ஒடிசாவில் ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பாரா நவீன் பட்நாயக்?

naveen patnaik
naveen patnaikhttps://www.nlcbharat.org
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

நாடெங்கும் பாராளுமன்றத் தேர்தல் புயல் கடுமையாக வீசிக்கொண்டிருக்கும் வேளையில், ஒடிசா மாநிலத்தில் புயலின் வேகம் இன்னும் சற்று அதிகம். காரணம், அங்கே பாராளுமன்றத் தேர்தலோடு சேர்த்து அந்த மாநில சட்ட மன்றத்துக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள அட்டவணைப்படி ஒடிசாவின் 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 21 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து மே மாதம் 13ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 26, ஏப்ரல் 29, மற்றும் ஜூன் மாதம் முதல் தேதி வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போதைய முதலமைச்சராக பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளார். இவர் 1996 முதல் ஒடிசாவின் முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். கடந்த சட்ட மன்றத் தேர்தலில் 114 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். இந்த முறையும், அவர் ஆட்சி அமைத்தால் ஆறாவது முறையாக அவர் முதலமைச்சர் ஆவார் என்பது குறிப்பிடத் தக்கது.

naveen patnaik with Pandiyan
naveen patnaik with Pandiyan

ஒடிசாவைப் பொறுத்தவரை மற்ற பல மாநிலங்களைப் போலவே காங்கிரஸ் கட்சி பலமிழந்துவிட்டது. கடந்த சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தது வெறும் ஒன்பது தொகுதிகள் மட்டுமே. 23 தொகுதிகளில் வென்று, பாஜக எதிர்க்கட்சியாக இருந்தது.

தற்போது, பிஜு ஜனதா தளம் கட்சியில், அதன் தலைவரும், முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் வி.கே.பாண்டியன் என்ற தமிழ்நாட்டுக்காரர்தான். ஒடிசாவில் ஐஏஎஸ். அதிகாரியாகப் பணியாற்றிய பாண்டியன், சில மாதங்கள் முன்பு, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் களத்தில் இறங்கினார்.

இதையும் படியுங்கள்:
வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!
naveen patnaik

“மீண்டும் வெற்றி பெற்று பிஜு ஜனதா தளம் ஒடிசாவில் ஆட்சி அமைப்பது உறுதி. கடந்த சட்ட மன்றத் தேர்தலை விட இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவோம். பாஜக இன்னமும் தங்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை. முதலமைச்சர் வேட்பாளர் பெயரை பாஜக அறிவித்தால், நாங்கள் இன்னமும் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்! மற்ற கட்சிகள் எதுவுமே ஒற்றை இலக்கத்தைத் தாண்டாது என்பது உறுதி!” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் பாண்டியன்!

logo
Kalki Online
kalkionline.com