தோல்விகளை கண்டு துவளாமல் தொடர்ந்து முயற்சித்து வெற்றியை அடைய வேண்டும் என்பதை ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கையில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ளலாம்.
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் தலைசிறந்த அதிபர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் அமெரிக்காவின் உள்நாட்டுப் போரின் போது, உடைந்த நாட்டை மீண்டும் இணைத்தமைக்காகவும், கருப்பின மக்களின் அடிமை முறையை ஒழித்தமைக்காகவும், அமெரிக்க பொருளாதாரத்தை சீர்திருத்தியமைக்காகவும் மேலும் பல்வேறு காரணங்களுக்காகவும் இன்றும் அமெரிக்காவில் நினைவு கூரப்படுகிறார்.
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக வெற்றியடைந்தாலும், அவர் கடந்து வந்த பாதையில் பல்வேறு தோல்விகளை சந்தித்த பின்னரே, அது நிகழ்ந்தது. பல்வேறு தோல்விகளைக் கண்டு, துவண்டு விடாமல், தொடர்ந்து முயற்சித்த ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை , நம்பிக்கையை இழக்காமல், வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதற்கு, ஒரு முன் மாதிரியாக விளங்குகிறது.
1816 - லிங்கன் குடும்பம் அவர்கள் வசித்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டது. லிங்கன் சிறு வயதிலேயே உழைக்க நேர்ந்தது.
1818 - தாயின் மரணம்
1831 - வியாபாரத்தில் தோல்வி
1832 - சட்டசபை தேர்தலில் இழப்பு
1832 - வேலை இழப்பு
1833 - வியாபாரம் தொடங்க நண்பனிடம் கடன். வியாபாரம் வருடக்கடைசியில் திவால்.இந்தக் கடனை அடுத்த 17 வருடங்கள் லிங்கன் செலுத்தினார்.
1834 - சட்டசபை தேர்தல் வெற்றி
1835 - நிச்சயிக்கப்பட்ட காதலி மரணம். மன உளைச்சல்.
1836 - நரம்பு முறிவு பிரச்சனை. 6 மாதங்கள் படுக்கையில்.
1838 - சட்டப் பேரவை நடுவர் தேர்தலில் தோல்வி
1840 - நகராட்சி தேர்தலில் தோல்வி
1843 - காங்கிரஸ் மாமன்றத் தேர்தலில் தோல்வி
1846 - காங்கிரஸ் மாமன்றத் தேர்தலில் வெற்றி
1848 - காங்கிரஸ் மாமன்றத் தேர்தலில் தோல்வி
1849 - நில அலுவலர் பணிக்கு முயற்சி தோல்வி
1854 - செனட்டில் தோல்வி
1856 - துணை அதிபர் தேர்தலில் நிற்க முயற்சி தோல்வி
1858 - செனட்டில் தோல்வி
1860 - அமெரிக்க அதிபராக வெற்றி
1865 - அமெரிக்க உள்நாட்டுப் போரில் அமெரிக்க படைகளுக்கு வெற்றி
பெரும்பாலும் தோல்விகளையேக் கண்ட லிங்கன், துவண்டுவிடாமல், தொடர்ந்து முயற்சித்த காரணத்தினாலேயே, அமெரிக்க அதிபராகி சரித்திரம் படைத்தார்.
ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை, தோல்விகள் தற்காலிகமானவை. தொடர்ந்து முயற்சிக்கும் மனிதனுக்கு எதிர்காலம் சிவப்பு கம்பளம் விரிக்குமென்பதை நமக்கும் உணர்த்துகிறது.