Masal Dosa Pizza  
உணவு / சமையல்

மசால் தோசை பீட்சா: புதுசா இருக்கே?

கிரி கணபதி

தோசை உணவு என்பது தென்னிந்தியாவின் அடையாளமாகும். குறிப்பாக தமிழகத்தில். அதுவும் மசால் தோசை என்றால் மேலும் பிரபலம். இதுவரை நீங்கள் எத்தனையோ விதமான தோசை சாப்பிட்டு இருப்பீர்கள். மசால் தோசை பீசா சாப்பிட்டதுண்டா? இந்தப் பதிவில் முற்றிலும் வித்தியாசமாக மசால் தோசை பீசா எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • தோசை மாவு - 2 கப்

  • வெங்காயம் - 1 (சிறியது, நறுக்கியது)

  • தக்காளி - 1 (சிறியது, நறுக்கியது)

  • பச்சை மிளகாய் - 2-3

  • கறிவேப்பிலை - சிறிது

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

  • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

  • கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • எண்ணெய் - தேவையான அளவு

  • சீஸ் - 100 கிராம் (துருவியது)

  • கொத்தமல்லி தழை - அலங்கரிக்க

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் தோசை மாவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். இதை அப்படியே 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். 

இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். அடுத்ததாக இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பின்னர், மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ளவும். 

இந்த மசாலா கலவையை தோசை மாவில் சேர்த்து கலக்குங்கள். இப்போது தோசை கல்லில் எண்ணெய் விட்டு, கலந்து வைத்துள்ள மாவை மெல்லிய தோசை போல ஊற்றவும். தோசை வெந்ததும் அதன் மேல் துருவிய சீஸ் சேர்த்து, தோசை பொன்னிறமாக மாறும் வரை வேக வைக்கவும். இறுதியாக அதன் மேல் கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்தால் சூப்பரான மசால் தோசை பீசா சாப்பிடத் தயார். 

மசாலா கலவையில் நீங்கள் விரும்பும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சீஸ் விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும். தோசை பீசாவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சட்னி, தக்காளி சாஸ் அல்லது மயோனைஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும். இதை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT