டெல்லியில் களமிறங்கும் சுஷ்மா ஸ்வராஜ் ஜூனியர்!

Sushma Swaraj Jr. is contesting the Parliamentary Elections in Delhi
Sushma Swaraj Jr. is contesting the Parliamentary Elections in Delhi
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

வாஜ்பாய் காலத்தில் இருந்தே பாஜகவின் முக்கியத் தலைவராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். மோடி அமைச்சரவையிலும் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக செயல்பட்டார். சமூக ஊடகங்கள் வாயிலாகவே அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் பலரது பிரச்னைகளைத் தீர்த்துவைத்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுப் பெற்றார். கடந்த 2019ல் சுஷ்மா ஸ்வராஜ் மறைந்தார்.

டெல்லி முதலமைச்சராகப் பணியாற்றிய சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் புது டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவருக்கு வயது நாற்பது.

பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மிக முக்கியமான தலைவர்கள் அடங்கிய பாஜகவின் முதலாவது வேட்பாளர் பட்டியலிலேயே பன்சூரி ஸ்வராஜின் பெயரும் இடம்பெற்றிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

தற்போது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த பன்சூரி ஸ்வராஜ், அடுத்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். 2007ம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் பன்சூரி தனது சொந்த மாநிலமான ஹரியானாவில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றியவர்.

இதையும் படியுங்கள்:
அமீரக வரலாற்றில் முதல் முறையாக… அபுதாபி இந்துக் கோயிலில் இப்தார் விருந்து நிகழ்ச்சி... மத நல்லிணக்க நெகிழ்ச்சி!
Sushma Swaraj Jr. is contesting the Parliamentary Elections in Delhi

கடந்த ஆண்டில் டெல்லி அரசியல் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார் பன்சூரி. அவரை பாஜக சட்டப் பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளராக நியமித்தது. அதனைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், அவரது ஆட்சியயும் கடுமையாக விமர்சனம் செய்தபோது, இவர் மீது மீடியா வெளிச்சம் அதிகமாக விழுந்தது.

தற்போது புது டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் சேர்ந்து பொது வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தற்போதைய எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதியை நிறுத்தி இருக்கிறார்கள்.

“அரசியலில் என் அம்மாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்! அவர் எனக்கு அம்மா மட்டுமில்லை; நெருக்கமான தோழி! வழிகாட்டி! அவர் டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர். எனக்கு, இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் டெல்லியில் போட்டியிட கட்சி வாய்ப்பளித்துள்ளது! நான் வெற்றி பெறுவது உறுதி“ என்று அடித்துச் சொல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ் ஜூனியர்!

logo
Kalki Online
kalkionline.com