இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் பொறியியலாளர்கள்!

செப்டம்பர் 15, தேசியப் பொறியியலாளர் நாள்
Engineers are the backbone of technology
National Engineer’s Day
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாளன்று ‘தேசியப் பொறியியலாளர் நாள்’ (National Engineer’s Day) கொண்டாடப்பட்டு வருகிறது. புகழ் பெற்ற இந்தியப் பொறியியலாளரும், 1955ம் ஆண்டில் இந்திய அரசின் உயரிய விருதான ‘பாரத ரத்னா விருது’ பெற்றவருமான மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் நாளினை, ஒவ்வொரு ஆண்டும் தேசியப் பொறியியலாளர் நாளாகக் கொண்டாட வேண்டுமென்று 1968ம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

தேசியப் பொறியியலாளர்கள் நாள், இந்தியாவிலுள்ள பொறியியலாளர்களைச் சிறப்பிக்கிறது. நாட்டின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்குப் பொறியியலாளர்களின் பங்களிப்புகளைக் கொண்டாடுகிறது. மேலும், எதிர்காலப் பொறியியலாளர்களை ஊக்குவிக்கவும், சமூகத்தின் பல்வேறு துறைகளில் பொறியியலின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
தமிழ்பற்று மிகுந்த தங்கத்தமிழன் பேரறிஞா் அண்ணா!
Engineers are the backbone of technology

பொறியியலாளர்கள் நாள் என்பது பல்வேறு சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்தப் பொறியியலாளர்களைக் கொண்டாடுகிறது. மேலும், சமூகங்களில் பொறியியலாளர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, சமூகங்களின் முன்னேற்றத்திற்கும் உலகளாவிய உள்கட்டமைப்புகளின் மேம்பாட்டிற்கும் பங்களிக்கிறது. உலகளாவிய சவால்களைத் தீர்ப்பதில் பொறியியலின் பங்கு குறித்துச் சொல்வதுடன், பொறியியலைக் கொண்டாடவும், உத்வேகம் பெறவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நாள் சிறப்பு வாய்ந்ததாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புதியதொரு கருப்பொருளைக் கொண்டு, இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2025ம் ஆண்டுக்கு, ‘ஆழமான தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சிறப்பு: இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை இயக்குதல்’ (Deep Tech & Engineering Excellence: Driving India’s Techade) எனும் கருப்பொருள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நச்சுக்களை வெளியேற்றும் கோலோன் ஹைட்ரோதெரபி! ஆண்டுக்கு ஒருமுறை செய்தால் போதும்!
Engineers are the backbone of technology

இந்தியாவிலிருக்கும் பொறியியல் நிறுவனங்கள் மற்றும் தொழில்முறை அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் கருப்பொருளை முதன்மையாகக் கொண்டு, கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் போன்றவற்றை நடத்துகின்றன. இதேபோன்று, மக்களிடையே பரப்புரைகளையும் மேற்கொள்கின்றன. இதன் வழியாக, இளம் பொறியாளர்களை ஊக்குவிப்பதுடன், பொறியியல் துறை சார் வல்லுநர்களின் சாதனைகளும் பாராட்டப்படுகின்றன. இந்நிகழ்வுகளின் வழியாக, இந்தியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தொழில்முறை வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகின்றன.

இந்தியாவில் இருப்பவர்கள், தேசியப் பொறியியலாளர்கள் நாள் மற்றும் உலகப் பொறியியலாளர்கள் நாள் என்று இரண்டையும் குழப்பிக் கொள்கிறார்கள். இவ்விரு நாட்களும் வேறுபட்டவை. உலகப் பொறியியலாளர்கள் நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாள், 2020ம் ஆண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. இது பொறியியலாளர்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கவும், காலநிலை மாற்றம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற சவால்களை தீர்ப்பதில் பொறியியல் வகிக்கும் பங்கு குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும் முயல்கிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com