Let's make Kancheepuram sundal-poricha potato curry! Image Credits: YouTube
உணவு / சமையல்

நாவூர வைக்கும் காஞ்சிபுரம் சுண்டல்-பொரிச்ச கிழங்கு கறி செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

நாவூர வைக்கும் காஞ்சிபுரம் ஸ்பெஷல் சுண்டல் மற்றும் பொரிச்ச கிழங்கு கறி ரெசிபிஸை எப்படி வீட்டிலேயே செய்யலாம்னு பார்ப்போம்.

காஞ்சிபுரம் சுண்டல் செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்-2 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை- சிறிதளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

புதினா-சிறிதளவு.

இடித்து சேர்த்துக் கொள்ள,

சோம்பு-1 தேக்கரண்டி.

இஞ்சி-1 துண்டு.

பச்சை மிளகாய்-1

பூண்டு-4

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்-சிறிதளவு.

உப்பு- தேவையான அளவு.

பகோடா செய்ய,

வெங்காயம்-1

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

கடலைமாவு-2 தேக்கரண்டி.

அரிசிமாவு-2 தேக்கரண்டி.

உப்பு- சிறிதளவு.

பட்டாணி-1கப்.

அரிசி மாவு-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

காஞ்சிபுரம் சுண்டல் செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய்விட்டு சோம்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை கொத்தமல்லி, புதினா சிறிதளவு, சோம்பு 1 தேக்கரண்டி, இஞ்சி 1 துண்டு, பூண்டு 4, பச்சை மிளகாய் 1 இடித்து அதையும் சேர்த்துக் கொள்ளவும். இதில் சிறிது தண்ணீர் ஊற்றி பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது வெங்காயம் சிறிதாக வெட்டிக்கொண்டு அதில் கடலை மாவு 2 தேக்கரண்டி, அரிசி மாவு 2 தேக்கரண்டி சேர்த்து இத்துடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பிசைந்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். இதை செய்து வைத்திருக்கும் கலவையில் உதிர்த்து போடவும்.

இப்போது நன்றாக வேகவைத்த பட்டாணியை 1 கப் சேர்த்துக்கொள்ளவும். இப்போது அரிசி மாவு 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். சுண்டலை மந்தார இலையில் மடித்து பரிமாறவும். சுவையான காஞ்சிபுரம் பேமஸ் சுண்டல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

பொரிச்ச கிழங்கு கறி செய்ய தேவையான பொருட்கள்.

பாசிப்பருப்பு- ¼ தேக்கரண்டி.

உப்பு-சிறிதளவு.

மஞ்சள் தூள்- சிறிதளவு.

பேஸ்ட் செய்ய,

எண்ணெய்-2 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டிட்

உளுந்து-1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-1

துருவிய தேங்காய்-1 கப்.

கறி செய்வதற்கு,

எண்ணெய்- தேவையான அளவு.

கடுகு-1 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

உளுந்து -1 தேக்கரண்டி.

வெங்காயம்-1

தக்காளி-1

கருவேப்பிலை- சிறிதளவு.

உருளை-2

மஞ்சள் தூள்- சிறிதளவு.

உப்பு-சிறிதளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

பொரிச்ச கிழங்கு கறி செய்முறை விளக்கம்.

முதலில் குக்கரில் ¼ கப் பாசிப்பருப்பு சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர்விட்டு சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மூடிவைத்து மூன்று விசில் விட்டு எடுத்து பருப்பை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு சோம்பு 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 1 சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கியதும் மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வெங்காயம் 1, தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கவும். கருவேப்பிலை சிறிதளவு, சிறிதாக நறுக்கிய வேகவைத்த உருளை 2, மஞ்சள் தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் விட்டு 5 நிமிடம் நன்றாக வேகவைக்கவும்.

இப்போது வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்துவிட்டு அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். டேஸ்டியான பொரிச்ச கிழங்கு கறி தயார். இந்த சிம்பிள் ரெசிபியை நீங்களும் வீட்டிலேயே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

லெபனானிலிருந்த தென்கொரியர்களை விமானம் மூலம் மீட்ட தென்கொரியா அரசு!

மாயம் இல்லே… மந்திரம் இல்லே… கழுத்து வலியைப் போக்கும் எண்ணெய்கள்! 

குழந்தைகள் விரும்பும் பெற்றோர் ஆவது எப்படித் தெரியுமா?

SCROLL FOR NEXT