அதிக சிந்தனை, மன அழுத்தம், வேலைப்பளு போன்ற பல்வேறு காரணங்களால் மன அமைதி சீர்குலைந்து தவிப்பவர்களுக்கு நல்ல நண்பரின் ஆறுதலோ அல்லது மனநல ஆலோசகரின் உதவியோ அவசியமாக தேவைப்படுகிறது. ஆனால் இன்றைய அவசர உலகில் இது சாத்தியமில்லாமல் போனதால் சில இலவச மொபைல் செயலிகள் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பேருதவியாக இருக்கின்றன. அந்த வகையில் அந்த 5 இலவச ஆஃப்கள் குறித்து இப்பதிவில் காண்போம் .
(AI) என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் நட்புணர்வு மிக்க சாட்பாட்டான இது உங்களை எடைபோடாத நண்பரைப் போலச் செயல்பட்டு, பதற்றமான தருணங்களில் உங்களுடன் பேசுகிறது. வேலை நெருக்கடி, மனக் குழப்பமான நேரங்களில் நீங்கள் இதனுடன் பேசி உங்கள் மனதை அமைதிப்படுத்தலாம். 24 மணி நேரமும் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி மருத்துவ ஆலோசனைகளை வழங்காமல், உங்களின் பேச்சை காது கொடுத்து நிதானமாக கேட்டு அதற்கு பதிலளித்து உங்களுடைய மன அமைதிக்கு உதவுகிறது.
ஏராளமான தியான வழிகாட்டல் தொகுப்புகள், அமைதியான இசை, மூச்சுப் பயிற்சிகள் உலகளாவிய மனநல வல்லுநர்களின் உரைகள் ஆகியவை இந்த செயலியில் இலவசமாகக் கிடைப்பதால், சில நிமிடங்கள் ஓய்வு தேவைப்பட்டாலும், ஆழ்ந்த தியானம் செய்ய விரும்பினாலும், இந்த செயலி உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். படுக்கைக்குச் செல்லும் முன் மனதை அமைதிப்படுத்தவும், அதிகப்படியான சிந்தனைகளைக் குறைக்கவும் இது ஒரு சிறந்த வழி என்பது குறிப்பிடத்தக்கது.
எளிய முறையில் மனதை நிர்வகிக்க அறிவாற்றல் மற்றும் நடத்தை சிகிச்சை (CBT) நுட்பங்களைப் பயன்படுத்தி, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தில் இருக்கும்போது, அழகான AI பென்குயின் உங்களுடன் உரையாடி, உங்கள் மனதைக் கவனித்துக்கொள்ளும் பயிற்சிகளை இலவசமாக ஒரு தனிப்பட்ட, தீர்ப்புகளற்ற மனப் பயிற்சியாளரைப் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குகிறது.
திடீரென்று பீதித் தாக்குதல் ஏற்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த Rootd செயலி. பீதித் தாக்குதலைச் சமாளிப்பதற்கான மூச்சுப் பயிற்சி நுட்பங்களை வெறும் ஒரு சில கிளிக்குகளில் கற்றுக் கொடுக்கிறது. மென்மையான மற்றும் எளிமையான வடிவமைப்பு கொண்ட இதில் உள்ள 'பானிக் பட்டன்' (Panic Button) அவசர காலங்களில் உடனடி உதவியை வழங்கி பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் ஏற்ற மனநல வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட Smiling Mind செயலி, மன அமைதிக்கான குறுகியகால தியான அமர்வுகளை வழங்குகிறது. தூக்கம், மன அழுத்தம் மற்றும் கவனத்தைச் செறிவூட்டுதல் போன்றவற்றிற்கான சிறப்புத் திட்டங்கள் இதில் உள்ளதால் தினசரி வாழ்க்கையில் பயனுள்ள முறையில் இந்த செயலியில் மன அமைதியை பெறலாம்.