மூச்சு உள்ளவரை பக்தியுடன் வாழ வேண்டும் என்பதை கடவுளிடம் வேண்டுங்கள்.
விழிப்பு நிலையில் மட்டுமல்ல உறக்க நிலையிலும் நம் மனப் போராட்டம் நீங்குவதில்லை.
தெரிந்தே தீமையை நாடுபவன் கண்ணிருந்தும் பார்வையை இழந்தவனே.
நல்ல விஷயங்களை கேட்க விரும்பாதவன் காது இருந்தும் கேட்கும் திறனற்றவனே.
விளக்குக்கு மற்றொரு விளக்கின் ஒளி தேவை இல்லை நீங்களும் பிறர் உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.
கருமித்தனத்தால் நற்குணங்கள் அழியும்.
வறுமையும் செல்வ செழிப்பும் விருந்தினரை போல வாழ்வில் வந்து செல்லும்.
தீய ஆசைகளை ஒழிக்க நினைத்தால் நல்லவர்களுடன் நட்பு பாராட்டுங்கள்.
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவனே உயர்ந்த மனிதன்.
உழைப்பால் கிடைத்த செல்வம் மதிப்பு மிக்கது.
ஸ்ரீ ராமானுஜர் அருளிய 10 தத்துவ போதனைகள்!
கோவிலில் உள்ள மூர்த்திகள் கல் சுதை ஐம்பொன்னால் ஆனது என்று எண்ணினால் கடவுள் தெரியமாட்டார்.
பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவி செய்யாதே.
கோவிலின் கோபுரத்தை பார்த்த உடனேயே கைகூப்பி வணங்கு.
பிறரை குறை கூறுபவரிடம் பழகாதே மீறி பழகினால் அவரது குணம் உனக்கு வந்து விடும்.
ஓம் நமோ நாராயணா இந்த மந்திரத்தை தினமும் சொல்லு.
கோவிலில் கொடுக்கும் பிரசாதங்களை வேண்டாம் என்று சொல்லாதே.
கடவுளின் திருவடிகளை பற்றிக் கொள் உனது பாவம் கரைந்து விடும்.
கோவில் பிரகாரத்தை மெதுவாக வலம் வரவும்.
புலனடக்கம் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
கடவுளை வணங்குவதை விட அவரது அடியார்களை வணங்குவது உயர்வானது.