Vanitha Vijayakumar 
சின்னத்திரை / OTT

பிக்பாஸ் 8ல் இவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நான்தான் – வனிதா விஜயகுமார்!

பாரதி

பிக்பாஸ் சீசன் 8 தொடர் ஆரம்பமாகி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அந்தவகையில் வனிதா இந்த சீசனில் ஒருவருக்குத் தான்தான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார்.

வனிதா விஜயகுமார் 1995ம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். ஆனால், அதன்பின்னர் அவ்வளவாக சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் குடும்பத்துடன் நேரம் செலவிட்டார். ஆனால், குடும்ப வாழ்க்கையும் அவருக்கு அவ்வளவு சரியாக அமையவில்லை. மேலும் தந்தை விஜயகுமாருடன் போட்ட சண்டையில் தமிழக மக்களிடையே பெரிய அளவு பேசப்பட்டார். பின்னர் விஜய் டிவியின் பிரபலமான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு 2007 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதன்பின்னர் 2007ம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்துக்கோண்டு 2012ம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் பீட்டர் பால் இறந்துவிட்டார்.

வனிதாவிற்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இருக்கும் போட்டோ வைரலானது. அடுத்த திருமணம் என்று அனைவரும் விமர்சிக்கும்போது அவர் புதிய படம் என்று அறிவித்தார்.

இந்தநிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பமானது, இதுகுறித்து வனிதா விஜயகுமார் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.  ரவீந்திரனுக்கு பிக் பாஸ் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது நான் தான். அவர் எனக்கு கால் செய்து என்னை அழைத்து எனக்கு ரெக்கமண்டேஷன் கேட்டார். கடந்த இரண்டு வருடங்களாக அழைப்பு வந்தும் அவரால் போக முடியாமல் இருந்தது. இந்த டைமில் அவருக்கு போக வேண்டும் என ஆசை வர பின்னர் அவர் எனக்கு போன் செய்து என்னிடம் உதவி கேட்டார் என்று பேசினார்.

அதற்கு ரசிகர்கள் விட்டா விஜய் சேதுபதிக்கே நான்தான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன் என்று சொல்வார்போல என்று விமர்சித்து வருகின்றனர்.

உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!

பேச்சுத் திணறல் காரணங்களும் அவற்றை எதிர்கொள்ளும் விதங்களும்!

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

SCROLL FOR NEXT