company culture  https://www.linkedin.com
கலை / கலாச்சாரம்

நிறுவன கலாசார தினத்தைக் கொண்டாடுவதன் முக்கியத்துவம் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

வ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18 அன்று உலகளாவிய நிறுவன கலாசார தினம் கொண்டாடப்படுகிறது. இது ஊழியர்களின் உற்பத்தி திறன் மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்துவதில் பணியிடக் கலாசாரத்தின் முக்கியப் பங்கைக் குறிக்கிறது. நிறுவன கலாசார தினத்தை, நிறுவனங்கள் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

மதிப்புகளை வலுப்படுத்துகிறது: நிறுவனத்தின் முக்கிய மதிப்புகளை ஊழியர்களுக்கு நினைவூட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக செயல்படுகிறது நிறுவன கலாசார தினம். அந்த தினத்தை கொண்டாடுவதன் மூலம் இந்த நிறுவனம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது, அதனுடைய இலக்கு, கலாசாரம் போன்றவற்றைப் பற்றி ஊழியர்கள் நன்றாக அறிந்திருப்பதுடன் நிறுவனத்தின் இலக்குகளுடன் அவர்கள் இணைந்திருப்பதை இந்த தினம் உறுதி செய்கிறது.

பணியாளர்கள் ஈடுபாட்டை அதிகரிக்கிறது: தங்கள் நிறுவனம் அதன் கலாசாரத்தை மதிப்பது மற்றும் அதில் முதலீடு செய்வதை பார்க்கும்போது ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தின் மேல் மரியாதை செலுத்துவார்கள். நிறுவனத்தின் வளர்ச்சியின் மேல் அவர்கள் ஈடுபாடு செலுத்துவார்கள். இந்த உணர்வு அவர்களை நன்றாக வேலை செய்ய வைக்கும். திருப்தியான உற்பத்தித்திறன் கிடைக்கும்.

குழு ஒற்றுமை: நிறுவனத்தின் கலாசார தினம் ஊழியர்களின் ஒற்றுமை மற்றும் குழுப்பணி உணர்வை வளர்க்கும். இது பணியாளர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய அமைப்பில் தொடர்பு கொள்ள ஒரு தளத்தை வழங்குகிறது. உறவுகளை வலுப்படுத்தவும் அவர்களுடனான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முடியும்.

நேர்மறையான உந்துதல்: நிறுவனம் ஒரு நேர்மறையான கலாசாரத்தை கொண்டாடுவதன் மூலம் அதன் பணியாளர்களுக்கு அந்த உணர்வை தோற்றுவிக்க முடியும். அவர்களும் நிறுவனத்தின் கலாசாரத்தை தீவிரமாக வளர்ப்பதற்கு பாடுபடுவார்கள். அதைக் கொண்டாடவும் செய்வார்கள். மேலும் இந்த நிறுவனத்திலேயே தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்கிற உந்துதல் அவர்களுக்கு அதிகரிக்கும்.

திறந்த தொடர்பை ஊக்குவிக்கிறது: நிறுவன கலாசார கொண்டாட்ட நிகழ்வுகள் தலைமைத்துவத்திற்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. மேலும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய நிறுவனத்தின் கலாசாரம் குறித்த ஊழியர்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு மன்றமாக செயல்படுகிறது.

அங்கீகாரம் மற்றும் பாராட்டு: கலாசார தினத்தை கொண்டாடுவது பெரும்பாலும் ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது. மேலும் அவர்களை பாராட்டுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. இது ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்கவும், நேர்மறையான நடத்தைகளை வலுப்படுத்தவும் செய்யும்.

நிறுவனத்தின் அடையாளம்: நிறுவனம் தன்னுடைய தனித்துவமான அடையாளத்தையும் மற்றவர்களிடமிருந்து தாங்கள் எப்படி வேறுபட்டு நிற்கிறோம் என்பதைக் காட்டுவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. உள் மற்றும் வெளிப்புறமாக வலுவான பிராண்டை உருவாக்க இது ஒரு சக்தி வாய்ந்த கருவியாக இருக்கும்.

கற்றல் மேம்பாடு: பெரும்பாலும் நிறுவன கலாசார நிகழ்வுகளில் பேச்சுப் பட்டறைகள், செயல்பாடுகள் கருத்தரங்கங்கள் இருக்கும். அவை ஊழியர்களுக்கு, நிறுவனத்திற்கு கலாசாரம் தொடர்பான புதிய திறன்கள் அல்லது நுண்ணறிவை வழங்குகின்றன. அவர்களின் தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்துகின்றன.

புதுமையை வளர்க்கிறது: ஒரு நேர்மறையான கலாசாரம் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கிறது. அதைக் கொண்டாடி வளர்ப்பதன் மூலம் புதிய யோசனைகள் வரவேற்கப்படும் மற்றும் மதிக்கப்படும் சூழலையும் உருவாக்குகிறது.

இந்த நாளில் ஊழியர்களை அவர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து வரச் செய்து ஒரு சிறிய உலக சுற்றுலா பயணத்தைப் போல அமைக்கலாம். ஒவ்வொருவரும் தங்கள் பாரம்பரிய ஆடையை அணியும்போது அது துடிப்பான குழுவை உருவாக்கும். தனித்துவமான அடையாளங்களை பறைசாற்றும். மேலும் அர்த்தமுள்ள உரையாடல் மேடைகளை அமைக்கலாம்.

மொத்தத்தில் நிறுவனத்தின் கலாசார தினம் என்பது முக்கியமான நிகழ்வாகும். அது நிறுவனத்தின் தனித்தன்மையையும், அதன் வெற்றியை மேலும் அதிகரிப்பதற்கும் ஊழியர்கள் புத்துயிர் பெறுவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT