Crow 
வீடு / குடும்பம்

காக்கைகள் நமக்குக் காட்டும் சகுனங்கள் தெரியுமா?

பொ.பாலாஜிகணேஷ்

காகங்களுக்கு ஆன்மிகத்தில் ஒரு முக்கியப் பங்கு உண்டு. ஏனென்றால், காகங்களை முன்னோர்களாக பாவித்து சாப்பிடும் முன்பு காகத்திற்கு சாப்பாடு வைத்து, நாம் மன நிறைவோடு சாப்பிடுவோம். நம் வாழ்க்கையில் காக்கை அந்த அளவுக்கு ஒன்றிப்போய் உள்ளது.

காகங்களிடமிருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டு. முதலில் ஒற்றுமை. காகங்களுக்கு இருக்கும் ஒற்றுமை நம் மனித இனத்திற்கு இருந்தால் சண்டைகள் ஏது? சச்சரவுகள் ஏது? போட்டிகள் ஏது? பொறாமைகள் ஏது? நான் என்ற அகம்பாவம் ஏது? நானே பெரியவன் என்ற கர்வம் ஏது? காகங்கள் நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தாலும் நமக்கு வரும் நன்மை தீமைகளையும் அவை தனது செயல்பாடுகளால் மனிதனை எச்சரிக்கை செய்கிறது. அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

காகங்கள் காட்டும் சகுனங்கள்:

காகம் ஒருவருடைய வாகனம், குடை, காலணி அல்லது உடலின் மீது தனது சிறகால் தீண்டினால் அவர்களுக்கு அகால மரணம் ஏற்படும்.

தாங்கள் எங்காவது பயணம் செல்லும்பொழுது உங்கள் திசை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால் தங்களுடைய பயணத்தை தவிர்க்க வேண்டும்.

காகம் இன்னொரு காகத்திற்கு உணவு பகிரும் காட்சியினை பார்ப்பது மிகவும் இனிமையான செயலை குறிக்கின்ற சகுனமாகும்.

காகம்  பூக்கள், பழங்கள், ஏதாவது ரத்தினக் கற்களை தங்கள் வீட்டில் போட்டுவிட்டு சென்றால் அவர்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும்.

கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண் குழந்தை பிறக்கும்.

நெல் போன்ற தானிய வகைகள், ஈரமான மண், பூக்கள், காய்கனிகள் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்தந்தப் பொருளின் வகையில் லாபம் ஏற்படும்.

சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், சிவந்த பொருட்கள், சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் நேரிடும்.

காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் அரசாங்க ஆதரவு, நண்பர் சேர்க்கை, தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.

காகம் கரையும் திசை பலன்கள்:

காகம் தங்கள் எதிரில் வலப்புறமிருந்து இடதுபுறம் பறந்து சென்றால் லாபம் கிடைக்கும். அதுவே இடதுபுறம்  இருந்து, வலதுபுறம் பறந்து சென்றால் நஷ்டம் உண்டாகும் என்று பொருளாகும்.

அதேபோல். காகம் தங்கள் வீட்டில் இருந்து தென்கிழக்கு திசையை நோக்கி கத்துகின்றது என்றால் தங்களுக்கு தங்க லாபம் கிடைக்கப் போகிறது என்று அர்த்தமாகும். காகம் தென்மேற்கு திசை நோக்கி கரைகிறது என்றால் தயிர், எண்ணெய் மற்றும் உணவு அல்லது உணவு சம்பந்தமான பொருட்களில் லாபம் கிடைக்கப் போகின்றது என்ற சகுனமாகும்.

மேற்கு திசை நோக்கி காகம் கரைகிறது என்றால் மது, நெல், முத்து, பவளம் மற்றும் கடல்விளை பொருட்கள் ஆகியவற்றில் அதிக லாபம் கிடைக்கபோகின்றது என்ற அர்த்தமாகும்.

வடக்கு திசையை நோக்கி காகம் கரைகின்றது என்றால் ஆடைகள் அல்லது ஏதாவது ஒரு வாகனம் வாங்கப்போகின்றீர்கள் என்ற சகுனமாகும்.

இவற்றை உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள். உண்மை புரியும். காக்கைகள் கூட மனிதனுக்கு உதவியாக இருக்கிறது. ஆனால், நாம் அப்படி இருக்கிறோமா என்று சுய பரிசோதனை செய்து கொள்வோம்.

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

காலை 11 மணிக்கு முன்னதாக இந்த 7 விஷயங்களை செய்துவிட்டாலே வெற்றிதான்! 

சனி தோஷம் நீக்கும் புரட்டாசி சனி விரதம்!

SCROLL FOR NEXT