Unwanted grass cutting 
பசுமை / சுற்றுச்சூழல்

தேவையற்ற புற்களை அடிக்கடி களை எடுக்க வேண்டியுள்ளதா? சமாளிக்க என்னென்ன வழிகள் உள்ளன?

A.N.ராகுல்

தேவையற்ற புல் வளர்ச்சி ஒரு தொடர்ச்சியான பிரச்னையாக இருக்கலாம். ஆனால், அதைக் கட்டுக்குள் வைத்திருக்க பயனுள்ள சில முறைகள் உள்ளன. அதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

1. அகழி(குழி) விளிம்பு(Trench Edging):

உங்கள் தோட்டம் அல்லது மலர் படுக்கையின் எல்லை எதுவரை வளரும் என்று முதலில் புரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த எல்லையை சுற்றி ஒரு கோடு வரைவது போல 4 அங்குல அகலமும் 4 அங்குல ஆழமும்கொண்ட அகழி(குழி) தோண்டவும். அகழிக்குள் உள்ள புல்களை அகற்றிக்கொள்ளுங்கள். இதனால் தோட்டப் பகுதி மட்டும் தனியாக சுத்தமாகத் தெரியும். இது உங்கள் செடியை சுற்றி புற்கள் பரவி வளர்வதைக் கொஞ்ச நாட்கள் தடுக்கும். அகழியின் விளிம்பு திட்டம் பயனுள்ளதாக இருக்க வழக்கமான பராமரிப்புத் தேவை என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2. இயற்கையான களைக்கொல்லிகள்:

ஆர்கானிக் தோட்டக்கலையை நீங்கள் விரும்பினால், இயற்கையான களைக்கொல்லிகளைப் பயன்படுத்தவும்.

பேக்கிங் சோடா: நீங்கள் அழிக்க விரும்பும் புல் மீது நேரடியாக தெளிக்கவும். அதிகமாக பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள், ஏனெனில் இது மண்ணின் pH ஐ மாற்றும்.

வினிகர்: ஒரு வெயில் நாளில் தேவையற்ற புல் மீது வினிகர் தெளிக்கவும். இந்தப் பொருட்கள் மற்ற தாவரங்களையும் பாதிக்கலாம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். எனவே கவனமாகப் பயன்படுத்துங்கள்.

3. தழைக்கூளம் மற்றும் தடுப்பு முறைகள்:

செயற்கையான ஒரு அடுக்கை உண்டாக்குங்கள்:

தழைக்கூளம் (Mulching): தழைக்கூளம் என்பது சாம்பல், பழைய கிளைகள் மற்றும் மரப்பொருட்களின் தூள்கள். இவை சூரிய ஒளியைத் தடுத்து விதைகள் முளைப்பதைத் தடுப்பதன் மூலம் புல் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

அட்டை: புல் வளரக் கூடாத இடத்தில் அட்டையை மண்ணின் மேல் வைக்கவும். இது புல் வளர தடையாக செயல்படுகிறது.

லேண்ட்ஸ்கேப் ஃபேப்ரிக்(Landscape Fabric): அட்டைப் பெட்டியைப் போலவே, இயற்கைத் துணியும் புல் வளரவிடாமல் தடுக்கிறது.

4. சூரியமயமாக்கல்:

இந்த இயற்கை முறையானது புல் மற்றும் களைகளை அழிக்க சூரிய ஒளியைப் பயன்படுத்துகிறது.

இடத்தை சுத்தம் செய்யுங்கள்: ஏற்கனவே உள்ள புல் அல்லது களைகளை அகற்றவும்.

மண்ணுக்கு நீர் பாய்ச்சவும்: மண்ணை ஈரப்படுத்தி ஒரு பெரிய, சுத்தமான பிளாஸ்டிக்கால்(கனமான குப்பைப் பை போன்றவை) அந்த இடத்தை சுற்றி மூடி வைக்கவும். கனமான கற்களை அதன் விளிம்புகளில் வைத்து ஷீட் நகராமல் பார்த்துக்கொள்ளவும்.

சூரியன் அதன் மேஜிக்கை செய்யட்டும்: வெப்பமான காலநிலையில் பிளாஸ்டிக்கை 4-6 வாரங்களுக்கு அப்படியே வைக்கவும். சூரியனின் வெப்பம் பிளாஸ்டிக்கின் அடியில் வெப்பநிலையை உயர்த்தும். புல் மற்றும் களை விதைகளை உருவாகாமல் தடுக்கும்.

பிளாஸ்டிக்கை அகற்றவும்: முடிந்ததும், பிளாஸ்டிக்கை அகற்றி, உங்களுக்குத் தேவையான தாவரங்களை அந்த இடத்தில் கொஞ்ச நாட்களுக்கு தொட்டியில் வைத்து வளருங்கள்.

5. வழக்கமான பராமரிப்பு:

சீரான பராமரிப்பு அவசியம். புல் தோட்டத்துக்குள் படறாமல் தடுக்க உங்கள் புல்வெளியை தவறாமல் வெட்டவும். புல் டிரிம்மர் (Grass Trimmer) பயன்படுத்தி, நடைபாதைகள், ஓடுபாதை மற்றும் புல் வளரக் கூடாத பிற பகுதிகளிலிருந்து புல்லை வெட்டி விடுங்கள்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT