குவைத்தில் 5 லட்சம் மக்களை வாட்டி வதைக்கும் சைலன்ட் கில்லர்!

Good Sleep
Good Sleep
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

'உறக்கம் ஒரு ஆடம்பரம் அல்ல; உடல் நலத்திற்கான அவசியம்' என்று எச்சரிக்கிறார் குவைத்தின் முபாரக் அல்-கபீர் மருத்துவமனை மற்றும் குவைத் உறக்க மருத்துவ மையத்தின் மூத்த நிபுணர் டாக்டர் முகம்மது அப்துல் சலாம். ஐம்பது லட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்தில், சுமார் 5 லட்சம் மக்கள் உறக்கக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவிக்கிறார்.

இந்த ஆண்டில் மட்டும் குவைத் உறக்க மருத்துவ மையத்தில் 2500 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக உறக்கம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தூக்கக் கோளாறுகள் பெரும்பாலும் உடல் மற்றும் மனநிலை சார்ந்தவை என்பதால், நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆகவேதான், உறக்க மருத்துவ மையத்தில் மூச்சுக்குழாய், நரம்பியல் மற்றும் மனநல நிபுணர்கள் இணைந்து பணியாற்றுவதாக டாக்டர் சலாம் கூறினார்.

குவைத் உறக்க மருத்துவ மையத்தில் தூக்கம் தொடர்பான பிரச்னைகளோடு வரும் நோயாளிகள் சிறப்பு வசதிகளுடன் கூடிய அறைகளில் உறக்க ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நோயாளிகள். அந்த அறைகளில் கேமரா மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பதால், நோயாளியின் உடல் அசைவுகள், மூச்சுத் துடிப்பு, மற்றும் இதய இயக்கம் போன்றவை பதிவு செய்யப்பட்டு, துல்லியமான நோய்கள் கண்டறியப்படுகின்றன.

குவைத்தில் அதிகம் காணப்படும் தூக்கம் தொடர்பான கோளாறுகளைப் பட்டியலிடுகிறார் டாக்டர் சலாம்:

  • 30% நோயாளிகளுக்கு இன்சோம்னியா என்ற தூக்கமின்மை.

  • 20% நோயாளிகளுக்கு ஸ்லீப் ஆப்னியா என்ற உறக்கத்தடுப்பு.

  • உறக்கச் சுழற்சி கோளாறு, தூக்கத்தின் போது நடப்பது, சாப்பிடுவது, கத்துவது போன்ற அசாதாரண நடத்தைகள்.

  • நார்கோலெப்சி, மூச்சுத் தடுமாற்றம், இடைவேளையுடன் கூடிய தூக்கம்.

இப்படி பலதரப்பட்ட தூக்கம் தொடர்பான பிரச்னைகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா? அந்த தவிப்புக்குப் பின் இத்தனை உண்மைகளா?
Good Sleep

'உறக்கம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் சுமார் 25–30% நேரம் பிடிக்கிறது. அது உடலின் நச்சு நீக்கமும், சீரமைப்பும் நடக்கும் முக்கியமான கட்டமாகும். உறக்கக் குறைபாடு அதிக எடை, உயர் இரத்த அழுத்தம், மனநிலை குறைபாடு, பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது,' என அவர் எச்சரிக்கிறார்.

மேலும், 'பல உறக்கக் கோளாறுகள் மனநலத்துடன் தொடர்புடையவை. தூக்கத்தின் போது கனவு காணுதல், நடப்பது போன்றவை தூங்கும் மூளை மற்றும் செயல்படும் உடல் இடையேயான ஒத்திசைவு கோளாறுகள் ஆகும். எனவே நோயாளிகளுக்கு மனநல மற்றும் நரம்பியல் மதிப்பீடுகள் அவசியம்,' என்று டாக்டர் சலாம் கூறுகிறார்.

நல்ல உறக்கத்திற்கான அவரது டிப்ஸ் பின்வறுமாறு:

  • தினமும் 7–9 மணி நேரம் உறங்க வேண்டும்

  • இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவதற்குச் சிறந்த நேரம்.

  • உறங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் உணவு சாப்பிடக்கூடாது.

  • உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் மொபைல் மற்றும் டிவி திரைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

  • உடற்பயிற்சி மற்றும் சீரான உணவு பழக்கம் கடைப்பிடிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ராத்திரி தூக்கம் வரலையா? உங்க கிட்னி உங்களுக்குக் கொடுக்கும் வார்னிங் இதுவா இருக்கலாம்!
Good Sleep

'நல்ல உறக்கம் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அடிப்படைத் தூண் ஆகும். அதை ஒரு ஆடம்பரம் என ஒரு போதும் நினைக்காதீர்கள். அல்லது நேர விரயம் என்று சொல்லி தூக்கத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். மனித வாழ்க்கையின் ஒரு அவசியம் எனக் கருதுங்கள்,' என டாக்டர் முகம்மது அப்துல் சலாம் வலியுறுத்துகிறார்.

logo
Kalki Online
kalkionline.com