மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்கும் டாடா மோட்டார்ஸ்

நடப்பு நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் தனது மின்சார வாகன (EV) உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
Tata Motors
Tata Motors
Published on

டாட்டா மோட்டார்ஸ் லிமிடெட் இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு வாகன நிறுவனமாகும். இந்நிறுவனம் டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாக உள்ளது. டாட்டா மோட்டார்ஸ் 2010-11-ல் ரூ.9,274 கோடி வருவாய் ஈட்டியதன் மூலம், இந்தியாவின் மிக பெரிய கார் நிறுவனமானது. டாட்டா மோட்டார்ஸ் சிறிய, நடுத்தர கார் மற்றும் பயன்பாட்டு வாகனம் பிரிவுகளில் வாகனங்களை தயாரிக்கிறது. இந்நிறுவனம் உலகின் நான்காவது பெரிய டிரக் உற்பத்தியாளராகவும், மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து உற்பத்தியாளராகவும் உள்ளது. 50,000 தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். டாட்டா மோட்டார்ஸ் 1954 முதல் இந்தியாவில் 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்துள்ளது.

2010 இல் எகனாமிக் டைம்ஸ் மற்றும் வர்த்தக நிதியம் நடத்திய ஒரு வருடாந்திர கணக்கெடுப்பில் 'இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்' என்ற பட்டத்தை டாட்டா மோட்டார்ஸ் பெற்றது.

டாட்டா மோட்டார்ஸ், இந்திய சந்தையில் பேட்டரி மின்சார வாகனங்கள் மூலம் இயங்கும் நெக்ஸான் EV, பஞ்ச் EV, டிகோர் EV, மற்றும் டியாகோ EV உள்ளிட்ட மாடல்கள் மூலம் நாட்டின் முதன்மையான எலக்ட்ரிக் பயணிகள் வாகன தயாரிப்பாளராக விளங்குகின்றது.

இதையும் படியுங்கள்:
மாருதி சுசுகியின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்த டாடா மோட்டார்ஸ்!
Tata Motors

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் தனது மின்சார வாகன (EV) உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது, இது 2030-ம் ஆண்டுக்குள் அதன் மொத்த கார் விற்பனையில் EV விற்பனையை 30% ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் மின்சார வாகனங்களை முக்கிய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. இதை அடைய, அவர்கள் புதிய EV மாடல்கள் மற்றும் உள்ளூர் பேட்டரி உற்பத்தி இரண்டிலும் ரூ.18,000 கோடி (சுமார் $2.1 பில்லியன்) வரை முதலீடு செய்கிறது. இதில் 2026-ம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கவுள்ள குஜராத்தில் உள்ள ஒரு பேட்டரி ஜிகாஃபாக்டரியில் $1.5 பில்லியன் முதலீடும் அடங்கும்.

இதையும் படியுங்கள்:
டாடா சாம்ராஜ்யத்தின் அடுத்த தலைவர் யார்?
Tata Motors

கடந்த நிதியாண்டில் இது சுமார் 65 ஆயிரம் மின்சார வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் குறைவு.

எனவே தனது மின்சார வாகன துறையை வலுப்படுத்தும் வகையில் புதிய மாடல்கள் மற்றும் ஏற்கனவே உள்ள மாடல்களில் மாற்றங்கள் செய்து அடுத்தடுத்து வெளியிட உள்ளதாக அறிவித்து இருக்கிறது.

அந்தவகையில் ‘ஹாரியர்.இ.வி’ மாடலை இந்த ஆண்டும், ‘சியரா.இ.வி’ மாடலை அடுத்ததாகவும் வெளியிட திட்டமிட்டு உள்ளது. இதைத்தவிர ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பல மாடல்களிலும் மாறுதல்களுடன் வெளியிட உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.

மார்ச் 2026க்குள் மேலும் ஆறு மின்சார வாகன மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் அவர்களின் மொத்த மின்சார வாகன வரிசை பத்து ஆக உயரும்.

வெளிப்புற சப்ளையர்களை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உள்ளூர் பேட்டரி உற்பத்தி திறனை நிறுவுவதே அவர்களின் உத்தியின் முக்கிய அங்கமாகும்.

மின் வாகனங்களுடன் கூரை சூரிய அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான வழிகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். மின்சார வாகனங்களை மிகவும் பொருளாதார ரீதியாக கவர்ச்சிகரமான மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டில் 9 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்!
Tata Motors

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com