Richest states in India 
பொருளாதாரம்

இந்தியாவின் 5 பணக்கார மாநிலங்கள்!

A.N.ராகுல்

இந்தியாவின் வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமக்களின் உழைப்பும் இருக்கிறது. அதற்கு உறுதுணையாக எல்லா மாநிலங்கள் இருந்தாலும், அதில் சில மாநிலங்கள் தங்களின் சிறந்த திட்டங்களால் நாட்டின் அதிக செல்வம் புரளும் சிறந்த இடங்களாக திகழ்கின்றன. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பணக்கார மக்கள் கொண்ட முதன்மை மாநிலங்கள்:

1. மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா, குறிப்பாக அதன் தலைநகர் மும்பை, பெரும்பாலும் இந்தியாவின் அதிக நிதி புரளும் மையமாக கருதப்படுகிறது. நாட்டிலேயே மிக உயர்ந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP)(Gross State Domestic Product) செய்யும் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனால் இது, மிகப்பெரிய வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களை காந்தம் போல் முதலீடு செய்ய ஈர்க்கிறது.

2. தமிழ்நாடு: வலுவான தொழில்துறை தளத்திற்கு பெயர் பெற்ற தமிழ்நாடு, தனிநபர் வருமானம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் உயர்ந்த இடத்தில் உள்ளது. ஆட்டோமொபைல் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜவுளி போன்ற துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இது அதன் செல்வத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.

3. கர்நாடகா: இந்தியாவின் சிலிக்கான் வேலி (Silicon Valley) என்று கூறப்படும் பெங்களூரு, இந்த மாநிலத்தின் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையில் ஒரு அதிகார மையமாக உள்ளது. தொழில்நுட்பத் துறையில் புதுமையான விஷயங்களை புகுத்துவது இந்த மாநிலத்திற்கு ஒரு தனிப்பெரும் அந்தஸ்தை தருகிறது.

4. குஜராத்: வணிக-நட்பு கொள்கைகள் மூலம் குஜராத், இந்தியாவின் முக்கியமான வர்த்தக மையமாக மாற்றியுள்ளது. பெட்ரோ கெமிக்கல்ஸ்(Petrochemicals), டெக்ஸ்டைல்ஸ்(Textiles) மற்றும் வைரம்(Diamonds) போன்ற தொழில்களில் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது. இதுவே அதன் உயர் பொருளாதார நிலைக்கு பங்களிக்கிறது.

5. டெல்லி: தேசிய தலைநகரான, டெல்லி அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தின் அதிக சக்தியுடன் ஒரு தனித்துவமான இடத்தைப் பெறுகிறது. ரியல் எஸ்டேட், சில்லறை வணிகம் மற்றும் அனைத்து அரசு சேவைகள் உள்ளடக்கிய துறைகளை கையாளுவது போன்ற விஷயங்களால், அதன் பொருளாதாரத்தை உயர்த்தி காட்டுகிறது.

இந்த செல்வத்திற்கு பங்களிக்கும் காரணங்கள்:

1. உள்கட்டமைப்பு மேம்பாடு: போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்ட வலுவான உள்கட்டமைப்பு, முதலீடுகளை ஈர்ப்பதிலும் பொருளாதார நடவடிக்கைகளை வளர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நன்கு வளர்ந்த உள்கட்டமைப்பு கொண்ட மாநிலங்கள் அதிக பொருளாதார ஈட்டுவதிலும் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதிலும் பங்களிக்கிறது.

2. கல்வி மற்றும் திறன் மேம்பாடு: கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் முதலீடு செய்வது இந்த செல்வம் மிகுந்த மாநிலங்களில் உள்ள பொதுவான பண்பு. இது நன்கு படித்த பணியாளர்கள் வரவும், தேவையான அதிக ஊதியம் பெறவும் வழிவகை செய்கிறது.

3. வணிக நட்புக் கொள்கைகள்: குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் தொழில் முனைவோர் மற்றும் எல்லோரும் எளிதாக வணிகம் செய்வதை ஊக்குவிக்கும் கொள்கைகளை அமல்படுத்தியுள்ளன. இந்த கொள்கைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்க்கின்றன.

4. சிறந்த திட்டங்கள்: மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் கையாளப்படும் வர்த்தகங்கள், முக்கிய பாதைகள் மற்றும் துறைமுகங்களுக்கு அருகாமையில் இருப்பது, அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேன்மேலும் மேம்படுத்துகிறது.

எனவே மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் இந்தியாவின் செல்வந்தர்கள் நிறைந்த மாநிலங்களாக திகழ்வதற்கு, தொழில்மயமாக்கல், உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி, வணிக நட்பு கொள்கைகள் மற்றும் சிறந்த திட்டங்கள் ஆகியவற்றின் கலவைதான் காரணமாகும். இதுவே மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வருமானத்திற்கான உகந்த சூழலையை உருவாக்கி, இந்த மாநிலங்களை நாட்டின் செல்வம் மிகுந்த இடமாக காட்டுகிறது.

மக்காச்சோளம் Vs ஸ்வீட் கார்ன்: உடலுக்கு ஆரோக்கியம் தருவது எது?

கர்ணன் கற்றது வில் வித்தையல்ல; வேத வித்தை!

நீண்ட ஆயுள் பெற விரும்புவோர் கவனிக்கவேண்டிய 6 விஷயங்கள்!

அளவில் சின்னது, எடையில் பெரியது… அது என்னது? 

பேருதான் மூக்குச்சளி… ஆனால், ஆரோக்கியம் அப்பப்பா! 

SCROLL FOR NEXT