என்றென்றும் பயன் தரும் 20 மருத்துவக் குறிப்புகள்!

20 Medical Tips That Will Benefit You Forever
20 Medical Tips That Will Benefit You Forever

1. அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் வெயில் காலங்களில் வெந்நீரிலும், குளிர் காலத்தில் குளிர்ந்த நீரிலும் குளிக்க வேண்டும்.

2. நிறைய நேரம் வெயிலில் நின்றால் அதிகமாக வியர்த்துக் கொட்டுகிறது. அதிகமாக வியர்த்து கொட்டுவதால் உடலிலுள்ள உப்புச் சத்துக்கள் குறைந்து விடுகிறது. இது உடலுக்கு நல்லதல்ல.

3. அதிக பசி, அடிக்கடி தாகம், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம், ஆண் குறியில் புண், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் இவற்றில் எது இருந்தாலும் சர்க்கரை வியாதிக்குண்டான டெஸ்ட்டை உடனடியாக செய்ய வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரை மற்றும் குளூக்கோஸை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

4. காலையில் தூங்கி எழுந்தவுடன் தலையின் பின் பகுதியில் வலியுடன் கூடிய கனம், லேசான மயக்கம், மூக்கில் இரத்தம் வருதல், கண் பார்வை மங்குதல் போன்றவை உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்.

5. நெஞ்சில் வலி, எரிச்சல், அதிக வியர்வை, இடது கை வலி மற்றும் உணர்ச்சியற்று போதல், நெஞ்சில் தாங்க முடியாத கனம் இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் இதயக் கோளாறு இருக்கிறதென்று அர்த்தம். வாய்வு கோளாறு என்று நினைத்து அசட்டையாக இருக்காதீர்கள்.

6. இருமல், எடை குறைதல், பசியின்மை, சோர்வு, இருமலின்போது இரத்தம் வருதல் போன்றவை இருந்தால் காச நோய் (டி.பி.) இருக்கிறதென்று அர்த்தம்.

7. உடலில் தேமல் இருந்தால் வயிற்றில் நோய் இருக்கிறதென்று அர்த்தம். வயிற்றிற்குள் இருக்கும் வியாதிக்கு முதலில் மருத்துவம் பார்த்து விட்டு பின்னர் தேமலுக்கு சிகிச்சை பெறுங்கள்.

8. குழந்தைகளுக்கு வளைந்த கால், நடக்க முடியாத நிலை ஏற்பட்டால் அது வைட்டமின் டி சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம்.

9. குளோரின் கலந்த நீர் முடி உதிர்வதை ஓரளவு தவிர்க்கும். ஆனால், அயோடின் குறைவதாலோ, கூடுவதாலோ முடி கொட்டலாம்.

10. ஒரு சராசரி மனிதனின் தலையிலிருந்து ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடி வரை கொட்டலாம். தவறில்லை. ஆனால், முடி தொடர்ந்து அதிகம் கொட்டினால் உடல் பரிசோதனை அவசியம். அது வேறு நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

11. நாற்பது வயதுக்கு மேல் மதிய நேரத்தில் சிறிது நேரம் தூங்குவதன் மூலம் இதயத்திற்கும், மூளைக்கும் சிறிது ஓய்வு கொடுக்கலாம். மூன்று வேளை உணவில் இரவில் கொஞ்சம் குறைவாக சாப்பிடுவது நல்லது.

12. உடலில் கொழுப்பு அதிகம் சேர ஆரம்பித்தால் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உண்டாகலாம். உடலில் கொழுப்பு அதிகம் சேர்கிறது என்பதை தொந்தி வருவதைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

13. இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் மற்றும் இரத்த குழாய் நோயுள்ளவர்கள் கொழுப்பு சத்துக் குறைவான பொருட்களை உண்பது நல்லது.

14. வலியுடன் கூடிய தழும்பு வெண்குட்ட பிரச்னையாகவும், வலியற்ற, உணர்ச்சியற்ற வெண் தழும்பு குட்ட ரோகமாகவும் இருக்கலாம்.

15. இரத்த சோகை உள்ள பெண்கள் மலம் பரிசோதனை செய்து வயிற்றில் உள்ள பூச்சிகளுக்கு முதலில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்த சோகைக்கு முக்கிய காரணம் வயிற்றில் பூச்சிகள் உள்ளதால்தான்.

இதையும் படியுங்கள்:
மன்னிப்பு எனும் மாமருந்தின் அளவற்ற நன்மைகளை அறிந்து கொள்வோம்!
20 Medical Tips That Will Benefit You Forever

16. ஆஸ்துமா நோய் பாதிப்பு உள்ளவர்கள் தக்காளி, எலுமிச்சை பழம், புளிப்புச் சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுவது நல்லது.

17. இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் கட்டுப்பாட்டில் வந்த பிறகு உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், நடைப்பயிற்சி செய்வது நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு குறைவாக சாப்பிடுவதுடன் ஊறுகாயையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

18. இரவு 10 மணிக்கு படுக்கும் சிலருக்கு நடு இரவில்தான் நல்ல தூக்கம் வரும். சிலர் கால் வலியால் அவதிப்படுவார்கள். இதற்கு இரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவு குறைவாக இருப்பதே காரணம். இரத்தத்தில் இரும்புச்சத்து போதுமான அளவு இருந்தால் இந்தப் பிரச்னை சரியாகும்.

19. இரகசிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான முறையான சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னரே திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் மனைவிக்கும் அந்த நோயைத் தொற்றை செய்து விடுவீர்கள்.

20. புகைப்பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரலில் ஒரு வகை புற்றுநோய் ஏற்படுகிறது. பொடி போடுவதும், புகையிலை மெல்வதும் இரத்தக் குழாய் நோய்களை உண்டுபண்ணுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com