ஈக்கள் எதையும் அப்படியே சாப்பிடாதாமே... பின்ன, எப்படி சாப்பிடும்?

வீட்டு ஈக்கள்தானே என்று சாதாரணமாக இருக்காதீர்கள்! அவை 65 வகையான நோய்களைப் பரப்புகின்றன!
Houseflies
Housefly
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

உலகம் முழுவதும் வீட்டுக்குள் வசிக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் இடையிடையேப் பறந்து கொண்டிருக்கும் இந்த வீட்டு ஈ (Housefly) சைக்ளோரர்பாவின் துணை வரிசையைச் சேர்ந்த இருசிறகிப் பூச்சிகளில் ஒன்றாகும்.

சாம்பல் முதல் கருப்பு நிறம் வரை, மார்பில் நான்கு அடர்வண்ண, நீளக் கோடுகளுடன், சற்று மயிரிழைகள் கொண்ட உடலுடன் இருக்கும் வீட்டு ஈக்கள் பொதுவாக 6 முதல் 7 மில்லி மீட்டர் நீளமானதாகவும், 13 முதல் 15 மில்லி மீட்டர் வரை இறக்கையுடன் அகலம் கொண்டதாக இருக்கும். பெண் ஈக்கள் ஆண் ஈக்களை விடப் பெரிய சிறகுகள் கொண்டவை.

ஆண் ஈக்கள் ஒப்பீட்டளவில் நீண்ட கால்கள் கொண்டவை. பெரிதான ஈயின் தலையில் கூட்டுக் கண்கள் அமைந்துள்ளன. இவை தலையின் இரு பகுதிகளிலும் உள்ளன. ஒவ்வொரு கண்ணிலும் 4,000 நுண்கண்கள் இருக்கின்றன. இவை நெருக்கமாக இருக்கின்றன. இவற்றின் உதவியால் பின் பக்கமுள்ளவற்றையும் ஈயால் பார்க்க முடியும். ஈயால் பகலில் பார்க்க முடியுமே தவிர, இரவில் எதையும் பார்க்க இயலாது. இரண்டு கண்களுக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி இருக்கும். இவ்விடைவெளி ஆண் ஈக்குக் குறுகியும் பெண் ஈக்கு அகன்றும் இருக்கும்.

ஈக்கு தாடைகள் ஏதும் இல்லாததால் இவை யாரையும் கடிப்பதில்லை. வீட்டு ஈக்கள், தான் உண்ணக் கருதும் கடினமான பொருட்கள் மீது தன் தட்டையான இரு உதடுகள் மூலம் உமிழ் நீரை உமிழ்கின்றன. உமிழ் நீரில் உண்ணும் பொருட்கள் கரையும் வரை அதைத் தேய்த்து, உமிழ் நீரில் பொருள்கள் நன்கு கரைந்த பின்னர் அதைத் தன் உறிஞ்சியால் உறிஞ்சி தன் தீனிப் பையில் சேமித்துக் கொள்ளும். தான் ஓய்வாக இருக்கும் போது, மாடு அசை போடுவது போல் அப்பையிலுள்ளவற்றை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும். இவ்வாறு உண்ணும் போது அத்திரவ உணவு அங்குமிங்குமாகச் சிதறி விழும். இதனால் ஈ இருக்குமிடம் அசுத்தமாகி விடும்.

இதன் கால்களின் நுனிப் பகுதியில் கொக்கி போன்ற உறுப்புகள் உள்ளன. இக்கால்களிலும் உணர்கொம்புகளிலும் மெல்லிய மயிரிழைகள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும், ஈ எங்கு அமர்கிறதோ அவ்விடத்தில் உள்ள அசுத்தங்களில் காணும் நோய்க்கிருமிகள் அம்மயிரிழைகளில் ஒட்டிக் கொள்ளும். அதற்கு அம்மயிரிழைகளில் உள்ள ஒருவித பிசுபிசுப்பும் பெருந்துணை செய்கிறது.

பெண் ஈ வழக்கமாக ஒரு முறை மட்டுமே இணைசேரும் என்றாலும் விந்துக்களை பின்னரும் பயன்படுத்தச் சேமித்துக் கொள்கிறன. இவை உணவுக் கழிவுகள், அழுகியப் பிணம், மலம் போன்ற சிதைந்து போகும் கரிமப் பொருட்களில் சுமார் 100 முட்டைகள் வரை இடுகின்றன. இந்த முட்டைகளில் இருந்து கால்கள் இல்லாத வெள்ளை நிறப் புழுக்கள் வெளிவருகின்றன. இரண்டு முதல் ஐந்து நாட்கள் வளர்ச்சிக்குப் பின்னர், இவை உருமாற்றம் அடைந்து, சுமார் 8 மில்லி மீட்டர்கள் நீளமான சிவப்பு - பழுப்பு நிறக் கூட்டுப்புழுக்களாக ஆகின்றன.

இதையும் படியுங்கள்:
இறந்த உடலை எரிக்க எவ்வளவு செலவாகும்? மின்மயானத்தில் நடக்கும் ஆச்சரியங்கள்!
Houseflies

வயதுவந்த ஈக்கள் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை வாழ்கின்றன. ஆனால், இவை குளிர்காலத்தில் ஓய்வுறக்கம் கொள்கின்றன. வளர்ந்த ஈக்கள் பலவிதமான திரவ அல்லது கூழ்மப் பொருட்களையோ, இவற்றின் உமிழ்நீரால் கரைக்கப்பட்டத் திடப்பொருட்களையோ உணவாகக் கொள்கின்றன.

இவை தங்கள் உடலிலும், மலத்திலும் நோய்க்கிருமிகளை பரப்பும் வாய்ப்பு உள்ளது. இவை உணவை மாசுபடுத்தக்கூடியனவாகவும், உணவு வழி நோய்த்தொற்றுகளைக் கொண்டு வருவனவாகவும், அதே நேரத்தில், உடல் ரீதியாக எரிச்சலூட்டக்கூடியனவாகவும் உள்ளன. இந்தக் காரணங்களுக்காக, இவை தீங்குயிர்களாகக் கருதப்படுகின்றன.

டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, இளம்பிள்ளைவாதம், தொற்றுத் தோல்நோய் , அடைப்பான் நோய், டூலரீமியா நோய், தொழுநோய் மற்றும் காசநோய் உள்ளிட்ட குறைந்தது 65 நோய்களை மனிதர்களுக்குப் பரப்புவதாக வலுவாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஈக்கள் எங்கு ஓய்வெடுக்கிறதோ அங்கெல்லாம் மீண்டும் எழுந்து வெளியேறி, அதன் மூலம் நோய்க்கிருமிகளை இயந்திரத்தனமாகப் பரப்புகின்றன. எனவே, இவைகளை வீட்டுக்குள் கட்டுப்படுத்துவது அவசியமானது.

இதையும் படியுங்கள்:
"ஐயோ, முட்டைக்கோஸா?" என்பவர்கள் இதை அவசியம் தெரிஞ்சுக்கணும்!
Houseflies

உணவு ஆதாரங்கள் குறைவாக இருந்தால் ஈக்கள் அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்ய முடியாது. உரம், குப்பை, புல் வெட்டுக்கள், களைக் குவியல்கள் அல்லது பிற அழுகும் கரிமப் பொருட்கள் போன்ற பொருட்களைக் குவிக்க அனுமதிக்காதீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com