Nature 
பசுமை / சுற்றுச்சூழல்

இயற்கையைப் போற்றிக் காத்திட 13 கட்டளைகள்!

செ. கலைவாணி

எல்லோர்க்கும் பொதுவாய்

இயங்குது இயற்கை.

இயற்கைக்கு இடையூறு

இழைக்காமல் தவிர்த்திடுக...

1. நெகிழி பயன்பாட்டை

நீக்கியே ஒழித்திடுக.

2. உயிர்வளி நல்கும்

உயர்மரத்தை வெட்டாதீர்.

3. மழைநீரைச் சேகரித்து

மண்ணிற்குள் புகவிடுவீர்.

4. வயலில் இலைதழையை

உரமாக்கி மகிழ்ந்திடுக.

5. கழிவுநீர் ஆற்றில்

கலக்காது காத்திடுவீர்.

6. ஆழ்துளைகளால் மண் நீரை

அபகரித்து வீணாக்காதீர்.

7. கனிமவளம் தேடி

கற்பாறைகள் சிதைக்காதீர்.

8. ஆகாயத்தாமரை நீர்நிலைகளில்

வளரவிடாமல் செய்திடுக.

9. தாமரைக் குளங்களைத்

தரமாய்ப் பேணிடுக.

10. நீர்நிலை யோரங்களில்

பனைதனையே வளர்த்திடுக.

11. ஆற்று  வண்டல்மண்ணை

ஆழமாகக் களவாடாதீர்.

12. மரக்கன்றுகளை நடுக

மழைவளம் பேணுக

13. புள்ளினங்களைக் காத்தே

பூமியைச் செழிப்பாக்குக.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT