Vadivelu & Sundar C 
வெள்ளித்திரை

மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி... ரசிகர்கள் உற்சாகம்!

விஜி

ரசிகர்களின் பேவரைட் கூட்டணியாக வடிவேலு, சுந்தர் சி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாகவே ரீ-ரிலீஸ், மற்ற மொழிப் படங்கள் மட்டுமே ஹிட் அடித்து வரும் நிலையில், தற்போது அரண்மனை 4 படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்தனர். சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த மூன்றாம் தேதி ரிலீஸானது அரண்மனை 4. இதில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகிபாபு, VTV கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதற்கு முன்பு வெளியான அரண்மனை படத்தின் மற்ற பாகங்களை விடவும் இந்தப் படம் அருமையாக வந்திருப்பதாக ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களைக் கூறி வருகின்றனர். இப்படி விமர்சன ரீதியாக பட்டையை கிளப்பிய அரண்மனை 4 திரைப்படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. 90களில் ஆரம்பித்த இவரது இயக்குநர் பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கும் சுந்தர்.சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப காலமாகவே பழைய சுந்தர்.சி எங்கே சென்றார், அன்பே சிவம் போன்ற படங்கள் ஏன் எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இயக்குநராக இருந்த சுந்தர்.சி நடிப்பின் பக்கமும் சென்றார். அந்த வகையில் அவர் நடித்த ‘தலைநகரம்’ உள்ளிட்ட படங்களும் ஹிட்டடித்திருக்கின்றன. இருந்தாலும் அவர் தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும் என்று சினிமா ரசிகர்கள் கூறிக்கொண்டிருந்தனர். அதனையடுத்து சில காலம் கழித்து ‘கலகலப்பு’ படம் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்தார் சுந்தர்.சி. அந்தப் படம் மெகா ஹிட்டானது.

காமெடிக்கு பெயர் போன சுந்தர்.சியின் படங்கள் அனைத்தும் ரசிகர்களின் பேவரைட் தான். அப்படி சுந்தர்.சி, வைகை புயல் வடிவேலு கூட்டணியில் நிறைய படங்கள் வெளியாகியுள்ளது. வின்னர் முதல் நகரம் வரை சுந்தர்.சி காமெடிக்கு இன்னும் வரவேற்பு உள்ளது. இதனால் தமிழ் சினிமாவின் சக்சஸ்புல் காம்போவாக சுந்தர்.சி - வடிவேலு கூட்டணி திகழ்ந்து வந்தது.

கலகலப்பு 3 பட பணிகளை முடித்த பின்னரே வடிவேலு நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பை சுந்தர்.சி தொடங்குவார் என கூறப்படுகிறது. தற்போது வடிவேலு கைவசம் மாரீசன் என்கிற படம் உள்ளது. இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் உடன் இணைந்து நடித்து வருகிறார் வடிவேலு. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்ததும் இப்படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

ஒரே நாளில் மூன்று விதமான கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்!

ஃபேஸ்பேக்கை நீண்ட நேரம் முகத்தில் வைத்திருப்பீர்களா? போச்சு!

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் 4 வகையான விஷப்பாம்புகள்!

60 வயதுக்குப் பின்னர் நிம்மதியாக வாழ வேண்டுமா? இதை முதல்ல படிங்க!

உலகின் 5 நீளமான நதிகள்!

SCROLL FOR NEXT