ஜூன் 2: பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள் - பாலியல் தொழிலை சமூகக் களங்கமாகக் கருதும் நிலை மாற வேண்டும்!

ஜூன் 2: பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள்
ஜூன் 2: பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள் - பாலியல் தொழிலை சமூகக் களங்கமாகக் கருதும் நிலை மாற வேண்டும்!
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2ஆம் நாளன்று, ‘பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள்’ (International Sex Workers' Day) கடைப்பிடிக்கப்படுகிறது. பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காகவும் போராடும் ஒரு முக்கியமான நாளாக இந்நாள் கருதப்படுகிறது.

1975ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் நடந்த ஒரு போராட்டத்திலிருந்து, ‘பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள்’ தோற்றம் பெற்றது. அந்த ஆண்டு ஜூன் 2ஆம் நாளில் லியோனில் உள்ள செயிண்ட்- நைசியர் தேவாலயத்தில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள், தங்களின் கொடுமையான வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராகவும், காவல்துறையின் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும், சமூக அங்கீகாரம் மற்றும் உரிமைகளுக்காகவும் போராடினர். அவர்களது போராட்டம் எட்டு நாட்கள் வரை நடைபெற்றது. அதன் பிறகு, பிரான்ஸ் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்தப் போராட்டத்திற்குப் பின்பு, பிரான்சில் பாலியல் தொழிலாளர்களுக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான விழிப்புணர்வு ஏற்பட்டது.

பாலியல் தொழில் (Prostitution) என்பது பணம் அல்லது வேறு வெகுமதிகளுக்காக பாலியற் சேவைகளை வழங்குதல் ஆகும். இதனை, பால்வினைத் தொழில் என்றும் குறிப்பிடுவதுண்டு. இத்தொழிலில் பெரும்பான்மையாக, பெண்களே இருந்து வருகின்ற போதிலும், குறிப்பிடத்தக்க அளவில் ஆண்களும் ஈடுபடுகின்றனர். சிலர், பாலியல் தொழிலைத் தனிநபரின் சுதந்திரமான விருப்பத்தின் அடிப்படையில் ஒரு வேலையாகப் பார்க்கிறார்கள். அதே வேளையில், மற்றவர்கள் இதை சுரண்டல், வன்முறை மற்றும் மனித கடத்தலுடன் தொடர்புடைய ஒரு சமூகப் பிரச்சினையாகக் கருதுகிறார்கள். எனவே, பாலியற் தொழில் என்பது சில ஐரோப்பிய நாடுகளில் சட்டபூர்வமானதாகவும் அரசு மேற்பார்வையிலும் உள்ளது. பெரும்பாலான ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது என்று இருவேறு கருத்துகளைக் கொண்டுள்ளது. சில முஸ்லிம் நாடுகளில், பாலியல் தொழில் மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது. பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடியதாகக் கொண்டு, பாலியல் தொழில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பாலியல் குற்றங்கள் குறித்து போக்சோ (POCSO) சட்டம் என்ன சொல்கிறது?
ஜூன் 2: பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள் - பாலியல் தொழிலை சமூகக் களங்கமாகக் கருதும் நிலை மாற வேண்டும்!

பொதுவாக, பாலியல் தொழிலாளர்களுக்கு உடல்நலம், பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பில் பல சவால்கள் உள்ளன. எச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்ற பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள், உடல் மற்றும் மனரீதியான வன்முறை, சமூகப் புறக்கணிப்பு மற்றும் குற்றவாளிகளால் சுரண்டப்படுதல் போன்றவை, பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளாக இருக்கின்றன.

மொத்தத்தில், பாலியல் தொழில் என்பது ஒரு சிக்கலான, சமூக - பொருளாதார நிகழ்வாகும், இது வறுமை, ஏற்றத்தாழ்வு, பாலின சமத்துவமின்மை மற்றும் மனித உரிமைகள் போன்ற பல ஆழமான பிரச்சினைகளுடன் பிணைந்து இருக்கின்றது. இதை அணுகும் விதம் சமூகத்தின் மதிப்புகள், சட்டக் கட்டமைப்பு மற்றும் மனிதநேய கண்ணோட்டத்தை பிரதிபலிக்கிறது. இது போன்று பல்வேறு கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே, ‘பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.

* பாலியல் தொழிலாளர்களுக்கு மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், மருத்துவ வசதிகள், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு போன்ற அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு வாதிடுதல்.

* பாலியல் தொழிலைச் சுற்றியுள்ள சமூகக் களங்கத்தை அகற்றுவதற்கு முயற்சி செய்தல். பாகுபாட்டை எதிர்த்தல்.

* பாலியல் தொழிலைச் சட்டப்பூர்வமாகவோ அல்லது குற்றமற்றதாக்கவோ செய்ய வேண்டுதல்

* பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுதல்.

இதையும் படியுங்கள்:
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள்... வரவேற்கத்தக்க pink patrol திட்டம்... இது உதவிடுமா?
ஜூன் 2: பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள் - பாலியல் தொழிலை சமூகக் களங்கமாகக் கருதும் நிலை மாற வேண்டும்!

என்பது போன்ற சில முதன்மை நோக்கங்களைக் கொண்டு, ‘பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள்’ ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும், பன்னாட்டுப் பாலியல் தொழிலாளர் நாள் கடைப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகளில் பாலியல் தொழில் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக,

* உலகிலேயே முதல் முறையாக, பெல்ஜியத்தில் 2022ஆம் ஆண்டு பாலியல் தொழில் குற்றமற்றதாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும், பாலியல் தொழிலாளர்களுக்கு வேலை ஓப்பந்தம், மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு போன்ற உரிமைகளை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

* இந்திய உச்சநீதிமன்றம், 2022ஆம் ஆண்டு, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது. அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஹாங்காங்கில், பாலியல் தொழில் சட்டப்பூர்வமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்களை அடிமையாகக் கொண்டு பாலியல் தொழிலில் ஈடுப்பத்துவதோ, ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொழிலுக்கு உட்படுத்துவதோ, பாலியலில் தொழில் செய்யும் ஒரு பெண் அல்லது வேறு ஒருவர் பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அல்லது ஈர்க்கும் வகையில் செயல்படுவதோ அங்கு சட்டவிரோதமானது என்று இருக்கிறது.

ஹாங்காங்கில் பாலியல் தொழில் புரிவோர் ஒவ்வொரு நகரிலும் உள்ளனர். அவர்களுக்கான விளம்பரச் சேவை செய்யும் பத்திரிகைகள், நாளிதழ்கள் என நூற்றுக்கணக்கில் உள்ளன.

அன்றாடச் செய்தித்தாள்களில் வரும் விளம்பரச் சேவையில் பெரும்பகுதி பாலியல் தொழிலாளர்களின் விளம்பரச் சேவையாகவே இருக்கின்றன. இத்தொழிலுக்கான விளம்பரம் செய்வோர், தமது மார்பின் அளவு, உடம்பின் அளவு, நிறை, உயரம், வயது, பேசும் மொழி, விலை போன்றவற்றைக் குறித்திருப்பதுடன் அவர்களது கவர்ச்சியான புகைப்படங்களையும் இணைத்திருப்பர். இணையத்திலும் இவர்களுக்கான சட்டப்பூர்வமான விளம்பரத் தளங்கள் பல உள்ளன.

ஹாங்காங் அரசாங்கம் பாலியல் தொழிலாளர்கள் இணையத்தளங்களின் ஊடாக விளம்பரப்படுத்திக் கொள்வதற்கான சட்டப்பூர்வமான அனுமதியையும் வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல், வன்கொடுமை... பெண்களே! இதில் உங்கள் பங்கு என்ன?
ஜூன் 2: பன்னாட்டு பாலியல் தொழிலாளர் நாள் - பாலியல் தொழிலை சமூகக் களங்கமாகக் கருதும் நிலை மாற வேண்டும்!

உலகம் முழுவதும் சுமார் 52 மில்லியன் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக பாலியல் தொழிலாளர்களின் சர்வதேச ஒன்றியம் தெரிவிக்கிறது. பெரும்பான்மையான நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் சமூகக் களங்கமாகக் கருதப்பட்டு ஒதுக்கப்படுகின்றனர். பாலியல் தொழிலை அனைத்து நாடுகளிலும் ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும். பாலியல் தொழிலாளர்களுக்கு, மற்ற தொழிலைப் போன்று அனைத்து சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு தகுந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருவது, அனைத்து நாடுகளின் கவனத்திற்குரியதே.

logo
Kalki Online
kalkionline.com