ரே பரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு பதிலாக நிற்கப்போவது யார்? தொடரும் சஸ்பென்ஸ்!

Who will replace Sonia Gandhi in Rae Bareli constituency? suspense!
Who will replace Sonia Gandhi in Rae Bareli constituency? suspense!
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

த்திரப் பிரதேசத்தில் உள்ள எண்பது பாராளுமன்றத் தொகுதிகளில் பல்லாண்டுகலாக வி.வி.ஐ.பி. அந்தஸ்து பெற்ற தொகுதிகளாக இருந்து வருகின்றன ரே பரேலி மற்றும் அமேதி தொகுதிகள். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில், ரே பரேலி தொகுதியில் போட்டியிட்டு சோனியா காந்தி வெற்றி பெற்றார்.

ஆனால், உ.பி.யில் அமேதி, கேரளாவில் வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, அமேதியில் தோற்றுப்போனார். அமேதியில் ராகுல் காந்தியை பாஜகவின் அமைச்சரான ஸ்மிருதி இரானி தோற்கடித்தார்.

ரே பரேலி பாராளுமன்றத் தொகுதி உ.பி.யின் ரே பரேலி மாவட்டத்தில் இருக்கும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று கருதப்படும் ரே பரேலி தொகுதியில் 1967 முதல் 1977 வரை இந்திராகாந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2004ம் ஆண்டு முதல் கடந்த 2019 தேர்தல் வரை சோனியா காந்தி போட்டியிட்டு வென்ற தொகுதியாக இது விளங்கியது. 77 வயதாகும் சோனியா காந்தி அண்மையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றுக் கொண்டார்.

2014, 2019 பொது தேர்தல்களின்போது உ.பி.யில் வீசிய பாஜக அலையில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்த சூழ்நிலையிலும் கூட, சோனியா காந்தி ரே பரேலி தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இன்னும் சொல்லப்போனால், 2019 பொது தேர்தலில், உ.பி.யில் காங்கிரஸ் வென்ற ஒரே தொகுதி ரே பரேலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவேதான், தற்போது சோனியா காந்தி போட்டியிடாத சூழ்நிலையில், இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப் போகிறவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
‘மோடிக்கும் அதிகார ஆசை இருக்கிறது’ அண்ணா ஹசாரே அட்டாக்!
Who will replace Sonia Gandhi in Rae Bareli constituency? suspense!

ரே பரேலி தொகுதியில் மே மாதம் 20ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. வேட்பாளர்கள் மே மாதம் 3ம் தேதிக்குள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், பாஜகவும் ரே பரோலி தொகுதிக்குத் தங்கள் கட்சி வேட்பாளரை அறிவிக்கவில்லை. அநேகமாக, நேரு குடும்பத்தின் ஆஸ்தான தொகுதி என்ற வகையில் பிரியங்கா காந்தி அங்கே போட்டியிடலாம் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

இதற்கிடையில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்துப் போட்டியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com