Siragadikka Aasai 
சின்னத்திரை / OTT

"நீ சமைச்சாலே நல்லாதான் இருக்கும்"... மீனாவை ஐஸ்வைத்த முத்து!

விஜி

விஜய் டிவியின் டிஆர்பியில் முன்னனி இடத்தை பிடித்து வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வார புரோமோ வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் சீரியலில் முத்துவின் பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம் இருந்தது. மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று ஏமாந்து விட்டார். இதனால் விஜயா, மீனாவின் நகையை கொடுத்தார். ஆனால், விஜயா அடமானம் வைக்காமல் விற்று விட்டார். இதனால் வீட்டில் கலேபரமாக மனோஜ் உண்மையை ஒப்புக்கொண்டார். அவருக்கு பின் விஜயா இருப்பதையும் குடும்பத்தினர் தெரிந்துகொள்ள அண்ணாமலை மனோஜை புரட்டி எடுக்கிறார். அதோடு அண்ணாமலை, விஜயாவிடம் இனி பேச மாட்டேன், தண்ணீர் கூட உன்னிடம் வாங்கி குடிக்க மாட்டேன் என கூறுகிறார். உடனே விஜயா அறைக்கு சென்றவர் தான் வெளியே வரவில்லை.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சின்ன சின்ன அழகான விஷயங்கள் நடந்துள்ளது. பாட்டி மகன், பேரன்களுடன் சாப்பிடும்போது தனது காதல் கதையை கூறுகிறார். பின் மனோஜ் நகைக்கு செல்ல கைக்கு கிடைத்த கடிதத்தை கண்டு பயப்படுகிறார், ஆனால் ரோஹினி இதெல்லாம் யாரோ உண்மையை ஏமாற்ற செய்வது என கூறி ஆறுதல் செய்கிறார். இன்னொரு பக்கம் முத்து-மீனா 2வது காரை வாங்கி வீட்டிற்கு வருகிறார்கள். பாட்டி, அண்ணாமலை என எல்லோரும் சந்தோஷப்பட விஜயா வழக்கம் போல் பேசுகிறார். இதனால் அவர் பாட்டியிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.

இப்போது கதையில் நகை பிரச்சனை ஒருவழியாக முடிந்துள்ளது. அடுத்து ஸ்ருதி குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரச்சனை வரும் என தெரிகிறது. இன்னொரு பக்கம் மனோஜ் கைக்கு கிடைத்த கடிதம் யார் அனுப்பியது என்ன பிரச்சனை வரப்போகிறது என்பது தெரியவில்லை.

தற்போதைய கதையில் மனோஜ் ஒருபக்கம் சாமியார் சொன்னார் என ஒவ்வொரு கிழமைகளிலும் நிறம் மாற்றி ஆடை அணிவது, தினமும் சாமி கும்பிடுவது என காமெடி செய்து வருகிறார். இன்னொரு பக்கம் மீனாவுடன் பூ வியாபாரம் செய்பவர்கள் மீனாவிடம் உன் கணவருக்கு பெசரட்டு சுட்டு கொடு ஏதாவது கூறுகிறாரா பார்ப்போம் என்று ரூ.50 பந்தயம் வைக்கிறார்கள்.

இன்றைய எபிசோடில் ஆசை ஆசையாக மீனா முத்துவிற்கு தோசை வைக்க அவர் எதுவும் கூறாமல் கிளம்பிவிடுகிறார். ஆனால் வீட்டில் சாப்பிட்டவர்கள் அனைவருமே நன்றாக இருப்பதாக பாராட்டினார்கள். தற்போது வெளியாகியுள்ள சிறகடிக்க ஆசை கியூட் புரொமோவில், வீட்டிறகு வந்த முத்துவை தோசை சுட்டு கொடுத்தது குறித்து சண்டை போடுகிறார். அவரோ மீனாவிற்கு ஒரு புடவை வாங்கி வந்திருக்கிறார். பின் மீனாவை சமாதானம் செய்ய ஆசையாக பேசி அவரை சிரிக்க வைக்கிறார். இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

அதிகமாக டிரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்!

மூட்டு வலி மற்றும் வீக்கத்துக்கு முடிவு கட்ட முன்னெடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள்!

நிலவின் வெப்பநிலை சரிந்தது எப்படி தெரியுமா?

டிஜிட்டல் திரையுலகில் குழந்தைகளை பாதுகாப்பாக வழிநடத்தும் முறைகள்!

தூக்கணாங்குருவிகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள் - கட்டிடக்கலை வல்லுநர்!

SCROLL FOR NEXT