தென்னிந்தியாவின் பிரிய உணவு: இட்லியை கொண்டாடும் இன்றைய கூகுள் டூடுள்!

Google Doodle celebrates Idli
Google Doodle Idli
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ரிசி மற்றும் உளுத்தம் பருப்பு கலந்த, புளித்த மாவில் இருந்து தயாரிக்கப்படும் சுவையான, வேகவைத்த தென்னிந்திய உணவான இட்லியை இன்றைய கூகுள் டூடுள் ‘இட்லியை கொண்டாடுவோம்’ எனும் தலைப்பில் கொண்டாடுகிறது.

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவிலிருக்கும் சின்னஞ்சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இட்லி. இது மட்டுமல்ல, உடல் நலக் குறைவுடன் இருக்கும் மருத்துவப் பயனாளிகளுக்கும் (நோயாளிகளுக்கும்) மருத்துவர்கள் அதிக அளவாகப் பரிந்துரைக்கும் உணவு இட்லி என்றால் அது மிகையில்லை. எந்தவொரு எண்ணெயையும் பயன்படுத்தாமல் நீராவியில் வேக வைக்கப்பட்ட இட்லியால் வயிற்றுக்கு எந்தவொரு பிரச்னையும் ஏற்படாத உணவு என்றால் இட்லிதான். இதேபோன்று வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்கள், குறிப்பாக தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்பவர்கள் இட்லியையே தங்கள் விருப்ப உணவாகத் தேர்வு செய்து சாப்பிடுவர். தற்போது இந்த இட்லியின் மீது கூகுளுக்கு திடீரென்று ஏன் இப்படியொரு விருப்பம் ஏற்பட்டது என்று தெரியவில்லை.

இதையும் படியுங்கள்:
மனநலத்தின் ரகசியமும், சமூகப் புறக்கணிப்பைத் தடுக்கும் வழிகளும்!
Google Doodle celebrates Idli

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவாகும். இட்லியின் பண்டையக்கால பெயர் ‘இட்டரிக’ என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில் இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார். பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி குறித்து, 1250ம் ஆண்டுக்குப் பின் எழுதப்பட்ட நூல்களில்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறைதான் இப்போது பின்பற்றப்படுவதாகச் சொல்கின்றனர். இந்தோனேசியாவிலிருப்பவர்கள் `கெட்லி” (Kedli) என்றழைத்தனர். கெட்லி என்பதுதான், `இட்லி’ என்று மருவியது என்கின்றனர்.

வெண்மையான நிறத்தில் இருக்கும் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து மாவாக அரைக்கப்பட்டு, அந்த மாவைப் புளிக்க வைத்துச் செய்யப்படும் இந்த உணவு தமிழ்நாட்டு உணவுதான் என்றும், இது தமிழ்நாட்டில் ‘இட்டவி’ (இட்டு அவி) என்ற தமிழ்ச் சொல்லால் அழைக்கப்பட்டு, அதிலிருந்து இட்லி என்று மருவி இருக்கிறது என்று சொல்லி, இந்த உணவு தமிழ்நாட்டு உணவு என்று சொல்பவர்களும் உண்டு. இட்லியின் தோற்றம் எங்கு என்பதில் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இட்லிதான் பெரும்பான்மையான உணவு என்று சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
இந்திய தபால் துறையின் மிரள வைக்கும் சாதனை: உலகிலேயே நம்பர் 1 ஆனது எப்படி தெரியுமா?
Google Doodle celebrates Idli

பொதுவாக, இட்லியை தனியாக உண்பதில்லை. இட்லியின் சுவையினைக் கூட்டுவதற்காக சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. தென்னிந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும் பெரும்பாலான உணவுகள் சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி / இட்லி பொடி. சில நேரங்களில் குழம்பு வகைகளும் சேர்த்துக் கொள்ளப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டே இன்றைய கூகுள் டூடுள் கேலிப் படத்தில் தலைவாழை இலையில் அரிசி, அரிசி அரைக்கப்பட்டு ஒரு பாத்திரத்தில் மாவு புளிக்க வைக்கப் பெற்ற பின்பு, அதிலிருந்து இட்லி தட்டில் இட்லி மாவு ஊற்றப்பட்டு ஆவியால் வேக வைக்கப்பட்டு எடுத்து வைக்கப்பட்டிருப்பதும், அதனையடுத்து அதனை சட்னி, சாம்பார், இட்லி பொடி கொண்டு சாப்பிடலாம் என்பதைக் கருவாகக் கொண்டு வரையப்பெற்றிருக்கிறது.

பிரிட்டனை சேர்ந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் என்பவர் ஒரு முறை, இந்திய உணவான இட்லியை சலிப்பு மிக்கது என்றும் மக்கள் இதை ஏன் மிகவும் விரும்புகிறார்கள் என்றும் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்ட நிகழ்வு, இட்லி பிரியர்கள் நடுவில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியது. இட்லி பிரியர்கள் பலர் தங்களுக்கு விருப்பமான உணவு, தவறாக விமர்சிக்கப்படுவதைக் கண்டு விரக்தியடைந்து அத்தளத்தில் தங்களது மறுமொழிக் கருத்துகளைப் பதிவிட்டனர்.

இந்நிலையில், இட்லிக்கு ஆதரவாக, ‘இட்லியைக் கொண்டாடுவோம்’ எனும் தலைப்பில் இன்றைய கூகுள் டூடுள் அமைந்திருப்பது இட்லிப் பிரியர்களுக்கும், இந்திய உணவுக்கும் குறிப்பாக, தமிழ்நாட்டின் பெருமையான உணவான இட்லிக்கு கூகுள் அளித்த சிறப்பு என்றே கருதலாம்.

logo
Kalki Online
kalkionline.com