3 Signs You’re On The Right Path. 
Motivation

நீங்கள் வாழ்க்கையில் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள் என்பதற்கான 3 அறிகுறிகள்! 

கிரி கணபதி

வாழ்க்கையில் அனைவருக்குமே நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பல விஷயங்களை முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் தாங்கள் செய்யும் செயல் அவர்களுக்கு சரியான வெற்றியை பெற்றுத்தருமா என்பதை முன்கூட்டியே கண்டுபிடிப்பது கடினம். இருப்பினும் சில அறிகுறிகளை வைத்து நீங்கள் வாழ்க்கையில் சரியான பாதையில் தான் செல்கிறீர்களா என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட 3 அறிகுறிகள்தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். 

  1. உங்களுக்காக யாரும் வரமாட்டார்கள் என்பதை உணர்வீர்கள்: நீங்கள் வாழ்க்கையில் சரியான திசையில் பயணிக்கிறீர்கள் என்றால், ஏதோ ஒரு தருணத்தில், உங்களுடைய வாழ்க்கையில் உங்களைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். உங்களுக்கான விஷயங்களை நீங்களே தான் செய்து கொள்ள வேண்டும் என்ற தெளிவு உங்களுக்கு பிறந்துவிடும். அன்று முதல் எதற்காகவும் யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க மாட்டீர்கள். உங்களது வாழ்க்கையில் அதிக கவனம் ஏற்பட்டு, முழு மூச்சுடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எல்லா செயல்களிலும் முதலில் உங்களைப் பற்றிய சிந்தனைகளை மேலோங்கி நிற்கும். அதன் பிறகு தான் பிறரைப் பற்றி கவலைப்படுவீர்கள். இந்த புரிதல் நீங்கள் வாழ்க்கையில் சரியான திசையில் பயணிக்கிறீர்கள் என்பதற்கான முதல் அறிகுறியாகும். 

  2. என்ன செய்வதென்று தெரியாத நிலை: நீங்கள் எப்போதாவது வாழ்க்கையில் என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் இருந்ததுண்டா? அதாவது இதற்குப் பிறகு வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்பதே தெரியாமல் இருக்கும். இது நீங்கள் பல விஷயங்களை முயற்சித்துப் பார்த்ததன் அறிகுறியாகும். பல விஷயங்களை முயற்சித்தவர்களால் மட்டுமே இத்தகைய உணர்வை அடைய முடியும். அதாவது இத்தகைய உணர்வு உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் முழுவதுமாக தொலைந்து போன நிலையாகும். நீங்கள் உங்கள் மீது அதிக கவனம் செலுத்தி உங்களுக்கான விஷயங்களை முயற்சித்தால் மட்டுமே இத்தகைய உணர்வு ஏற்படும். இந்த உணர்வு உங்களுக்கு ஏற்படவில்லை என்றால், ஏதோ ஒரு வேலையை செய்து வாழ்க்கையை கடத்திவிடலாம் என்ற மனநிலையில் இருப்பதாக அர்த்தம். இப்படி சிந்திப்பவர்களால் வாழ்க்கையில் எதையும் அடைய முடியாது. தைரியமாக புதிய விஷயங்களை முயற்சிப்பவர்களால் மட்டுமே நல்ல நிலையை அடைய முடியும். 

  3. நீங்கள் தனியாக இருப்பீர்கள்: வாழ்க்கையில் அதிக கவனத்துடன் இருப்பவர்கள் என்றுமே தனியாக தான் இருப்பார்கள். அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு முக்கியமானதாகத் தெரியும். அதைத் தாண்டி உறவுகளில் சிக்கிக்கொண்டு தங்களது நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். உறவுகளால் ஏற்படும் பாதகங்கள் பற்றி நன்கு உணர்ந்து, வாழ்க்கையில் சரியான விஷயங்களை தேர்ந்தெடுத்து பயணம் செய்து கொண்டிருப்பார்கள். இதன் காரணமாகவே அதிபயங்கர தனிமை விரும்பியாகவும், தனிமையை தேர்ந்தெடுத்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்களால் எல்லா விஷயங்களையும் தனியாகவே செய்ய முடியும். அதற்காக தங்களை தயார் படுத்திக் கொண்டிருப்பார்கள். இத்தகைய மனநிலை நிச்சயம் அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும். 

இந்த 3 அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால், நீங்கள் வாழ்க்கையில் சரியான பாதையில் செல்கிறீர்கள் என அர்த்தம். எனவே எதற்கும் துவண்டுவிடாமல், தொடர்ச்சியாக உங்களது முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள். வெற்றி உங்களுக்கு மிக அருகிலேயே உள்ளது. 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT