மங்கையர் மலர்

ஆண்டு சம்பளம் கோடிக்கணக்கில்! யாருக்கு?

மும்பை மீனலதா

பாலிவுட்டின் பிரபல ஸ்டார்கள் என்றால் பாதுகாப்பு அதிகம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு பிரபலங்களும், தங்களுக்கென பிரத்தியேக பாதுகாவலர்களை அதிக சம்பளம் கொடுத்து நியமித்து கொண்டுள்ளனர். யார் – யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாமா?

அமீர்கான் – வருடத்திற்கு ரூ 2 கோடி தனது பாதுகாவலருக்குக் கொடுக்கிறார்.

அக் ஷய் குமாரிடம் பாதுகாவலராக இருக்கும் ஷ்ரசே தேலே ஆண்டுக்கு 1.2 கோடி சம்பளம் பெறுகிறார்.

தீபிகா படுகோனிடம் பல ஆண்டுகளாக உதவியாளர் கம் பாதுகாவலராக இருக்கும் ஜலால் வருடத்திற்கு ரூ. 80 லட்சம்.

அமிதாப்பச்சனின் பாதுகாவலர் ஜிதேந்திர ஷிண்டேயின் வருடத்திற்கான சம்பளம் ரூ. 1.5 கோடி.

ஷாருக்கான் மெய்க்காப்பாளர் ரவிசிங்கின் ஆண்டு சம்பளம் ரூ. 2.5 கோடி.

சல்மான்கானிடம் அவரது முதல் படத்திலிருந்து பாதுகாவலராக இருக்கும் ஷேராவிற்கு ஆண்டுக்கு ரூ 2 கோடி சம்பளம். இவர் சல்மான்கானின் குடும்பத்தில் ஒருவராகவே கருதப்படுகிறார்.

நடிகர் அஜய் தேவ்கனின் பாடிகார்ட் மாதம்தோறும் ரூ 13 லட்சமும், நடிகை அனுஷ்கா சர்மாவின் பாதுகாவலர் ஜெய்சிங் மாதம் தோறும் ரூ 9 ட்சமும் சம்பளமாக பெறுகின்றனர்.

(மயக்கமாக வருகிறதா....?)

வெறித்தனமான காதல்! யாருடன் யாருக்கு?

“ஒருவர் மீது காதல் வர வேண்டுமெனில் அவரிடம் ஏதாவது ஒன்றை உணர வேண்டியது மிகவும் அசவியம். அது என்ன என்பது தனிப்பட்ட விஷயம். நான் எதிர்பார்த்து காத்திருந்த நபர் விஜய் வர்மாதான் என்பதை எனக்கு நன்கு உணர முடிந்தது” என பான் இந்தியா நடிகையாக மாறியுள்ள முன்னணி நடிகை தமன்னா, தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் இதை பப்ளிசிட்டி ஸ்டண்ட் எனக் கூற, இதையறிந்த விஜய் வர்மா உருக்கத்துடன் அளித்த பேட்டியில், “நான் தமன்னாவை மகிழ்ச்சியாகவும், வெறித்தனமாகவும் காதலிக்கிறேன்.  என் வாழ்க்கையில் வில்லன் அத்தியாயம் முடிந்து புதிய காதல் அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. எல்லா விஷயங்களையும் கூறுவதற்கு காலமும் இடமும் இருக்கிறது.

அப்போது தமன்னாவுடனான காதல் குறித்து விரிவாகப் பேசுவேன். தற்சமயம் பேச வெட்கமாக இருக்கிற தென்பதைப் புரிந்துகொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.

(அ்பபடியென்றால் இது பக்கா காதல்)

பரபரப்பு நியூஸ் அளிக்கும் ராக்கிசாவந்த்!

மும்பை மாநகரில் வசித்து வரும் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பரபரப்பு வீடியோக்கள் மற்றும் தனது க்ளாமர் புகைப்படங்களைப் போட்டு ரசிகர்களை மகிழ்விப்பார்.

சமீபத்தில் தன்னுடைய காரில் சென்றவர் குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்தச் சொல்லி ஜாலியாக நடந்து சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கையில், டிரைவர் அங்கில்லை. இதன் காரணம் ஆட்டோவில் பயணம் செய்தவர், இச்சம்பவம் குறித்து புலம்பியது “உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எனது கார் டிரைவர் பப்பு யாதவ், கார் சாவி, பணம், செல்போன் ஆகியவைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். அவரது சகோதரி என் வீட்டில்தான் வேலை செய்கிறாள். ஏழையென்று நினைத்து டிரைவர் வேலைக்குச் சேர்த்துக்கொண்டேன். ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டான். அவனை எங்கேயாவது பார்த்தால், செருப்பால் அடிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

சந்திராயன் 3 ஏவுகணை ஏவப்பட்ட நாள் முதல் என் வாழ்வில் கிரகணம் பிடித்துவிட்டது. டிரைவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறேன்” என்பதாகும். தற்சமயம் தனது குழந்தைக்குத் தந்தையாக, நல்ல நபரைத் தேடுவதாக அறிவித்துள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

ஒயிட் ஆனியனில் இருக்கும் ஒப்பற்ற நன்மைகள்!

SCROLL FOR NEXT