ஜூலை 17: பன்னாட்டு நீதிக்கான உலக நாள் - இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

பன்னாட்டு அளவிலான இரு நீதிமன்றங்கள் இணைக்கப்பட்டு, புதிய பன்னாட்டு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும்.
World Day for International Justice
World Day for International Justice
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 ஆம் நாளன்று ‘பன்னாட்டு நீதிக்கான உலக நாள்’ (World Day for International Justice) கொண்டாடப்படுகிறது. பன்னாட்டுக் குற்றவியல் நீதியை ஊக்குவிப்பதற்கும், உலகளாவிய சமூகத்தைப் பாதிக்கும் கடுமையான குற்றங்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதற்கு எதிரான போராட்டத்தைச் சிறப்பிப்பதற்குமான நாளாக இந்நாள் அமைந்திருக்கிறது.

ரோம் நகரில் 1998 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று நடந்த, உலக நாடுகளின் மாநாட்டில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை (International Criminal Court) உருவாக்குவதற்கான ரோம் ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திடவில்லை. ரோம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உறுப்பு நாடுகள் சேர்ந்து, 2010 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பாய்வுக் கூட்டத்தை நடத்தின. அந்தக் கூட்டத்தில், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் உருவாக அடித்தளமிட்ட, ரோம் ஒப்பந்தம் கையெழுத்தான ஜூலை 17 ஆம் நாளினை, பன்னாட்டு நீதி நாளாகக் கொண்டாடுவதென்று முடிவு செய்யப்பட்டது. பன்னாட்டு நீதிமன்றத்துக்கான தேவையை உணர்த்தவும், பன்னாட்டு நீதி என்பது என்ன? என்ற புரிதலை உருவாக்கவும் இந்த நளானது, உலகின் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. மேலும், உலகில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை அச்சுறுத்தும் குற்றங்களைத் தடுக்கவும், நீதியை ஆதரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை மேம்படுத்தவும் விரும்பும் அனைவரையும் இந்த நாள் ஒன்றிணைக்கிறது.

2002 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாளன்று அல்லது அதற்குப் பிறகு செய்யப்பெற்ற இனப்படுகொலை குற்றம், போர்க் குற்றங்கள் மற்றும் மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பன்னாட்டு மனிதாபிமான மற்றும் மனித உரிமைகளின் மிகக் கடுமையான மீறல்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விசாரிக்கும் திறன் கொண்ட முதல் நிரந்தர மற்றும் சுதந்திரமான பன்னாட்டு நீதித்துறை நிறுவனமாக, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றமம் (International Criminal Court) செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இதற்கான ரோம் ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத இந்தியா, சீனா உள்ளிட்ட 40 நாடுகளும், ஒப்பந்தத்தின் போது கையெழுத்திட்ட அமெரிக்கா, ரசியா, இஸ்ரேல், சூடான் போன்ற நாடுகள் பின்னர் ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்ட நாடுகளும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை. எனவே, இந்த நாடுகளில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் அதிகாரம் செலுத்துவதில்லை.

இதையும் படியுங்கள்:
ஐக்கிய நாடுகள் அமைப்பு பற்றி அறிந்து கொள்வொம்!
World Day for International Justice

உலகில் ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரத்தின் கீழ் வரும் பன்னாட்டு நீதிமன்றம், ரோம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் என்று இரண்டு பன்னாட்டு நீதி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பன்னாட்டு நீதிமன்றத்தில் ஐநாவில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 124 நாடுகள் மட்டும் இடம் பெற்றிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
‘தாமதிக்கப்படும் நீதி அநீதிக்கு சமம்’ - இதை உணர்வது எப்போது?
World Day for International Justice

உலகில் தற்போது ஆங்காங்கே நடைபெற்று வரும் சில போர்க்குற்றங்கள் ஆண்டுக்கணக்கில் நீடித்து வரும் வேளையில், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் தேவையும் இருந்து வருகிறது. பன்னாட்டு நீதிக்கான தேவையினைக் கருத்தில் கொண்டு, இரு வேறு நீதிமன்றங்களாகப் பிரிந்திருக்கும் பன்னாட்டு நீதிமன்றங்களை ஒன்றிணைத்து, நடுநிலைமையுடன் செயல்படும் பன்னாட்டு அளவிலான புதிய நீதிமன்றத்தினை உருவாக்கிட அனைத்து நாடுகளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற பலரது கருத்துகளை இந்நாளில் நாம் நினைவு கூர்ந்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com