kuhan... Image credit - tsaravanan.com
கோகுலம் / Gokulam

குகனின் தோற்றமும் பண்பும்!

கலைமதி சிவகுரு

குகன், ராமாயணத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக கூறப்படுகிறார். குகன் அயோத்தி மன்னன் தசரதன் காலத்தில் வாழ்ந்த ஒரு பழங்குடி தலைவன். அவருக்கு சிறந்த வேட்டையாடும் திறமை இருந்தது. ஆனால் அவர் உயர்ந்த பண்புகளையும், பக்தியையும் கொண்டிருந்தார். குகன் தன்னுடைய உண்மையான நட்பு மற்றும் பக்தியின் காரணமாக ராமனின் நெருக்கமான நண்பராகவும், அருமையான பக்தராகவும் அறியப்பட்டவர்

குகனின் தோற்றம்: குகன் சற்காசரின் மகனாக அறியப்படுகிறார். அவர் முருகனின் பக்தர் எனக் கூறப்படுகிறது. குகன் வேட்டுவர் குலத்தலைவன், அரையில் ஆடையும், காலில் தோல் செருப்பும் அணிந்தவர் இடுப்பை சுற்றி கட்டிய ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன். வீரக்கழலுடன் அணிகலன்கள் பல அணிந்தவர். கருத்த தலை மயிரை கொண்டவன். பாறை போன்ற பரந்த மார்பும், இந்திரனது வச்சிராயுதத்தைப் போன்ற இடையும், நீண்ட கைகளும், கொடிய பார்வையும், பித்தன் போல தொடர்பில்லாத பேச்சும், கருமையான நிறத்தை கொண்ட உடலும் கொண்டவன். புராணக் கதைகளின்படி குகன் மாமரம் அல்லது மரக்கிளையில் இருந்து தோன்றினான் எனக் கூறப்படுகிறது.

குகனின் பண்பு: கங்கையாற்றின் பக்கத்திலேயே அமைந்த சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் நகரத்தில் வாழ்ந்தவன். பொய் நீங்கிய மனத்தினன். இராமனிடம் அன்பு கொள்ளும் குணத்தினன். யானைக்கூட்டம் போன்ற  சுற்றத்தினரை பெற்றவன். ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். தூய கங்கை ஆற்றின் ஆழம் அளவு உயர்ந்தவன். வேட்டைக்கு துணையாக நாயினை உடையவன். துடி, ஊதுகொம்பு, துந்துபி முதலான இசைக்கருவிகள் நிறைந்த படையை உடையவன்.

குகன் கதையின் முக்கிய அம்சங்கள்

1 ராமனின் காட்டுப்பயணம்:  ராமன், சீதை மற்றும் லட்சுமணன் 14 வருட காட்டு வாழ்க்கைக்கு சென்றபோது அவர்கள் குகனின் அரண்மனை பகுதிக்கு வந்தார்கள். குகன் ராமனின் வருகையால் மிகவும் மகிழ்ந்தான். அப்போது ராமனுக்கும், குகனுக்கும் நடந்த உரையாடல், அவரது மரியாதையையும், அன்பையும் வெளிப்படுத்துகிறது. ராமன் குகனை தனது நெருங்கிய நண்பராகவும் கருதினார்.

குகனின் அன்பும், தியாகமும்: குகன் ராமனுக்கு படகு கொண்டு வந்தது மிக முக்கியமான நிகழ்வு. அயோத்தியில் அரசராக இருந்த ராமன், காட்டுக்குள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த போது குகன் தனது இயல்பான பாவனையுடன்  அவரது சேவைக்காக முன்வந்தார். குகன் ராமருக்கு உண்மையான நண்பராகவும், நம்பிக்கையான சேவகராகவும் இருந்தார். ராமன், குகனின் நற் செயல்களை பாராட்டி அவரிடம் ஒரு ஆழமான நட்பை வளர்த்தார்.

3 குகனின் தாழ்மையான சேவை:  குகன், தனது நிலைமையைப் பற்றி யோசிக்காமல் ராமருக்கு முழு அன்பையும், சேவையையும் வழங்கினார். அவருடைய உண்மையான அன்புக்கும், சேவைக்கும் எதுவும் எதிர்பார்ப்பு இல்லாமல் ராமனின் நண்பனாக தன்னைத்தானே அற்பணித்தார்.

குகன் பற்றிய கருத்துகள்:  குகனின் கதை அன்பு, நட்பு மற்றும் பக்தியின் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது. தன்மானம் அல்லது சமூக நிலையைப் பொருட்படுத்தாமல் ஒருவர் பகவானுக்கு அல்லது நண்பனுக்கு அன்புடன் சேவை செய்தால், அதற்கு  திருப்பணியாக அந்த அன்பும், மரியாதையும் கிடைக்கும் என்பதைக் கற்றுக் கொடுக்கிறது.

50 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும் சர்கோபீனியா பிரச்னையை சமாளிப்பது எப்படி?

அது என்னது One Pot ரசம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Sanitary Pad Vs Tampon: எதைப் பயன்படுத்துவது ஆரோக்கியம் தெரியுமா?

உள்ளத்து உணர்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் உதடு மொழி பற்றி தெரியுமா?

சிறுகதை: அம்மாவும் தம்பியும்!

SCROLL FOR NEXT