குதிரைவாலி பிடி கொழுக்கட்டை http://tamilonline.com/
உணவு / சமையல்

சத்தான சிறுதானிய ஸ்பெஷல் ரெசிபிஸ்!

கல்கி டெஸ்க்

குதிரைவாலி பிடி கொழுக்கட்டை

தேவை: குதிரைவாலி அரிசி – ½ கப், எண்ணெய் -1 டீஸ்பூன், கடுகு ¼ டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, பெருங்காயம் ஒரு சிட்டிகை, கேரட் துருவல் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - தேவைக்கு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும், கறிவேப்பில்லை, பச்சை மிளகாய், கேரட் துருவல் போட்டு வதக்கவும். ஒன்றரைக் கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர்கொதித்ததும், குதிரைவாலி அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும், தண்ணீர் வற்றியவுடன், அடுப்பை அணைத்து, ஆறியவுடன் சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் எட்டு முதல் பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

புதினா சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.

தினை சாலட்

தேவை: தினை அரிசி - 3 டீஸ்பூன், குடைமிளகாய் - சிறிய துண்டு, இஞ்சிச் சாறு - 1 டீஸ்பூன், கேரட் பொடியாக நறுக்கியது - 3 டீஸ்பூன், மாங்காய் - ஒரு சிறிய துண்டு, தேன் - ¼ டீஸ்பூன், மிளகுப் பொடி -
½  டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

தினை சாலட்

செய்முறை : தினை அரிசியை 30 நிமிடம் தண்ணீர் விட்டு ஊற வைத்துக்கொள்ளவும். கால் கப் தண்ணீர் விட்டு வேக. நறுக்கி வைத்த மாங்காய், கேரட், குடைமிளகாய் போட்டு, இஞ்சிச் சாறு, தேன் விட்டு, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

கூடுதல் மனத்திற்கு புதினா சேர்த்துக் கொள்ளலாம்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT