Siragadikka Aasai 
சின்னத்திரை / OTT

பணத்துக்கு டைம் கேட்ட ரோகினி... முத்து என்ன சொன்னார் தெரியுமா?

விஜி

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னனி இடத்தை பிடித்து வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பான கதை களத்தை எட்டியுள்ளது.

கடந்த வாரம் சீரியலில் முத்துவின் பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம் இருந்தது. மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று ஏமாந்து விட்டார். இதனால் விஜயா, மீனாவின் நகையை கொடுத்தார். ஆனால், விஜயா அடமானம் வைக்காமல் விற்று விட்டார்.

இதனால் வீட்டில் கலேபரமாக மனோஜ் உண்மையை ஒப்புக்கொண்டார். அவருக்கு பின் விஜயா இருப்பதையும் குடும்பத்தினர் தெரிந்துகொள்ள அண்ணாமலை மனோஜை புரட்டி எடுக்கிறார். அதோடு அண்ணாமலை, விஜயாவிடம் இனி பேச மாட்டேன், தண்ணீர் கூட உன்னிடம் வாங்கி குடிக்க மாட்டேன் என கூறுகிறார். உடனே விஜயா அறைக்கு சென்றவர் தான் வெளியே வரவில்லை.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் முத்து விஜயா வளையலை தூக்கி வீசியதால் கோபப்பட விஜயா என்னடா பண்ணுவ தலையை எடுத்துடுவியா என்று கேட்கிறார். உன் பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்கிறார். அண்ணாமலை இதுக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்க சொல்ல விஜயா முடியாது என ரூமுக்குள் செல்கிறார்.

இதனால் மீனா கலங்கி நிற்க முத்து அவங்க வெளியவே வர ஏதாவது பண்ணுங்கன்னு சொன்னல.. உன்னை வச்சு பண்ணிட்டாங்க போதுமா என்று கேட்கிறார்.

அடுத்ததாக ரோகினி ஆண்ட்டியை போய் மீனா கிட்ட மன்னிப்பு கேட்க சொன்னா எப்படி கேட்பாங்க என்று சொல்ல எல்லாத்துக்கும் காரணம் மனோஜ் தான்.. அன்னைக்கே உண்மையை சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என சொல்கிறார் ரவி.

முத்து நகைக்கான 4 லட்சம் ரூபாய் பணம் எனக்கு வேண்டும் என்று சொல்ல மனோஜ் என்கிட்ட இப்போ அவ்வளவு பணம் எல்லா இல்லை என்று சொல்ல ரோகினி வளையலை ஆண்ட்டி கிட்டயே கொடுத்துடுறேன் என்று சொல்கிறார். ஸ்ருதி அப்போ இவங்களோட பணம் என்று கேட்க அதை நாங்க கொடுத்துடுறோம்‌. கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க என்று சொல்ல முத்து உன்னை நம்பி டைம் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

அடுத்ததாக ரோகிணி வளையலை கொண்டு வந்து கொடுக்க இதை எதுக்கு எடுத்துட்டு வந்த? அவ கிட்டயே கொடுக்க வேண்டியது தானே என்று சொல்ல ரோகிணி தப்பு பண்ணது மனோஜ்.. அதை அவன் தான் சரி செய்யணும், பணத்தை நாங்க கொடுத்துக்கிறோம் என்று சொல்கிறார்.

அடுத்து மனோஜ் மன்னிப்பு கேட்க உன்னால நடுத்தெருவில் தான் நிக்கணும் போல என்று சொல்ல நான் இருக்கும் போது ஏன் மா இப்படி பேசுறீங்க என்று கேட்க நீ இருக்கிறது தான் அவளோட பயமே என்று பார்வதி பதிலடி கொடுக்கிறார்.

பிறகு மனசு கஷ்டமாக இருப்பதாக பார்வதியும் விஜயாவும் கோவிலுக்கு வருகின்றனர். அப்போது பார்வதி அண்ணன் நீ மன்னிப்பு கேட்டா தான் பேசுவேனு சொன்னா என்ன பண்ணுவ என்று கேட்க அப்படினா அவர் பேசவே வேண்டாம் என்று சொல்கிறார். சுதா கோவிலுக்கு வர வெறும் கையாக இருப்பதை பார்த்து வீட்ல ஏதாவது பிரச்சனையா?என கேட்க இல்லை என சமாளிக்கிறார். அண்ணாமலை முத்து, மீனாவிடம் விஜயாவுக்காக மன்னிப்பு கேட்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

SCROLL FOR NEXT