உலக புகையிலை எதிர்ப்பு தினம் - கொண்டாடுவதற்கான நோக்கம்...

உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி கொண்டாடப்படுவதற்கான காரணத்தையும், இந்தாண்டுக்கான கருப்பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
world no tobacco day
world no tobacco day
Published on

உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் புகையிலை பயன்பாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) ஏற்பாடு செய்யும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். 1987-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்த தினத்தை உருவாக்கின. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் பயன்பாட்டை குறைப்பதற்காகவும், உலகெங்கிலும் உள்ள மக்கள் புகைபிடிப்பதை அல்லது எந்த வடிவத்திலும் புகையிலையைப் பயன்படுத்துவதை நிறுத்த ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. புகையிலை பயன்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும், புகைபிடிக்கும் புகையின் வெளிப்பாட்டைக் குறைப்பதற்கும், ஆரோக்கியமான மாற்றுகளை ஊக்குவிப்பதற்கும் கொள்கைகளை வலுப்படுத்த அரசாங்கங்களுக்கான அழைப்பும் இந்த நாளாகும்.

மனித இறப்புக்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாம் இடம் வகிக்கிறது. உலகிலேயே அதிக அளவில் புகையிலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

புகையிலை புகைப்பவரின் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அருகில் இருப்பவரின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புகையிலை பயன்படுத்துவதால் இறக்கின்றனர்.

அணிவகுப்புகள், பொது விவாதங்கள், உள்ளூர் மற்றும் தேசிய விளம்பர பிரச்சாரங்கள், புகையிலை எதிர்ப்பு கூட்டங்கள், கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் பொது கலைநிகழ்ச்சிகள் ஆகியவை இந்நாளில் நடைபெறுகின்றன. 1988-ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம், புகையிலை நுகர்வைக் குறைப்பதில் பங்களிப்பு செய்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. புகைபிடித்தல் மற்றும் பிற புகையிலை பொருட்களுடன் தொடர்புடைய அபாயங்களை மக்கள் அங்கீகரிக்க இந்த நாள் ஊக்குவிக்கிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த புகையிலையை விட்டுவிடுவதன் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது. இந்த தினத்தில் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் புகையிலை பயன்பாட்டை குறைப்பதோடு, அதனால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
உலக புகையிலை ஒழிப்பு தினம்:  சிறப்பு மணல் சிற்பம்! 
world no tobacco day

எதுக்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது?

* புகையிலைப் பயன்பாடு உடல்நலத்திற்கு ஏற்படுத்தும் தீமைகளை மக்களுக்கு எடுத்துரைத்தல்.

* புகையிலைப் பயன்பாட்டைத் தடுப்பதற்கான பயனுள்ள கொள்கைகளை பரிந்துரைத்தல்.

* புகையிலை நுகர்வைக் குறைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.

* புற்றுநோய், இதய நோய் மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளைத் தூண்டக்கூடிய புகையிலைப் பயன்பாட்டின் அபாயங்களை எடுத்துரைத்தல்.

* புகையிலை நிறுவனங்கள் பயன்படுத்தும் மோசடித் தந்திரங்களிலிருந்தும், புகையிலை பயன்பாட்டின் பிடியிலிருந்தும் சமூகத்தை பாதுகாத்தல்.

* குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினரை புகையிலைத் தொழிலின் தலையீட்டிலிருந்து பாதுகாத்தல்.

இந்த தினத்தை எப்படி அனுசரிக்கலாம்?

* புகையிலை எதிர்ப்புப் பிரச்சாரங்களை நடத்துவது.

* புகையிலையின் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, விழிப்புணர்வுப் போரட்டங்களை நடத்துவது.

* புகையிலை பயன்பாட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, புகையிலை இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவது.

* புகையிலை நிறுவனங்கள் பயன்படுத்தும் உத்திகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பது.

இதையும் படியுங்கள்:
புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு தொடங்கியது ஏழரை!
world no tobacco day

* புகையிலைப் பயன்பாட்டைத் தடுப்பதற்கான கொள்கைகளை ஆதரித்து, புகையிலை நுகர்வை குறைப்பது.

* புகையிலை விளம்பரத்தில் கடுமையான விதிமுறைகள், அதிகரித்த புகையிலை வரிகள் மற்றும் சிறந்த பொது கல்வி பிரச்சாரங்கள் போன்ற வலுவான புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் இந்த நாள் அழைப்பு விடுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com