யார் யார் எந்தெந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்?

Avoid these food
Avoid these food
Published on
  • அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய், எண்ணெயில் பொரித்த பலகாரங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

  • பெண்கள் மாதவிலக்கு சமயங்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

  • தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, கடல் உணவுகள், அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.

  • ஆஸ்துமா, சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

  • மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், அசைவ உணவு ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.

  • ஒரு முறை மாரடைப்பு வந்தவர்கள் கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய், நெய், எருமைப்பால், டால்டா, பாமாயில், கடலை எண்ணெய், ஊறுகாய்கள், இறைச்சி ஆகியவற்றை தொடவே கூடாது.

  • நீரிழிவு நோயாளிகள் வெள்ளை அரிசி, பிரெட், பாஸ்தா, தானியங்கள், பிஸ்கட் மற்றும் வேகவைத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், உலர் பழங்கள் ஆகியவற்றை தொடவே கூடாது.

  • கர்ப்பிணிகள் பெரிய அளவில் உள்ள மீன்கள் மற்றும் கடல் உணவுகள், கத்தரிக்காய், அஜினோமோட்டோ, நூடுல்ஸ், ஃபிரைட் ரைஸ் போன்ற துரித உணவுகள், அதிக அளவிலான காஃபி போன்ற உணவுகளை தவிர்த்தல் நல்லது.

  • வயதானவர்கள் இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு சுவைகளை வயோதிகத்தில் குறைத்துக்கொள்ள வேண்டும். வெண்ணெய், நெய், எருமைப்பால், டால்டா, பாமாயில், இறைச்சி போன்றவற்றை தொடாமலே இருப்பது நல்லது.

    முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாறு குடிக்க சரியான வேளை எது?
Avoid these food

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com