Minimalism 
Motivation

Minimalism: மினிமலிசத்தைக் கடைப்பிடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? 

கிரி கணபதி

இப்போதெல்லாம் கையில் காசு வந்தால் போதும், தேவையில்லாத பொருட்களை வாங்கி வீட்டில் அடைத்து வைப்பது வாடிக்கையாக உள்ளது. இப்படி இருக்கும் உலகில் குறைந்த பொருட்களைப் பயன்படுத்தி வாழ்க்கையை நடத்தும் மினிமலிசக் கொள்கை ஒரு சிறப்பான வழிமுறையாகக் கருதப்படுகிறது. அதாவது முக்கியமானவற்றில் மட்டும் கவனம் செலுத்தி, தேவையில்லாததை ஒதுக்கி வைப்பதே மினிமலிசக் கோட்பாடாகும். இந்த பதிவில் மினிமலிசத்தை கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

குறைந்த மன அழுத்தம்: மினிமாலிசக் கொள்கையைக் கடைப்பிடிப்பதால் மன அழுத்தம் பெரிதளவில் குறையும். உங்களைச் சுற்றி இருக்கும் உடமைகள் குறைவாக இருந்தாலே, அவை சார்ந்த சிந்தனைகள் குறைவாக இருக்கும். இதனால் மன அழுத்தம் இன்றி நாம் நிம்மதியாக இருக்கலாம். 

அதிக கவனம்: மினிமலிசம் உங்களை முக்கியமானவற்றின் மீது கவனம் செலுத்த ஊக்குவிக்கிறது. கவனச் சிதறல்கள் மற்றும் தேவையற்ற விஷயங்களை நீக்குவது மூலம், உங்களது இலக்குகளை நோக்கி முழு கவனத்துடன் நீங்கள் நகர்ந்து செல்லலாம். இந்த அதிக கவனம் உங்களது உற்பத்தித்திறனை அதிகரிக்கும். 

குறைந்த செலவு: குறைந்த பொருட்களைக் கொண்டு வாழ்க்கையை வாழ்வது பெரும்பாலும் உங்களது நிதி சிக்கல்களைக் குறைக்கிறது. பொருட்களை வாங்க வேண்டும், சொத்துக்களை சேர்க்க வேண்டும் என்ற ஆசையை நீங்கள் விடுவதால், கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு நிதி சுதந்திரத்தை அடையலாம். 

மனத்தெளிவு: உங்கள் வீட்டில் குறைவான பொருட்களே இருக்கும் போது, அதிலிருந்து தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது எளிதாகிறது. இதன் மூலமாக நல்ல மனத்தெளிவு உங்களுக்கு கிடைக்கும். அதிகப்படியான பொருட்கள் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி, தவறானதை தேர்வு செய்ய வைக்கலாம். எனவே குறைந்த பொருட்களுடன் நீங்கள் வாழ்க்கையை வாழ்ந்தால், அனைத்திற்கும் தெளிவான முடிவை நீங்கள் எடுக்க முடியும். 

உறவுகள் மேம்படும்: மினிமலிசம் என்பது பொருட்கள், உடமைகள் போன்றவற்றைத் தாண்டி, உறவுகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்த ஊக்குவிக்கிறது. வாழ்க்கையை எளிமையாக வாழ்வதன் மூலம், மனிதர்களுடன் ஆழமான தொடர்புகளை நாம் வளர்த்துக் கொள்ளலாம். மேலும் நமக்கு நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபட்டு, நம்முடைய சுய பாதுகாப்பை அதிகரிக்க முடியும். 

எனவே, இந்தக் கொள்கையால் முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை தருவது மூலமாக, நம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்வும் சிறப்பாக அமைவதால் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வழிவகுக்கும். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT