Shreegopika 
சின்னத்திரை / OTT

அன்பே வா சிரீயல் நடிகைக்கு விரைவில் டும்டும்டும்... மாப்பிள்ளை இந்த நடிகரா?

விஜி

பிரபல நடிகையும் மாடலுமான ஸ்ரீ கோபிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

சின்னத்திரையில் வலம் வரும் நடிகர் நடிகைகள் பலரும் வெள்ளித்திரை நடிகர், நடிககைகளை திருமணம் செய்து சினிமா ஜோடியாக வலம் வருவது வழக்கம் தான் தற்போது அந்த வரிசையில் பிரபல சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவும் இணைந்துள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீ கோபிகா ஓவியா நடித்த 90ML படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து Wolf என்ற படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து மாடலிங் செய்து வந்த அவர், சன் டிவியில் ஓளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ஸ்ரீ கோபிகா.

சுந்தரி சீரியலில் சுந்தரிக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதுபோல அணுவிற்கு அதிகமான முக்கியத்துவம் இருந்தது. ஆனால் சமீபத்தில் அவர் சீரியலில் இறந்து போய்விட்டார் என்று கதை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீ கோபிகா தான் சுந்தரி சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதனால் மீண்டும் அவர் சீரியலில் வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு வெளியான அன்பே வா சீரியலிலும் முக்கிய கேரக்டரில் கோபிகா நடித்திருந்த நிலையில் அந்த சீரியலும் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீ கோபிகாவுக்கும் நடிகர் வைசாக் ரவி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 2016 முதல் எனது நண்பராக, காதலனாக இருக்கும் வைசாக் உடன் மகிழ்ச்சியாக அதிகாரப்பூர்வமாக நிச்சயம் செய்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். இவரது திருமண தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள ஸ்ரீகோபிகா - வைசாக் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இவர்களின் நிச்சயதாரத்த புகைபப்டங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT