்தில் மோதும் இரு முக்கிய வேட்பாளர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். சரத்பவார் பிரிவு தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் அவரது மகள் சுப்ரியா சூலே. அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் உண்மையான தேசியவாதக் காங்கிரஸ் என தேர்தல் கமிஷனால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் அவருடைய மனைவி சுநேத்ரா பவார்.

இந்தத் தொகுதியில் இருந்து 1984ல் சரத்பவார் முதல் முறையாக ஜெயித்து பாராளுமன்றத்துக்குப் போனார். 1996 முதல் 2004 வரை தொடர்ந்து சரத்பவாரே இந்தத் தொகுதியின் எம்.பி. ஆவார். 2009 தேர்தலில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சூலே போட்டியிட்டு ஜெயித்தார். தொடர்ந்து 2014, 2019 தேர்தல்களிலும் அவரே வென்றார். ஆனால், கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி சண்டைகள், அரசியல் நெருக்கடிகள் இன்ன பிற காரணங்களின் விளைவாக சிவசேனா உடைந்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதவியை இழந்து, ஏக்நாத் ஷிண்டே பாஜகஆதரவுடன் முதலமைச்சர் நாற்காலியைப் பிடித்தார்.

அடுத்து, அதிரடி திருப்பமாக சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியிலும் பிளவு ஏற்பட்டது. சரத்பவாரின் சகோதரியின் மகனான அஜித் பவார் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியை உடைத்து, ஆளும் சிவசேனா - பாஜக கூட்டணியில் சேர்ந்து துணை முதலமைச்சர் பதவியும் பெற்றுக் கொண்டார். இப்படிப் பலவகையான அதிரடி பரபரப்பு அரசியல் சதுரங்க ஆட்டத்தின் கிளைமாக்ஸாக சரத்பவார் குடும்பத்து பாரம்பரிய தொகுதியான பாராமதியில் பவார் வீட்டு மகளா? மருமகளா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ப்ரேசிலில் அதிகனமழையால் 56 பேர் உயிரிழப்பு… 74 பேர் மாயம்!
Supriya sule and Sunethra Pawar

கடந்த சுமார் 30 ஆண்டுகளில் பாராமதி தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சில தொழிற்சாலைகள் வந்து வேலை வாய்ப்பும் உருவாகி இருக்கிறது. சரத்பவார் குடும்பத்தினரே வித்யா பிரதிஷ்டான் அறக்கட்டளையை ஏற்படுத்தி அதன் மூலமாக தொகுதியின் பல பகுதிகளிலும் 17 பள்ளிக்கூடங்களும், 12 கல்லூரிகளும் நடத்தி வருகிறார்கள். இவற்றில் சட்டம், ஐ.டி., ஆர்கிடெக்சர் உள்ளிட்ட பலவும் அடங்கும். ‘எங்கள் ஊர் மத்திய பேருந்து நிலையமே விமான நிலையம் போல பிரம்மாண்டமாக இருக்கும்’ என்று பெருமைப்படுகிறார்கள் பாராமதிவாசிகள்.

‘களத்தில் மோதும் சரத் பவாரின் மகள், அஜித் பவாரின் மனைவி இருவரில் ஜெயிக்கப்போவது யாரு?’ என்று கேட்டால், ‘சரத்பவார் மீது மக்களுக்கு மரியாதை உள்ளது. அஜித்பவார்தான், சரத்பவாரின் அத்தனை விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருந்தவர் என்பதால் அவருக்கு மக்களுடன் நேரடி தொடர்பு இருக்கிறது. எனவே, ரிசல்ட் எப்படி இருக்கும் என்பதை கணித்துச் சொல்வது ரொம்பக் கஷ்டம்’ என்கிறார்கள் மக்கள்.

logo
Kalki Online
kalkionline.com