Know these 5 facts and you too are a winner. 
Motivation

இந்த 5 உண்மைகளைத் தெரிந்து கொண்டால் நீங்களும் வெற்றியாளரே! 

கிரி கணபதி

வாழ்க்கை என்பது எப்போதுமே சிக்கல் நிறைந்ததாகும். அதில் வெற்றி, தோல்வி என மாறி மாறி வந்து கொண்டேதான் இருக்கும். இந்த பயணத்தில் அதிகப்படியான வெற்றிகளை ஏற்படுத்திக் கொள்ள சில உண்மைகளை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இப்பதிவில் அத்தகைய 5 உண்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

திறமையை கடின உழைப்பு மிஞ்சிவிடும்: என்னதான் திறமையாக இருப்பது ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினாலும், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மட்டுமே நம்முடைய வெற்றிக்கு வழிவகுக்கும். வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், நீங்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நிலையான முயற்சி, தன்னம்பிக்கை மற்றும் தொடர் முன்னேற்றம் போன்றவை இலக்குகளை அடைவதற்கான திறவுகோலாக அமைகிறது. 

தோல்வி தவிர்க்க முடியாதது: தோல்வி என்பது நம்முடைய வெற்றியை நோக்கிய பயணத்தில் ஒருங்கிணைந்த பகுதியாகும். எனவே தோல்வி அடைந்தால் துவண்டுவிடாமல் இதை மிகச்சிறந்த அனுபவமாக ஏற்றுக் கொள்ளுங்கள். தோல்வி என்பது நாம் மேலும் முயற்சிக்க வேண்டும் என்பதை கற்பிக்கிறது, நம்முடைய குணத்தை புதிதாக உருவாக்குகிறது, மேலும் வாழ்க்கையில் புதிய விஷயங்களை முயற்சிக்கத்தூண்டும் விலை மதிக்க முடியாத பாடங்களை வழங்குகிறது. 

சுய ஒழுக்கத்திற்கு மீறியது எதுவுமில்லை: ஒருவர் வெற்றியடைவதற்கு ஒழுக்கம் மற்றும் சுயக் கட்டுப்பாடு தேவை. இது சவாலானதாக இருந்தாலும் சில தியாகங்கள் மற்றும் நல்ல முடிவுகளை எடுப்பது மூலமாக, இலக்குகளை நம்மால் அடைய முடியும். எனவே ஒழுக்கத்துடன் இருக்க நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள், முக்கிய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள், மற்றும் தடைகளைத் தாண்டி முயற்சிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 

Comfort Zone உங்கள் வளர்ச்சியை தடுக்கிறது: எந்த பிரச்சனையும் இல்லாமல் Comfort Zone-ல் இருப்பது உங்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தலாம். ஆனால் இது உங்களது தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்கிறது. உண்மையான முன்னேற்றம் என்பது, உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயங்களைத் தாண்டி பல புதிய விஷயங்களை முயற்சிப்பதிலேயே அடங்கியுள்ளது. எனவே அசௌகர்யமான சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டு ரிஸ்க் எடுக்கும்போது புதிய வாய்ப்புகள் கிடைப்பதால், உங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்தி வெற்றியின் எல்லைகளைக் கடந்து செல்லலாம். 

சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: வாழ்க்கை கணிக்க முடியாதது, மற்றும் மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலைகளைக் கொண்டது. திடீரென உண்டாகும் புதிய சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டு அதை மாற்றியமைக்கும் மனப்பக்குவம் வெற்றிக்கு முக்கியமானது. எல்லா சூழ்நிலைகளுக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை, உங்களை சிறப்பாக மாற்றிக்கொள்ள உதவுகிறது. மாற்றத்திற்கு ஏற்ப மாறுவதன் மூலம், நீங்கள் தடைகளைத் தாண்டி, புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, மாறிவரும் உலகிற்கு ஏற்ப உங்களை வளர்த்துக் கொள்ள முடியும். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT