'பொய்ன் செட்டியா' மலரும் கிறிஸ்துமஸ் விழாவும்... தொடர்பு என்ன?

poinsettia in christmas
Poinsettia in Christmas
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

பொய்ன் செட்டியா (Poinsettia) என்பது ஸ்புர்க் குடும்பத்தைச் சேர்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தாவர இனமாகும். மெக்சிகோவில் கண்டறியப்பட்ட இந்தத் தாவர இனம், இதன் சிவப்பு நிறம் மற்றும் பச்சை நிற மலர்களுக்காக அறியப்படுகிறது. மெக்சிகோவுக்காக நியமிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் தூதரான ஜோயல் ராபர்ட் பொய்ன்செட் என்பவர், மெக்சிகோவில் காட்டு மலராக இருந்த இந்த மலரை முதன் முதலில் தொட்டிகளில் வளர்த்து அமெரிக்காவில் அறிமுகப்படுத்தினார்.

1900 ஆண்டுக்குப் பின்பு, ஐக்கிய அமெரிக்காவில் வணிக ரீதியாக இத்தாவரத்தைப் பெருமளவில் வளர்க்கத் தொடங்கினர். இந்த மலருக்கான ஆங்கிலப் பெயர் தூதரின் பெயரைக் கொண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தாவரத்தின் மலர்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு என பல நிறங்களில் இருந்தாலும், இதில் சிவப்பு நிற மலரையே கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், இந்த மலரை ‘கிருஸ்துமஸ் மலர்’ என்று செல்லமாக அழைக்கின்றனர்.

பொய்ன் செட்டியா மலரும் கிறிஸ்துமஸ் விழாவும் எப்படி ஒன்றிணைகின்றன என்பது பற்றி ஒரு பழைய மெக்சிகன் புராணக்கதை ஒன்று உள்ளது.

ஒரு காலத்தில், மெக்சிகோவில் பெபிடா எனும் ஏழைப் பெண் இருந்தாள். அவளுக்கு கிறிஸ்துமஸ் விழாச் சேவைகளில் குழந்தை இயேசுவுக்குக் கொடுக்கப் பரிசு எதுவுமில்லையே என்ற வருத்தத்துடன் தேவாலயத்திற்குச் சென்றார்.

அவள் சோகத்துடன் இருப்பதைக் கண்ட அவளுடைய உறவினர் பெட்ரோ அவளை உற்சாகப்படுத்த பல வழிகளில் முயன்றார்.

அவர் அவளிடம், “பெபிடா, தன்னை நேசிக்கும் ஒருவர் கொடுக்கும் சிறிய பரிசு கூட இயேசுவை மகிழ்ச்சியாக மாற்றும் என்று நான் நம்புகிறேன்." என்றார்.

அதனைக் கேட்ட பெபிடா, சாலையோரத்தில் இருந்து சிறிய கையளவு களைகளை எடுத்து ஒரு சிறிய பூங்கொத்து செய்தாள்.

“இந்தச் சிறிய பரிசை இயேசுவுக்குக் கொடுக்க முடியுமா? இதனை இயேசு ஏற்றுக் கொள்வாரா?” என்று நினைத்தாள்.

தன்னிடமிருக்கும் இந்தப் பூங்கொத்து மதிப்பற்றதாக இருக்கிறதே... என்று நினைத்து வருத்தப்பட்டாள்.

இதையும் படியுங்கள்:
கிறிஸ்துமஸ் பிளம் கேக் வீட்டிலேயே செய்யலாமே!
poinsettia in christmas

அவள் தேவாலயத்தின் வழியாக பலிபீடத்திற்குச் செல்லும் போது, அவளது உறவினர் பெட்ரோ சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் தேவாலயத்தில் மண்டியிட்டு, அங்கே தான் கொண்டு வந்திருந்த பூங்கொத்தை வைத்து இயேசுவிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று, அவள் வைத்திருந்த பூங்கோத்து ஒளியுடன் சிவப்பு பூக்களாக மலர்ந்திருந்தது. அங்கிருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் அந்தப் பூங்கொத்தைப் பார்த்தனர்.

அந்த நாளில் இருந்து, பிரகாசமான சிவப்பு மலர்கள், 'புனித இரவின் மலர்கள்' என்று அழைக்கப்பட்டன. அதன் பிறகு, பொய்ன் செட்டியா மலர் கிறிஸ்துமஸ் பயன்பாட்டுக்கான மலராக மாற்றம் பெற்று விட்டது.

இதையும் படியுங்கள்:
கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய இடம் வகிக்கும் மரத்தின் சுவாரசியமான தகவல்கள்!
poinsettia in christmas

பொயின் செட்டியா மலர் மற்றும் இலைகளின் வடிவம் சில நேரங்களில் பெத்லகேம் நட்சத்திரத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இது ஞானிகளை இயேசுவிடம் அழைத்துச் செல்லும் என்கிற நம்பிக்கையையும் தருகிறது.

இதே போன்று, சிவப்பு நிற இலைகள் கிறிஸ்துவின் இரத்தத்தை அடையாளப்படுத்துகின்றன. வெள்ளை இலைகள் அவரது தூய்மையைக் குறிக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.

பொய்ன் செட்டியா மடகாஸ்கர் நாட்டின் தேசிய சின்னமாகவும் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com