ஆகஸ்ட் 9 பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்: நீண்ட கூந்தலுக்கு எண்ணெய் தயாரிக்கும் ஹக்கிபிக்கி பழங்குடியினர்!

ஹக்கிபிக்கி மக்கள், நீண்ட கூந்தல் மற்றும் முடி உதிராமைக்குத் தயாரிக்கும் ஒரு வகையான எண்ணெய் இந்தியாவில் மட்டுமின்றி, ஆப்பிரிக்க நாடுகளிலும் விரும்பப்படுகிறது.
International Day of the World's Indigenous Peoples
International Day of the World's Indigenous People
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

இந்தியாவில் கருநாடகம் மாநிலத்திலிருக்கும் சிமோகா மாவட்டம், தாவண்கரே மாவட்டம் மற்றும் மைசூர் மாவட்டங்களில் ஹக்கிபிக்கி (Hakkipikki) எனும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். மேற்கிந்தியாவைச் சேர்ந்த குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வசித்து வந்த இவர்கள், தொடக்கக் காலத்தில் கர்நாடக மாநிலத்தில் பறவைகளை வேட்டையாடிப் பிழைத்து வந்தனர். இம்மக்களை கன்னட மக்கள் ‘ஹக்கிபிக்கிகள்’ என்று அழைத்தனர். கன்னட மொழியில் ‘ஹக்கி’ என்றால் பறவை, ‘பிக்கி’ எனில் வேட்டையாடுபவர். அதாவது, ‘பறவைகளை வேட்டையாடுபவர்’ என்று பொருள்.

2011-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, குஜராத்தி, பன்வர், கலிவாலா மற்றும் மேவராஸ் எனும் நான்கு குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் ஹக்கிபிக்கி பழங்குடி மக்கள் தொகை 11,892 ஆக உள்ளது.

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் ஹக்கிபிக்கி மக்களின் முன்னோர்கள் மேவார் மன்னர் மகாராணா பிரதாப் ஆட்சியில் வீரர்களாக இருந்தனர் என்றும், முகலாயப் பேரரசு மேவார் நாட்டை வென்றதால், இம்மக்கள் மேவாரை விட்டு வெளியேறி முதலில் ஆந்திரப் பிரதேசத்திலும், அதன் பின்னர் கர்நாடகாவிலும் குடியேறினர் என்று இவர்களது இடப்பெயர்வு குறித்துச் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
முதுமையை நெருங்க விடாத சீமேநே பழங்குடி மக்களைப் பற்றி தெரியுமா?
International Day of the World's Indigenous Peoples

வரலாற்று ரீதியாக, வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. திறமையான வேட்டைக்காரர்களான இவர்கள், சிறிய விலங்குகளை வேட்டையாடிப் பிடிக்கவும், பழங்கள், வேர்கள் மற்றும் தேன் போன்ற வனப் பொருட்களை சேகரிக்கவும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி வந்தனர். இந்தியாவில் கொண்டு வரப்பெற்ற 1972-ம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்கள் பழங்குடியினருக்குப் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியது. ஹக்கிபிக்கி மக்களும் இதனால் பாதிக்கப்பட்டதால், வேட்டையாடுவதை விட்டுவிட்டு உள்ளூர் கோயில் கண்காட்சிகளில் மூலிகை எண்ணெய்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பூக்களைத் தயாரித்து விற்கும் நிலைக்கு மாறினர்.

ஹக்கிபிக்கி மக்கள், நீண்ட கூந்தல் மற்றும் முடி உதிராமைக்குத் தயாரிக்கும் ஒரு வகையான எண்ணெய் இந்தியாவில் மட்டுமின்றி, ஆப்பிரிக்க நாடுகளிலும் விரும்பப்படுகிறது. எனவே, ஹக்கிபிக்கி சமூகத்தினர் முடி எண்ணெய், ஆயுர்வேதப்பொருட்கள் மற்றும் பிற பொருட்களை வணிகம் செய்வதற்காக, ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்கிறார்கள்.

பழங்குடியினர் நெருக்கமான சமூக அமைப்பைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்களின் சமூகம் பெரும்பாலும் குலங்களாகவோ அல்லது நீட்டிக்கப்பட்ட குடும்பங்களாகவோ பிரிக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவர் முடிவெடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார். மேலும், இச்சமூகத்தினரை பாரம்பரிய இந்து சமூகத்தில் இருக்கும் சாதிகளுடன் ஒப்பிடலாம். இவர்கள் இந்து சமயப் பண்டிகைகள் அனைத்தையும் பின்பற்றுகின்றனர். ஹக்கிபிக்கி மக்கள் தாய்வழிச் சமூக அமைப்பைப் பின்பற்றுகின்றனர். இச்சமூகத்தில் மணமகள் வீட்டாருக்கு வரதட்சனை கொடுப்பதுடன், திருமணச் செலவையும் மணமகன் வீட்டாரே செய்யும் வழக்கம் உள்ளது.

இம்மக்களிடையே கல்வி நிலை இன்னும் குறைவாகவே இருக்கிறது. ஹக்கி பிக்கி ஆண்களுக்கான பாரம்பரிய உடை இடுப்புத் துணிகளைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் பெண்கள் புடவைகளை அணிவார்கள். அவர்கள் பழங்குடி நகைகள் மற்றும் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட ஆபரணங்களாலும் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். அவர்களின் பழக்கவழக்கங்களில், ஒரு குடும்பத்தில் மூத்த மகன் தனது தலைமுடியை வெட்டுவதைத் தவிர்ப்பார். இந்த நடைமுறை சமூகத்திற்குள் எளிதில் அடையாளம் காண ஒரு வழியாக செயல்படுகிறது. இவர்கள் அசைவ உணவு உண்பவர்கள், அவர்களின் உணவில் பல்வேறு வகையான இறைச்சி மற்றும் பிற விலங்கு பொருட்கள் அடங்கும்.

இதையும் படியுங்கள்:
நெருப்புக் கோழியைப் போலவே... இரண்டு விரல்கள் கொண்ட மனிதர்கள்! டோமா பழங்குடி மக்களின் அதிசயம்!
International Day of the World's Indigenous Peoples

ஹக்கிபிக்கி மக்கள் இந்திய - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த வாக்கிரி எனும் மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி ஏறக்குறைய குஜராத்தி மொழியை ஒத்துள்ளது. யுனெஸ்கோ "வாக்ரி"யை அழிந்து வரும் மொழியாக அங்கீகரித்துள்ளது. இந்தத் தனித்துவமான மொழியின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று யுனெஸ்கோ வலியுறுத்தி வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com